இந்திய வேளாண் துறை வரலாற்றில் இது திருப்புமுனை

வேளாண்மை மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேறியதற்கு விவசாயிகளுக்கு பிரதமர்  நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித் துள்ளார். இந்திய வேளாண் துறை வரலாற்றில் இது திருப்பு முனை  என்று பிரதமர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் ட்விட்டரில் பதிவுகள் கூறியுள்ளதாவது . “இந்திய வேளாண் துறையின் வரலாற்றில் திருப்புமுனை தருணம்! முக்கிய மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது குறித்து, கடின உழைப்பாளிகளான விவசாயிகளுக்குப் பாராட்டுகள். இந்தமசோதாக்கள் நிறைவேறியதால் வேளாண்மைத் துறையில் முழுமையான மாற்றங்கள் ஏற்படுவது உறுதி செய்யப்படுவதுடன், கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு அதிகாரம் கிடைக்கச் செய்யப்படும்

பல தசாப்த காலங்களாக இந்தியவிவசாயிகள் பல கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டியிருந்தது, இடைத்தரகர்களால் ஏமாற்றப்பட்டனர். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாக்கள் மூலம் இதுபோன்ற எதிர்மறை சூழல்களில் இருந்து விவசாயிகள் விடுதலைபெறுவார்கள். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் முயற்சிகளுக்கு இந்த மசோதாக்கள் புதிய உந்துதலை கொடுக்கும். அவர்களுக்கு அதிகவளமை கிடைப்பது உறுதி செய்யப்படும்.

கடுமையாக உழைக்கும் விவசாயிகளுக்கு உதவியாக நவீனதொழில்நுட்பம் தேவைப்படுகிறது. இப்போது இந்தமசோதாக்கள் நிறைவேற்றப் பட்டிருப்பதன் மூலம், உற்பத்தியை பெருக்கும் மற்றும் நல்ல விளைச்சலைத்தரும் வகையிலான எதிர்கால தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையிலான தொழில்நுட்ப வசதிகள் எளிதில் கிடைக்கும். இது வரவேற்புக்குரிய ஒரு படிநிலை.

நான் இதை முன்பு கூறியிருக்கிறேன், மீண்டும் ஒரு முறை கூறுகிறேன்:

குறைந்தபட்ச ஆதரவுவிலை நடைமுறை தொடரும். அரசு கொள்முதல் தொடரும். நம் விவசாயிகளுக்கு சேவைசெய்யவே நாங்கள் இருக்கிறோம். அவர்களுக்கு ஆதரவான எல்லாவற்றையும் நாங்கள்செய்வோம். வரக்கூடிய தலைமுறைகளில் அவர்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைப்பதை உறுதி செய்ய தேவையான அனைத்தையும் செய்வோம்”

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...