காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் தலைவர்கள் கண்டனம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 28க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. இது ஒரு கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற செயலாகும். இதுகண்டனத்திற்கு .ரியது. சுற்றுலா பயணிகளை தாக்குவது என்பது கொடூரமானது மற்றும் மன்னிக்க முடியாதது. உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்.

பிரதமர் மோடி

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். இந்த கொடூர செயல்களுக்கு பின்னால் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். அவர்கள் தப்பிக்க முடியாது. இந்த மோசமான திட்டம் வெற்றி பெறாது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற தீர்மானம் அசைக்க முடியாதது. அது இன்னும் வலிமையாகி உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

கொடூரமான பயங்கரவாத சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தப்ப விட மாட்டோம். கடுமையாக தண்டிப்போம்.

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

பஹல்காமில் நடந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு கண்டனம். பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக எனது எண்ணம் உள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.

லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்

காஷ்மீரில் சுற்றுலா பயணி உயிரிழக்கவும் காயமடைந்ததற்கு காரணமான தாக்குதல் சம்பவம் கண்டனத்திற்கு உரியது. மனம் வேதனை அளிக்கிறது. இறந்தவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் .பயங்கரவாதத்திற்கு எதிராக ஒட்டு மொத்த நாடும் ஒன்றுபட்டு உள்ளது. காஷ்மீரில் அமைதியான சூழ்நிலை நிலவுகிறது எனக் கூறுவதை விட்டுவிட்டு, மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதன் மூலம் இந்த கொடூரமான சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்கும். அப்பாவி இந்தியர்கள் உயிர் இழக்க மாட்டார்கள்.

காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹாபயங்கரவாதிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்த நாடும் கோபத்தில் உள்ளது. வீரர்களின் ரத்தம் கொதிக்கிறது. இந்த கொடூரமான செயலுக்கு காரணமானவர்கள் கடுமையான விலை கொடுப்பார்கள் எனு உறுதி அளிக்கிறேன்.

காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஇந்த சம்பவம் அதர்ச்சி அளிக்கிறது. சம்பவத்திற்கு காரணமானவர்கள் விலங்குகள் ஆகவும், மனத நேயத்திற்கு எதிராகவும் இருப்பவர்கள். கண்டனம் தெரிவிக்க வார்த்தைகள் போதாது. உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

தேஜஸ்வி சூர்யா பா.ஜ., எம்.பி கூறியதாவது:

இன்று அதிகாலை பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட ஸ்ரீ மஞ்சுநாத்தின் மனைவி திருமதி பல்லவியுடன் நான் பேசினேன். அவர்கள் கர்நாடகாவின் ஷிமோகாவைச் சேர்ந்தவர்கள்.

காயமடைந்த மற்ற குடும்ப உறுப்பினர்களுடனும் பேசியுள்ளோம். உள்ளூர் நிர்வாகம் அவர்களைத் தொடர்பு கொண்டு அவர்களின் தங்குமிடம் மற்றும் பாதுகாப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

கர்நாடக தலைமைச் செயலாளருடனும் நான் பேசினேன். அனைவரும் பாதுகாப்பாக வீடு திரும்புவதை உறுதிசெய்ய நாங்கள் ஒருங்கிணைப்போம்.

ஸ்டாலின், இ.பி.எஸ்., விஜய் கண்டனம்

காஷ்மீரில் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., த.வெ.க., தலைவர் விஜய் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பஹல்காம் தாக்குதலால் பாதிக்கப� ...

பஹல்காம் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் பிரதமருக்கு நன்றி ஆபரேஷன் சிந்தூரால் எங்களுக்கு பெருமை, பிரதமர் மோடிக்கு நாங்கள் ...

இந்திய ராணுவ தாக்குதலுக்கு மத்� ...

இந்திய ராணுவ தாக்குதலுக்கு மத்திய அமைச்சர்கள், முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்து பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 ...

நாட்டிற்கு பெருமை சேர்க்கும் த� ...

நாட்டிற்கு பெருமை சேர்க்கும் தருணம் – பிரதமர் மோடி பாராட்டு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில், ...

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டிய � ...

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டிய இந்தியா அன்று உரி, புல்வாமா, இன்று பஹல்காம் என பாகிஸ்தானின் ...

எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச� ...

எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் போருக்கு செல்வேன் – நயினார் நாகேந்திரன் தனக்கு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக போருக்குச் செல்வேன் என ...

‛‛ஆபரேஷன் சிந்துார்”-ல் பங்கே ...

‛‛ஆபரேஷன் சிந்துார்”-ல் பங்கேற்ற அச்சம் அறியா இந்திய சிங்கப் பெண்கள்!! பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ‛ஆபரேஷன் சிந்துார்' ...

மருத்துவ செய்திகள்

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...