முன்னாள் ராணுவத்தினருக்கு ஏராளமான உதவித் திட்டங்கள்

முன்னாள் ராணுவத்தினர் நலனுக்காக, மீள்குடியேற்ற தலைமை இயக்குனரகம் ஏராளமான திட்டங்களை செயல்படுத்திவருகிறது. பாதுகாப்பு ஏஜன்சிகள், பெட்ரோல் பங்குகள், கேஸ்நிலையங்கள், கேஸ் சிலிண்டர் ஏஜென்ஸி ஒதுக்கீடு, தில்லியில் பால் பூத்கள், காய்கறி மற்றும் பழக்கடைகள் ஒதுக்கீடு போன்றவை செய்து கொடுக்கப்படுகின்றன.

முன்னாள் ராணுவத்தினர்/ விதவைகள்/ போர்விதவைகள்/ அவர்களின் குழந்தைகளுக்கும் ஏராளமான நிதியதவிகளை கேந்திரிய சைனிக் வாரியம் செய்கிறது.

ஓய்வூதியம் பெறாத ஹவில்தார் அந்தஸ்து வரையிலான வீரர்களுக்கு 65 வயதுக்குமேல் மாதம் ரூ.4,000 வாழ்நாள் முழுவதும் வழங்கப்படுகிறது.

முதல் 2 குழந்தைகளுக்கு பட்டப்படிப்புவரை மாதம் ரூ.1000/- வழங்கப்படுகிறது.

மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000/- வழங்கப்படுகிறது.

வீடுபழுதுபார்ப்பு மானியமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது.

ஹவில்தார் அந்தஸ்து வரையிலான முன்னாள் வீரர்களின் முதல் 2 மகள்களின் திருமண நிதி யுதவியாக ரூ.50 ஆயிரம் வழங்கப்டுகிறது.

இறுதி சடங்குக்கு ரூ.5000/- அளிக்கப்டுகிறது.

மருத்துவ சிகிச்சைக்கு அதிகபட்சம் ரூ.30 ஆயிரம் வழங்க படுகிறது.

ராணுவ வீரர்கள் முதல் அதிகாரிகள் வரை அவர்களின் குழந்தைகளுக்கு திருமணம் ஆகும்வரை ரூ.1000/- வழங்கப்படுகிறது.

விதவைகளின் தொழிற்பயிற்சிக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது.

போரில் இறந்த ராணுவவீரர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ரூ.25 லட்சம் நிதி மற்றும் இந்திராகாந்தி நகர் பரியோஜனாவில் 25 பிகாஸ் நிலம் அல்லது ரூ.25 லட்சம் நிதி மற்றும் எம்ஐஜி வீட்டுவசதி வாரிய இல்லம் அல்லது ரூ.50 லட்சம் பணம்.

ராணுவ வீரர்களுக்கு 1,86,138 குண்டு துளைக்காத உடைகள், 1,58,279 கவச ஹெல்மெட்டுகள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் முறையே கடந்த 2018 மற்றும் 2016ல் முடிவடைந்தது.

தற்சார்பு இந்தியாதிட்டத்தின் கீழ், 101 ராணுவ தளவாடங்களை இறக்குமதிசெய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இனி, இவற்றை நாட்டில் உள்ள படைகலன் பொருட்கள் உற்பத்திவாரிய ஆலைகள் மற்றும் தனியார் ஆலைகள் தயாரிக்கும்.

அம்பான், நிஷர்கா போன்ற புயல்சமயத்தில் மீனவர்களின் உயிரை காக்கவும், புயல் பாதிப்புகளைக் குறைக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தியகடலோர காவல் படையின் 6 கப்பல்கள் மற்றும் டோர்னியர் ரகவிமானங்கள் மேற்கொண்டன. நிஷர்கா புயல் சமயத்தில் 2354 மீன்பிடி படகுகளை, இந்திய கடலோர காவல்படை கரை சேர்த்தது.

பாதுகாப்புத் துறை இணையமைச்சர் ஸ்ரீபத் நாயக் 

*

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...