காஷ்மீர் பாஜக நிர்வாகி சுட்டு கொலை

காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்டதலைவர் மற்றும் அவரது தந்தை, சகோதரர் ஆகியோர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்ல ப்பட்டதாக அந்த யூனியன் பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.

தங்களது வீட்டுக்கு அருகில் நடத்திவரும் சொந்த கடை ஒன்றில் இவர்கள் மூவரும் நேற்று மாலை இருந்தபோது இந்ததாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாஜக தலைவர் வாசிம் அஹ்மத் பாரியை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் கண்மூடித் தனமாக சுட்டதாக காஷ்மீர் பிராந்திய காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் வாசிம் பாரி, அவரது தந்தை பஷீர்அகமது, சகோதரர் உமர் பஷீர் ஆகியோர் காயமடைந்ததாகவும், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட மூவரும் துரதிருஷ்வடமாக இறந்துவிட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காஷ்மீரில் நடந்த இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திரமோதி விசாரித்ததாகவும், குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததாகவும் பிரதமர் அலுவலக அதிகாரி ஜிதேந்திர சிங் நேற்றிரவு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

 

காஷ்மீரில் தேசிய வாதத்தின் குரலை நசுக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியே இந்ததாக்குதல் என்று பாஜக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய பாஜகவின் ஜம்மு, காஷ்மீருக்கான செய்திதொடர்பாளரான அனில் குப்தா, “இதுபோன்ற தாக்குதல்கள் காஷ்மீரில் எங்களது குரலை மட்டுப் படுத்தாது. கடந்த மூன்றாண்டுகளாக வாசிம் பாஜகவின் மாவட்ட தலைவராக இருந்துவந்தார். மிகவும் சுறுசுறுப்பான தொண்டரான அவர், சமூகசேவைகளையும் செய்து வந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்தபோது நாங்கள் அதிர்ந்து விட்டோம். தங்களுக்கு சொந்தமான கடையில் அவர்கள் இருந்தபோது, அங்குவந்த தீவிரவாதிகள் அவர்களை நோக்கி சுடத் தொடங்கினர்” என்று அவர் தெரிவித்தார்.

“இது காஷ்மீரில் தேசியவாதகுரலை அடக்குவதற்கான தெளிவான செய்தி. ஒரு மாதத்திற்கு முன்புதான், ஒருபயங்கரவாத அமைப்பு பாஜக தொண்டர்களுக்கு மிரட்டல் விடுத்திருந்தது. இதுபோன்ற செயல்களை நாங்கள் கண்டிக்கிறோம்” என்று அவர் மேலும் கூறினார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, “இது கட்சிக்கு மிகபெரிய இழப்பு. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்; முழு கட்சியும் துயரமடைந்த குடும்பத்துடன் நிற்கிறது. அவர்களின் தியாகம்வீணாகாது என்று நான் உறுதியளிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மற்ற அரசியல் கட்சிகளும் இந்தசம்பவத்தை ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல் என்று கண்டித்துள்ளன.

“பாஜக தொண்டர் மற்றும் அவரது தந்தைமீது நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். துயரத்தில் வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல்வாதிகள் மீது நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்துவருவது வருத்தமளிக்கிறது” என்று தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், உயிரிழந்த பாஜக தலைவரின் எட்டுபாதுகாப்பு காவலர்கள் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் வெளியிட்டுள்ள ஒருஅறிக்கையில், தாக்குதல் நடந்த நேரத்தில் இறந்தவர்களுடன் பாதுகாப்பு காவலர்கள் யாரும்இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தாக்குதல் தொடுத்தவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...