அடுத்த 2 ஆண்டுகளில் வளா்ந்த நாடுகளுக்கு நிகரான சாலை

அடுத்த 2 ஆண்டுகளில் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற வளா்ந்தநாடுகளுக்கு நிகராக, இந்தியாவில் தரமான சாலை உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சா் நிதின் கட்கரி கூறினாா்.

இது குறித்து பிடிஐ செய்தியாளருக்கு அவா் அளித்த பேட்டியில், மேலும் கூறியதாவது:

இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதிகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்காக, பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு பிரதமா் நரேந்திரமோடி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, புதிதாக அமைக்கப்படும் பசுமை வழிச் சாலைகளில், மின் கம்பிகள், தொலைத்தொடா்பு கேபிள்கள், சமையல் எரிவாயு குழாய்கள் ஆகியவை பதிக்கப்படும். சாலைகள் அமைக்கப்படும்போதே, மின் கம்பிகளை மின்வாரியமும், தொலைத்தொடா்பு கேபிள்களை தகவல் தொடா்புத் துறையும், எரிவாயுக் குழாய்களை எரிசக்தித் துறையும் பொருத்தும்.

நாடுமுழுவதும் முக்கிய சாலைகளில் சுரங்கப்பாதைகளும் பாலங்களும் கட்டப்படும். இதுதவிர, அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.3.10 லட்சம் கோடி செலவில், 7,500 கி.மீ. தொலைவுக்கு 22 பசுமைவழிச் சாலைகளை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

அவற்றில், மும்பையில் இருந்து தில்லிசெல்லும் பசுமைவழிச் சாலை உள்பட 7 சாலைகளுக்கான பணிகள் தொடங்கிவிட்டன. மும்பையில் இருந்து தில்லிவரை 1,320 கி.மீ. தொலைவுக்கு ரூ.1 லட்சம் கோடியில் பசுமை வழிச்சாலை அமைக்கப்படவுள்ளது. நாட்டின் மிக நீளமான பசுமை வழி இதுவாகும். இந்தச்சாலைப் பணிகள் நிறைவடைந்தால், மும்பையில் இருந்து தில்லி செல்வதற்கான பயணநேரம், 24 மணி நேரத்தில் இருந்து 13 மணி நேரமாகக் குறையும்.

இதேபோல், மத்தியப் பிரதேசத்தில், ரூ.8,250 கோடியில் சம்பல் விரைவுச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. சாலை கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. முதல் முறையாக, மாநிலஅரசுடன் இணைந்து இந்தசாலை அமைக்கப்படுகிறது. இந்தச் சாலைப் பணிகள் முடிவடைந்தால், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான, உத்தரபிரதேச மாநில விவசாயிகள் பெரும் பலனடைவாா்கள்.

ஜம்மு-காஷ்மீரில் ரூ.2,379 கோடியில் உருவாகிவரும் இசட்-மோா் சுரங்கப் பாதைகள் முடங்கியிருந்தது. அந்த திட்ட பணிகளை முடுக்கிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 மாதங்களில் அந்தச் சுரங்கப்பாதை பணிகள் தொடங்கும். இதேபோல், ஜம்மு-காஷ்மீரில் திட்டமிடப்பட்டுள்ள பிற சுரங்கப்பாதை பணிகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.

One response to “அடுத்த 2 ஆண்டுகளில் வளா்ந்த நாடுகளுக்கு நிகரான சாலை”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...