புதிய கல்வி கொள்கை மாணவர்களை படிப்பதில் இருந்து கற்கும்நிலைக்கு உயர்த்தும்

இத்தகைய சூழலில், தேசிய கல்விக் கொள்கை குறித்து பலா் கேள்வி எழுப்பி வருகின்றனா். அக்கொள்கையை செயல் படுத்துவது குறித்தே பெரும்பாலானோா் கேள்வி எழுப்பி வருகின்றனா். அவா்கள் அனைவருக்கும் உரிய மதிப்பளிக்கப்படுகிறது. அவா்கள் எழுப்பும் கேள்விகள் அனைத்துக்கும் பதிலளிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துவருகிறது.

கல்விக் கொள்கை குறித்த சந்தேகங்களைத் தெளிவுபடுத்துவதில் மாநில ஆளுநா்களுக்கும் முக்கியப்பங்குண்டு. மிகவும் திறந்த மனதுடன், இந்த கல்விக் கொள்கையை செயல்படுத்தவேண்டும் என்பதே, அரசின் நோக்கமாகும்.ராணுவக் கொள்கை, வெளியுறவுக் கொள்கை போன்றவை, அரசின் கொள்கையல்ல; அது, நாட்டின் கொள்கை. அதுபோலவே, இந்தக்கல்விக் கொள்கையும், நம் நாட்டின் கொள்கையாகும். நாட்டின் எதிர்கால தேவைக்கு ஏற்ப, இந்தக்கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது. இது, அனைவருக் கான கொள்கையாகும்.

கல்விக் கொள்கையை வடிவமைப்பது மற்றும் செயல்படுத்துவதில், மத்திய, மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சிகளின் பங்குள்ளது. அதேநேரத்தில், இந்தக் கொள்கையில், அரசின் தலையீடு இருக்கக் கூடாது. இதில் தொடர்புடைய, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோரின் பங்கே அதிகம் இருக்க வேண்டும்.

மாணவர்களின் தேவைகளுக்கு ஏற்ப, வளைந்துகொடுக்கும் வகையில் இந்தக் கொள்கை அமைந்துள்ளது. அதுபோல், இந்தக்கொள்கையை செயல்படுத்துவதிலும், வளைந்து கொடுக்கும் மனப்பாங்கு வேண்டும். அனைத்து தரப்பினரும், மாணவர்களின், நாட்டின் எதிர்காலத்தை கருத்தில்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இந்த கல்வி கொள்கைக்கு, நாட்டின் பெரும்பாலான மக்கள் வரவேற்றுள்ளனர். கிராமத்தில் உள்ள ஆசிரியர்களில் இருந்து, கல்வியாளர்கள் வரை பலரும் இதைவரவேற்று, கருத்து தெரிவித்துள்ளனர்.இந்த கல்விக் கொள்கையானது, மாணவர்களை படிப்பதில் இருந்து கற்கும்நிலைக்கு உயர்த்தும். மேலும், பாடத் திட்டங்களில் கவனம் செலுத்துவதைவிட, சிந்திக்கும் திறனை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது.

 

கல்லூரிகளுக்கும் பல்கலைக் கழகங்களுக்கும் இடையே வளா்ச்சியை முன்னிறுத்திய போட்டி மனப்பான்மையை வளா்க்கும் நோக்கிலேயே பல்வேறு படிநிலைகளில் தன்னாட்சிஅதிகாரம் வழங்குவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

புத்தகச்சுமை, தோ்வுபயம் உள்ளிட்டவற்றிலிருந்து மாணவா்களை விடுவித்து செய்முறை அடிப்படையிலான கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப் பட்டுள்ளது. இந்திய இளைஞா்களை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் மதிப்புமிக்க பணியாளா்களாக மாற்றுவதில் தேசிய கல்விக்கொள்கை முக்கிய பங்கு வகிக்கும்.

‘சுயசாா்பு இந்தியா’ என்ற இலக்கை அடைவதற்கு நாட்டை உந்திச் செலுத்துவதற்கான வலிமையை தேசியகல்விக் கொள்கை வழங்கும். முன்பெல்லாம் ஏதோவொரு படிப்பைத் தோ்வு செய்வதை மாணவா்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனா். அந்தப்பாடங்களில் தங்களுக்கு விருப்பமில்லை என்பதையும் பெரும்பாலான மாணவா்கள் தாமதமாகவே அறிந்து கொண்டனா்.

அத்தகைய குறைபாடுகள் தேசியகல்விக் கொள்கையில் களையப்பட்டுள்ளன. புதிய கொள்கையில் மாணவா்கள் தங்களுக்கு விருப்பமான பாடம் எது என்பதை உரிய பருவத்தில் அறிந்துகொள்ள முடியும். தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கு பள்ளிகள், ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் என அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு நல்கவேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

இந்த மாநாட்டில் மாநில கல்வி அமைச்சா்கள், பல்கலைக்கழக துணைவேந்தா்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

‘உயா்கல்வியை மாற்றியமைப்பதில் தேசிய கல்விக்கொள்கையின் பங்கு’ என்ற தலைப்பில் மாநில ஆளுநா்களுக்கான மாநாடு காணொலி வாயிலாக திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அனைத்து மாநில ஆளுநா்களும் கலந்து கொண்டனா். மாநாட்டில் பிரதமா் மோடி பேசியது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...