எந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்றை இடத்தை நம்பியிருப்பது ஆபத்தானது

இந்தியா-டென்மார்க் இடையே இருதரப்பு உச்சிமாநாட்டின்போது சீனாவை தாக்கும் வகையில் கடுமையாக கருத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படுத்தினார். எந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்றை இடத்தை நம்பியிருப்பது ஆபத்தானது என்பதை இந்தகொரோனா காட்டிவிட்டது என்று சீனாவை மறைமுகமாக சாடினார்.

இந்தியாவில் வளர்ந்துவரும் காற்றாலை ஆற்றல் துறையில் டென்மார்க் மிகப்பெரிய பங்குதாரராக உருவெடுத்துள்ளது. அத்துடன் இந்தியாவின், வெண்மை புரட்சிக்கும் கைகொடுத்துவருகிறது. இந்தியாவும் டென்மார்க்கும் பரஸ்பர நலன்களைப் பகிர்ந்து கொண்டுவருகின்றன, காலநிலை மாற்றத்திற்கு எதிராகபோராட இருநாடுகளும் இணைந்துள்ளன.

கடந்த சிலமாதங்களாக, டென்மார்க் நிறுவனங்களான எல்.எம். விண்ட், ஹால்டோர் டாப்சோ மற்றும் நோவோசைம்ஸ் போன்றவை மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ முயற்சிக்கு பங்களிக்கும் வகையில் இந்தியாவில் உற்பத்திபிரிவுகளை அமைக்க உறுதியளித்துள்ளன.

மற்றொரு பெரியடென்மார்க் நிறுவனமான மெர்ஸ்க், இந்தியாவில் உள்ள அனைத்து ஷிப்பிங் கண்டெய்ணர்களிலும் கிட்டத்தட்ட 19 சதவீதத்தை கொண்டுள்ளது. அதேநேரத்தில், டென்மார்க்கின் டான்ஃபோஸ் நிறுவனம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேளாண் விளைபொருட்களுக்கு குளிர் பதனக் கிடங்குகளை அமைத்து வருகிறது.

இந்நிலையில் இந்தியா-டென்மார்க் இடையே இருதரப்பு உச்சி மாநாடு ஆன்லைன் வாயிலாக நடக்கப் போவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் அண்மையில் அறிவித்திருந்தது.

இதன் படி பிரதமர் மோடியும் டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சனும் ஆன்லைன் வாயிலாக சந்தித்துபேசினர். கொரோனா காரணமாக இருதரப்பும் நேரில் சந்தித்துக் கொள்ளவில்லை.

 

பேசும் போது எந்த ஒரு பொருள் உற்பத்திக்கும் உலகமே ஒற்றை இடத்தை நம்பியிருப்பது ஆபத்தானது என்பதை இந்தகொரோனா காட்டிவிட்டது என்றார். சீனா தான் உலகிற்க மருந்து உள்பட பலமுக்கிய பொருட்களை குறைந்த விலையில் உற்பத்தி செய்துவந்த நிலையில், திடீரென கொரோனாவால் நிறுத்திக்கொண்டது. இது உலக நாடுகளை கடுமையாக பாதித்தது. இதைத்தான் பிரதமர் மோடி மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார்.

சீனாவை மட்டும் நம்பிக்கொண்டிருக்காமல் மற்றநாடுகளும் உற்பத்தி மற்றும் விநியோகத்தை இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து செய்லபட்டு வருவதாகவும், இந்தியாவைபோன்ற எண்ணம் கொண்ட மற்ற நாடுகளும் இதில் சேரலாம்.” என்றும் டென்மார்க் பிரதமரிடம் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

காஷ்மீர் சென்றார் ராணுவ தளபதி உ ...

காஷ்மீர் சென்றார் ராணுவ தளபதி உபேந்திர திரிவேதி! பஹல்காமில் தாக்குதல் நடந்த சூழ்நிலையில், இந்திய ராணுவ தளபதி ...

காஷ்மீரில் பயங்கரவாதியின் வீட ...

காஷ்மீரில் பயங்கரவாதியின் வீடு வெடிவைத்து தகர்ப்பு; ராணுவத்தினர் அதிரடி காஷ்மீர் எல்லைக் கோட்டுப்பகுதியில் ஒரு சில இடங்களில், ...

பாகிஸ்தான் பற்றவைத்த பயங்கரவா ...

பாகிஸ்தான் பற்றவைத்த பயங்கரவாத தீ.. தண்ணீரால் பதிலடி தந்தது இந்தியா பூமியில் ஒரு சொர்க்கம் இருந்தால், அது இது தான்... ...

அனைத்துகட்சி கூட்டத்தில் ஒற்ற ...

அனைத்துகட்சி கூட்டத்தில் ஒற்றுமை குரல் : பயங்கரவாதத்தை ஒடுக்க சூளுரை பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக டில்லியில் நேற்று நடந்த ...

அனைத்து கட்சி கூட்டத்தில் மத்த ...

அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் ...

துயரமான நேரத்தில் துணை நிற்கிற ...

துயரமான நேரத்தில் துணை நிற்கிறோம் – இந்தியாவுக்கு பிரான்ஸ் அதிபர் உறுதி ''இந்த துயரமான நேரத்தில் பிரான்ஸ், இந்தியாவுடனும் அதன் மக்களுடனும் ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...