தமிழக பா.ஜ.,வில், அடுத்தடுத்து பிரபலங்கள் மற்றும் மாற்றுகட்சியினர் இணைந்து வருவது, திராவிட கட்சிகளிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் ஆறுமாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை, தமிழக பா.ஜ., அசுரவேகத்தில் செய்துவருகிறது. தற்போது, அதிமுக., கூட்டணியில் இருந்தாலும், தனி ஆவர்த்தனம் செய்ய துவங்கிவிட்டது. அனைத்து மாவட்டங்களிலும், மாற்று கட்சியினர், பா.ஜ.,வில் இணைவது, தொடர்கதையாகி வருகிறது.அதேபோல, பிரபலங்களும், பா.ஜ.,வை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
நேற்று நடிகை குஷ்பு, முன்னாள் வருமான வரித்துறை அதிகாரி சரவணகுமார், பத்திரிகையாளர் மதன் ரவிச்சந்திரன் ஆகியோர், டில்லி சென்று, பா.ஜ.,வில் இணைந்தனர்.
அரசுபணியை துறந்து, பா.ஜ.,வில் இணைந்த ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணா மலையை பின்பற்றி, ஐஆர்எஸ்., அதிகாரி சரவண குமாரும், நேற்று பா.ஜ.,வில் இணைந்தார். இவர் மதுரை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். இந்திய வருவாய்பணி அதிகாரியாக, 15 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர். கடந்த, 2017ல் விருப்ப ஓய்வு பெற்றார்; சட்டம் படித்துள்ளார்.வருமான வரித்துறை, நிதி விவகாரங்கள் தொடர்புடைய வழக்குகளில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார். மேலும், பலகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, சட்ட ஆலோசகராகவும் உள்ளார்.
இதுபோல, படித்த நபர்கள், பிரபலங்கள் எல்லாம், பா.ஜ.,வை நோக்கிவருவது, கட்சியினரிடம் உற்சாகத்தை ஏற்படுத்திஉள்ளது. அதேநேரத்தில், திராவிட கட்சிகளிடம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |