கருப்பர் கூட்டம் youtube சேனலை தடைசெய்யக்கோரி பாஜக புகார்

கருப்பர் கூட்டம்” என்ற youtube சேனலை தடைசெய்யக்கோரி, பாஜக சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க பட்டுள்ளது. அந்த புகாரில், இந்துக்கள் வழிபடும் கடவுளை ஆபாசமாக பேசி,வீடியோ வெளியிட்டுள்ளதாக கூறபட்டுள்ளது. அதனால், அந்த யூடியூப் சேனலை தடை செய்ய வேண்டும் என்றும், சம்மந்தப் பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப் பட்டுள்ளது. இதனிடையே, சென்னையில்,அண்ணாசாலை மற்றும் பூந்தமல்லி சாலையில் உள்ள பெரியார் சிலைகளுக்கு, மாநகர காவல்துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கருப்பர்கூட்டம் என்ற பெயரிலான யூடியூப் சேனல் நாத்திக கருத்துக்களை பரப்பிவருகிறது. இந்த சேனலில் சமீபத்தில், ‘ஆபாசபுராணம் சீரியஸ்- கந்த சஷ்டி கவசம்- கதாகாலட்சேபம்’ என்ற தலைப்பில் ஒருவீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் கந்தசஷ்டி கவசம்பாடல், ஆபாசமாக விமர்சனம் செய்யபட்டுள்ளது. கந்த சஷ்டி கவசம் அல்லது ஸ்கந்த சஷ்டி கவசம் என்பது, இறைவன் சிவ பெருமானின் மகனான கடவுள் முருகர் தொடர்பான பாடல் ஆகும். 19ம் நூற்றாண்டில் கந்த சஷ்டிகவசம் இயற்றப்பட்டது. கடவுளைப் புகழ்ந்துபாடி அவரது பேரருளை பெறுவதை நோக்கமாகக் கொண்டது இந்தபாடல்.

தீய சக்திகளிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, உலகின் பல்வேறு நாடுகளிலும் வசிக்கக்கூடிய தமிழ் பேசக்கூடியவர்கள் வீடுகளில் தினமும் ஒலிக்கக் கூடிய பாடல் கந்த சஷ்டி கவசம். ஆனால், சமீபத்தில், கருப்பர்கூட்டம் என்ற இந்த யூடியூப் சேனல், ‘ஆபாசபுராணம் சீரியஸ்- கந்த சஷ்டி கவசம்- கதாகாலட்சேபம் என்ற  தலைப்பின் கீழ், கந்தசஷ்டி கவசம் பற்றி மோசமாக விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளது. இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இந்த வீடியோவில் பேசக்கூடிய நபர் கருத்துக்களை தெரிவிக்கிறார். இந்துக் கடவுள்களின் புனிதத்தை அவமதிக்கும் நோக்கத்தில் பாலியல் சார்ந்த வன்ம பேச்சுக்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

யூடியூப் சேனலில் இவ்வாறு பேசியவர் ஜாமினில் வெளிவர முடியாத குற்றத்தின் கீழ் கைதுசெய்ய தகுதி உடையவராகிறார். இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 19 (1) A பேச்சுரிமையை குடிமக்களுக்கு வழங்கி இருந்தாலும்கூட அது கட்டுப் படுத்தப்பட்ட உரிமைதான். இந்த தண்டனைச்சட்டம், பிரிவு 295a கீழ் யார் ஒருவரும் தங்களுடைய கருத்து சுதந்திரம் அல்லது பேச்சுரிமையை பிற மதத்தினரின் உணர்வுகளை புண் படுத்த பயன்படுத்தக் கூடாது.

அவ்வாறு செய்தால் அது தண்டனைக் குரிய குற்றம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கருப்பர் கூட்டம் யூடியூப்சேனல் வெவ்வேறு மதத்தினர் இடையே பகைமையை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...