அடுத்த 2 ஆண்டுகளில் வளா்ந்த நாடுகளுக்கு நிகரான சாலை

அடுத்த 2 ஆண்டுகளில் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற வளா்ந்தநாடுகளுக்கு நிகராக, இந்தியாவில் தரமான சாலை உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சா் நிதின் கட்கரி கூறினாா்.

இது குறித்து பிடிஐ செய்தியாளருக்கு அவா் அளித்த பேட்டியில், மேலும் கூறியதாவது:

இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதிகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்காக, பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு பிரதமா் நரேந்திரமோடி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, புதிதாக அமைக்கப்படும் பசுமை வழிச் சாலைகளில், மின் கம்பிகள், தொலைத்தொடா்பு கேபிள்கள், சமையல் எரிவாயு குழாய்கள் ஆகியவை பதிக்கப்படும். சாலைகள் அமைக்கப்படும்போதே, மின் கம்பிகளை மின்வாரியமும், தொலைத்தொடா்பு கேபிள்களை தகவல் தொடா்புத் துறையும், எரிவாயுக் குழாய்களை எரிசக்தித் துறையும் பொருத்தும்.

நாடுமுழுவதும் முக்கிய சாலைகளில் சுரங்கப்பாதைகளும் பாலங்களும் கட்டப்படும். இதுதவிர, அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.3.10 லட்சம் கோடி செலவில், 7,500 கி.மீ. தொலைவுக்கு 22 பசுமைவழிச் சாலைகளை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

அவற்றில், மும்பையில் இருந்து தில்லிசெல்லும் பசுமைவழிச் சாலை உள்பட 7 சாலைகளுக்கான பணிகள் தொடங்கிவிட்டன. மும்பையில் இருந்து தில்லிவரை 1,320 கி.மீ. தொலைவுக்கு ரூ.1 லட்சம் கோடியில் பசுமை வழிச்சாலை அமைக்கப்படவுள்ளது. நாட்டின் மிக நீளமான பசுமை வழி இதுவாகும். இந்தச்சாலைப் பணிகள் நிறைவடைந்தால், மும்பையில் இருந்து தில்லி செல்வதற்கான பயணநேரம், 24 மணி நேரத்தில் இருந்து 13 மணி நேரமாகக் குறையும்.

இதேபோல், மத்தியப் பிரதேசத்தில், ரூ.8,250 கோடியில் சம்பல் விரைவுச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. சாலை கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. முதல் முறையாக, மாநிலஅரசுடன் இணைந்து இந்தசாலை அமைக்கப்படுகிறது. இந்தச் சாலைப் பணிகள் முடிவடைந்தால், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான, உத்தரபிரதேச மாநில விவசாயிகள் பெரும் பலனடைவாா்கள்.

ஜம்மு-காஷ்மீரில் ரூ.2,379 கோடியில் உருவாகிவரும் இசட்-மோா் சுரங்கப் பாதைகள் முடங்கியிருந்தது. அந்த திட்ட பணிகளை முடுக்கிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 மாதங்களில் அந்தச் சுரங்கப்பாதை பணிகள் தொடங்கும். இதேபோல், ஜம்மு-காஷ்மீரில் திட்டமிடப்பட்டுள்ள பிற சுரங்கப்பாதை பணிகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.

One response to “அடுத்த 2 ஆண்டுகளில் வளா்ந்த நாடுகளுக்கு நிகரான சாலை”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...