அமைதியும் வளமும் நிறைந்த நாடு இந்தியா – இந்திய விமான கண்காட்சியில் ராஜ்நாத் சிங் பெருமிதம்

அமைதியும், வளமும் நிறைந்த மிகப்பெரிய நாடு இந்தியா என்று பெங்களூருவில் விமான கண்காட்சியை தொடங்கி வைத்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு, எலஹங்காவில் உள்ள விமான பயிற்சி நிலையத்தில், ‘ஏரோ இந்தியா விமான கண்காட்சி’ இன்று முதல் 14 ம் தேதி வரை நடக்கிறது. மொத்தம் 5 நாட்கள் நடக்கும் கண்காட்சியில் விமான படையின் திறமையை வெளிப்படுத்தும் விதமாகவும், உள்நாட்டு கண்டுபிடிப்புகளை காட்சிபடுத்தும் விதமாக சாகச நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த நிலையில், இந்த விமான கண்காட்சியை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது: இந்தியாவில் மஹா கும்பமேளா நடந்து வருகிறது. மற்றொரு கும்பமேளா ஏரோ இந்தியாவில் தொடங்கியுள்ளது. பிரயாக்ராஜில் நடக்கும் கும்பமேளா மனதை சுயபரிசோதனை செய்யவும், உள்நாட்டு ஒற்றுமைக்காகவும் நடக்கிறது. ஏரோ இந்தியாவில் நடக்கும் கும்பமேளாவானது, ஆராய்ச்சிக்காகவும், அயலக பாதுகாப்பிற்காகவும் நடக்கிறது. பிரயாக்ராஜ் கும்பமேளா நமது கலாசாரத்தை பிரதிபலிக்கிறது. ஏரோ இந்தியா கும்பமேளா, இந்தியாவின் வலிமையை வெளிக்காட்டுகிறது.

ஒரு கையில் கலாசாரத்தையும், ஆன்மீகமும், மறு கையில் வீரத்தையும் கொண்டிருக்கிறோம். வளர்ச்சி, பாரம்பரியம் என்ற பிரதமர் மோடியின் முழக்கம் தற்போது நடந்து வருகிறது. இது இந்தியாவை தவிர வேறு எங்கும் நடக்காது.

ஏரோ இந்தியா கண்காட்சியானது, பரஸ்பர உறவு மற்றும் மரியாதை மேம்படுத்துவதற்கான தளமாக அமைந்துள்ளது. பாதுகாப்பில் வலுவிழந்து காணப்படும் எந்த நாட்டிலும் அமைதியை நிலைநாட்ட முடியாது. அனைவரும் ஒன்றாக இணைந்து பாதுகாப்பை உறுதி செய்து, அமைதியை நிலைநாட்ட முயற்சிப்போம். அமைதியும், வளமும் நிறைந்த மிகப்பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது, இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து, விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த விமான கண்காட்சியில் இந்தியா மட்டுமல்லாது, அமெரிக்காவைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. பல்வேறு தொழில் வாய்ப்புகள், பாதுகாப்பு மற்றும் விமானத் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. பல வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்யப்பட உள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிக ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்த மாநிலங்கள் மக்களவை தொகுதிகளை இழக்காது” – பிரதமர் மோடி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...