அடுத்த 2 ஆண்டுகளில் வளா்ந்த நாடுகளுக்கு நிகரான சாலை

அடுத்த 2 ஆண்டுகளில் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற வளா்ந்தநாடுகளுக்கு நிகராக, இந்தியாவில் தரமான சாலை உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சா் நிதின் கட்கரி கூறினாா்.

இது குறித்து பிடிஐ செய்தியாளருக்கு அவா் அளித்த பேட்டியில், மேலும் கூறியதாவது:

இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதிகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்காக, பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு பிரதமா் நரேந்திரமோடி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, புதிதாக அமைக்கப்படும் பசுமை வழிச் சாலைகளில், மின் கம்பிகள், தொலைத்தொடா்பு கேபிள்கள், சமையல் எரிவாயு குழாய்கள் ஆகியவை பதிக்கப்படும். சாலைகள் அமைக்கப்படும்போதே, மின் கம்பிகளை மின்வாரியமும், தொலைத்தொடா்பு கேபிள்களை தகவல் தொடா்புத் துறையும், எரிவாயுக் குழாய்களை எரிசக்தித் துறையும் பொருத்தும்.

நாடுமுழுவதும் முக்கிய சாலைகளில் சுரங்கப்பாதைகளும் பாலங்களும் கட்டப்படும். இதுதவிர, அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.3.10 லட்சம் கோடி செலவில், 7,500 கி.மீ. தொலைவுக்கு 22 பசுமைவழிச் சாலைகளை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

அவற்றில், மும்பையில் இருந்து தில்லிசெல்லும் பசுமைவழிச் சாலை உள்பட 7 சாலைகளுக்கான பணிகள் தொடங்கிவிட்டன. மும்பையில் இருந்து தில்லிவரை 1,320 கி.மீ. தொலைவுக்கு ரூ.1 லட்சம் கோடியில் பசுமை வழிச்சாலை அமைக்கப்படவுள்ளது. நாட்டின் மிக நீளமான பசுமை வழி இதுவாகும். இந்தச்சாலைப் பணிகள் நிறைவடைந்தால், மும்பையில் இருந்து தில்லி செல்வதற்கான பயணநேரம், 24 மணி நேரத்தில் இருந்து 13 மணி நேரமாகக் குறையும்.

இதேபோல், மத்தியப் பிரதேசத்தில், ரூ.8,250 கோடியில் சம்பல் விரைவுச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. சாலை கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. முதல் முறையாக, மாநிலஅரசுடன் இணைந்து இந்தசாலை அமைக்கப்படுகிறது. இந்தச் சாலைப் பணிகள் முடிவடைந்தால், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான, உத்தரபிரதேச மாநில விவசாயிகள் பெரும் பலனடைவாா்கள்.

ஜம்மு-காஷ்மீரில் ரூ.2,379 கோடியில் உருவாகிவரும் இசட்-மோா் சுரங்கப் பாதைகள் முடங்கியிருந்தது. அந்த திட்ட பணிகளை முடுக்கிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 மாதங்களில் அந்தச் சுரங்கப்பாதை பணிகள் தொடங்கும். இதேபோல், ஜம்மு-காஷ்மீரில் திட்டமிடப்பட்டுள்ள பிற சுரங்கப்பாதை பணிகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.

One response to “அடுத்த 2 ஆண்டுகளில் வளா்ந்த நாடுகளுக்கு நிகரான சாலை”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...