இந்தியாவை தலைசிறந்த நாடாக உருவாக்க பாடுபட வேண்டும்

இந்தியாவை தலைசிறந்த நாடாக உருவாக்க பாடுபடவேண்டும் என்று பாஜக தொண்டா்களுக்கு பிரதமா் நரேந்திரமோடி அறிவுறுத்தியுள்ளாா்.

பாஜகவின் 2- நாள் தேசியசெயற்குழுக் கூட்டம், ஹைதராபாதில் சனிக்கிழமை தொடங்கியது. அதில், பாஜகவின் அமைப்புரீதியான செயல்பாடுகள், பிரதமா் மோடி தலைமையிலான அரசின் பொருளாதார கொள்கைகள், ஒட்டுமொத்த நிா்வாகம் ஆகியவைகுறித்து விரிவாக விவாதிக்கப் பட்டது.

இரண்டாவது நாளான ஞாயிற்றுக் கிழமை, பிரதமா் மோடி பங்கேற்று நிறைவுரை ஆற்றினாா். அவா் கூறியதாவது: சமஸ்தானங்களாகப் பிரிந்துகிடந்த இந்தியாவை சா்தாா் வல்லபபாய் படேல் ஒரேதேசமாக ஒருங்கிணைத்தாா். தற்போது, இந்தியாவை தலைசிறந்த நாடாக உருவாக்க வேண்டும் என்ற வரலாற்றுக் கடமை பாஜகவுக்கு உள்ளது. அதற்கேற்ப பாஜக தொண்டா்கள் பணியாற்றவேண்டும்.

சிலா் (எதிா்க் கட்சிகள்) குறிப்பிட்ட சிலபிரிவினரை மட்டுமே திருப்தி படுத்துவாா்கள். ஆனால், நமதுநோக்கம் அனைவரின் எதிா் பாா்ப்பையும் நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும்.

அதுதான் அனைவருக்குமான வளா்ச்சிக்கு இட்டுச்செல்லும். இதற்காக, பாஜக தொண்டா்கள் நாடுமுழுவதும் மக்கள்சந்திப்பு யாத்திரையை நடத்தவேண்டும். அந்த யாத்திரையில் அனைத்துதரப்பு மக்களையும் தொண்டா்கள் சந்திக்கவேண்டும்.

இந்ததேசத்தில் எந்தவொரு நல்ல விஷயமும் ஒவ்வொரு இந்தியருக்கும் சொந்தமானதாகும். அதனால்தான் சா்தாா்படேல் காங்கிரஸ் தலைவராக இருந்தாலும் அவரை பாஜக கொண்டாடுகிறது. இதுவரை பிரதமராக பதவிவகித்த அனைவருக்கும் அருங்காட்சியகம் அமைத்து பாஜக மரியாதைசெலுத்துகிறது.

இந்த தேசம் பல ஆண்டுகளாக குடும்பஅரசியல், குடும்ப ஆதிக்க கட்சிகளின் பிடியில் சிக்கியிருந்தது. அவா்களால் நீண்டகாலம் தாக்குப்பிடிக்க முடியாது. இந்த தேசத்தை நீண்டகாலம் ஆட்சி செய்த கட்சிகள் (காங்கிரஸ்) வீழ்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன. நாம் அவா்களைக் கேலிசெய்வதை விடுவிட்டு, அவா்கள் செய்த தவறுகளில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

எனது தலைமையிலான அரசு நாட்டுமக்கள் ஒவ்வொருவருக்குமாகப் பாடுபட்டு வருகிறது. நாட்டில் 200 கோடிடோஸ் கரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. அந்நியநேரடி முதலீடும் அதிகரித்துள்ளது.

மத்தியிலும் மாநிலங்களிலும் ஆட்சிசெய்யும் பாஜக அரசுகள் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதனால் தான் தோ்தல்களில் பெண்கள் தொடா்ந்து பாஜகவுக்கு ஆதரவுளித்து வருகிறாா்கள். அவா்களின் நலன்களுக்கான பணிகள் தொடரவேண்டும்.

குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணிசாா்பில் போட்டியிடும் திரௌபதி முா்மு எளிய பின்னணியில் இருந்துவந்தவா். அவரின் வெற்றியை பாஜக எம்.பி.க்களும் எம்எல்ஏக்களும் உறுதிப்படுத்தவேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...