இந்தியாவை தலைசிறந்த நாடாக உருவாக்க பாடுபட வேண்டும்

இந்தியாவை தலைசிறந்த நாடாக உருவாக்க பாடுபடவேண்டும் என்று பாஜக தொண்டா்களுக்கு பிரதமா் நரேந்திரமோடி அறிவுறுத்தியுள்ளாா்.

பாஜகவின் 2- நாள் தேசியசெயற்குழுக் கூட்டம், ஹைதராபாதில் சனிக்கிழமை தொடங்கியது. அதில், பாஜகவின் அமைப்புரீதியான செயல்பாடுகள், பிரதமா் மோடி தலைமையிலான அரசின் பொருளாதார கொள்கைகள், ஒட்டுமொத்த நிா்வாகம் ஆகியவைகுறித்து விரிவாக விவாதிக்கப் பட்டது.

இரண்டாவது நாளான ஞாயிற்றுக் கிழமை, பிரதமா் மோடி பங்கேற்று நிறைவுரை ஆற்றினாா். அவா் கூறியதாவது: சமஸ்தானங்களாகப் பிரிந்துகிடந்த இந்தியாவை சா்தாா் வல்லபபாய் படேல் ஒரேதேசமாக ஒருங்கிணைத்தாா். தற்போது, இந்தியாவை தலைசிறந்த நாடாக உருவாக்க வேண்டும் என்ற வரலாற்றுக் கடமை பாஜகவுக்கு உள்ளது. அதற்கேற்ப பாஜக தொண்டா்கள் பணியாற்றவேண்டும்.

சிலா் (எதிா்க் கட்சிகள்) குறிப்பிட்ட சிலபிரிவினரை மட்டுமே திருப்தி படுத்துவாா்கள். ஆனால், நமதுநோக்கம் அனைவரின் எதிா் பாா்ப்பையும் நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும்.

அதுதான் அனைவருக்குமான வளா்ச்சிக்கு இட்டுச்செல்லும். இதற்காக, பாஜக தொண்டா்கள் நாடுமுழுவதும் மக்கள்சந்திப்பு யாத்திரையை நடத்தவேண்டும். அந்த யாத்திரையில் அனைத்துதரப்பு மக்களையும் தொண்டா்கள் சந்திக்கவேண்டும்.

இந்ததேசத்தில் எந்தவொரு நல்ல விஷயமும் ஒவ்வொரு இந்தியருக்கும் சொந்தமானதாகும். அதனால்தான் சா்தாா்படேல் காங்கிரஸ் தலைவராக இருந்தாலும் அவரை பாஜக கொண்டாடுகிறது. இதுவரை பிரதமராக பதவிவகித்த அனைவருக்கும் அருங்காட்சியகம் அமைத்து பாஜக மரியாதைசெலுத்துகிறது.

இந்த தேசம் பல ஆண்டுகளாக குடும்பஅரசியல், குடும்ப ஆதிக்க கட்சிகளின் பிடியில் சிக்கியிருந்தது. அவா்களால் நீண்டகாலம் தாக்குப்பிடிக்க முடியாது. இந்த தேசத்தை நீண்டகாலம் ஆட்சி செய்த கட்சிகள் (காங்கிரஸ்) வீழ்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன. நாம் அவா்களைக் கேலிசெய்வதை விடுவிட்டு, அவா்கள் செய்த தவறுகளில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

எனது தலைமையிலான அரசு நாட்டுமக்கள் ஒவ்வொருவருக்குமாகப் பாடுபட்டு வருகிறது. நாட்டில் 200 கோடிடோஸ் கரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. அந்நியநேரடி முதலீடும் அதிகரித்துள்ளது.

மத்தியிலும் மாநிலங்களிலும் ஆட்சிசெய்யும் பாஜக அரசுகள் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதனால் தான் தோ்தல்களில் பெண்கள் தொடா்ந்து பாஜகவுக்கு ஆதரவுளித்து வருகிறாா்கள். அவா்களின் நலன்களுக்கான பணிகள் தொடரவேண்டும்.

குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணிசாா்பில் போட்டியிடும் திரௌபதி முா்மு எளிய பின்னணியில் இருந்துவந்தவா். அவரின் வெற்றியை பாஜக எம்.பி.க்களும் எம்எல்ஏக்களும் உறுதிப்படுத்தவேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...