கருப்பர் கூட்டம் youtube சேனலை தடைசெய்யக்கோரி பாஜக புகார்

கருப்பர் கூட்டம்” என்ற youtube சேனலை தடைசெய்யக்கோரி, பாஜக சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க பட்டுள்ளது. அந்த புகாரில், இந்துக்கள் வழிபடும் கடவுளை ஆபாசமாக பேசி,வீடியோ வெளியிட்டுள்ளதாக கூறபட்டுள்ளது. அதனால், அந்த யூடியூப் சேனலை தடை செய்ய வேண்டும் என்றும், சம்மந்தப் பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப் பட்டுள்ளது. இதனிடையே, சென்னையில்,அண்ணாசாலை மற்றும் பூந்தமல்லி சாலையில் உள்ள பெரியார் சிலைகளுக்கு, மாநகர காவல்துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கருப்பர்கூட்டம் என்ற பெயரிலான யூடியூப் சேனல் நாத்திக கருத்துக்களை பரப்பிவருகிறது. இந்த சேனலில் சமீபத்தில், ‘ஆபாசபுராணம் சீரியஸ்- கந்த சஷ்டி கவசம்- கதாகாலட்சேபம்’ என்ற தலைப்பில் ஒருவீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் கந்தசஷ்டி கவசம்பாடல், ஆபாசமாக விமர்சனம் செய்யபட்டுள்ளது. கந்த சஷ்டி கவசம் அல்லது ஸ்கந்த சஷ்டி கவசம் என்பது, இறைவன் சிவ பெருமானின் மகனான கடவுள் முருகர் தொடர்பான பாடல் ஆகும். 19ம் நூற்றாண்டில் கந்த சஷ்டிகவசம் இயற்றப்பட்டது. கடவுளைப் புகழ்ந்துபாடி அவரது பேரருளை பெறுவதை நோக்கமாகக் கொண்டது இந்தபாடல்.

தீய சக்திகளிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, உலகின் பல்வேறு நாடுகளிலும் வசிக்கக்கூடிய தமிழ் பேசக்கூடியவர்கள் வீடுகளில் தினமும் ஒலிக்கக் கூடிய பாடல் கந்த சஷ்டி கவசம். ஆனால், சமீபத்தில், கருப்பர்கூட்டம் என்ற இந்த யூடியூப் சேனல், ‘ஆபாசபுராணம் சீரியஸ்- கந்த சஷ்டி கவசம்- கதாகாலட்சேபம் என்ற  தலைப்பின் கீழ், கந்தசஷ்டி கவசம் பற்றி மோசமாக விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளது. இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இந்த வீடியோவில் பேசக்கூடிய நபர் கருத்துக்களை தெரிவிக்கிறார். இந்துக் கடவுள்களின் புனிதத்தை அவமதிக்கும் நோக்கத்தில் பாலியல் சார்ந்த வன்ம பேச்சுக்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

யூடியூப் சேனலில் இவ்வாறு பேசியவர் ஜாமினில் வெளிவர முடியாத குற்றத்தின் கீழ் கைதுசெய்ய தகுதி உடையவராகிறார். இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 19 (1) A பேச்சுரிமையை குடிமக்களுக்கு வழங்கி இருந்தாலும்கூட அது கட்டுப் படுத்தப்பட்ட உரிமைதான். இந்த தண்டனைச்சட்டம், பிரிவு 295a கீழ் யார் ஒருவரும் தங்களுடைய கருத்து சுதந்திரம் அல்லது பேச்சுரிமையை பிற மதத்தினரின் உணர்வுகளை புண் படுத்த பயன்படுத்தக் கூடாது.

அவ்வாறு செய்தால் அது தண்டனைக் குரிய குற்றம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கருப்பர் கூட்டம் யூடியூப்சேனல் வெவ்வேறு மதத்தினர் இடையே பகைமையை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.