அடுத்தடுத்து பிரபலங்கள் அதிர்ச்சியில் திராவிட கட்சிகள்

தமிழக பா.ஜ.,வில், அடுத்தடுத்து பிரபலங்கள் மற்றும் மாற்றுகட்சியினர் இணைந்து வருவது, திராவிட கட்சிகளிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் ஆறுமாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை, தமிழக பா.ஜ., அசுரவேகத்தில் செய்துவருகிறது. தற்போது, அதிமுக., கூட்டணியில் இருந்தாலும், தனி ஆவர்த்தனம் செய்ய துவங்கிவிட்டது. அனைத்து மாவட்டங்களிலும், மாற்று கட்சியினர், பா.ஜ.,வில் இணைவது, தொடர்கதையாகி வருகிறது.அதேபோல, பிரபலங்களும், பா.ஜ.,வை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

நேற்று நடிகை குஷ்பு, முன்னாள் வருமான வரித்துறை அதிகாரி சரவணகுமார், பத்திரிகையாளர் மதன் ரவிச்சந்திரன் ஆகியோர், டில்லி சென்று, பா.ஜ.,வில் இணைந்தனர்.

அரசுபணியை துறந்து, பா.ஜ.,வில் இணைந்த ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணா மலையை பின்பற்றி, ஐஆர்எஸ்., அதிகாரி சரவண குமாரும், நேற்று பா.ஜ.,வில் இணைந்தார். இவர் மதுரை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். இந்திய வருவாய்பணி அதிகாரியாக, 15 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர். கடந்த, 2017ல் விருப்ப ஓய்வு பெற்றார்; சட்டம் படித்துள்ளார்.வருமான வரித்துறை, நிதி விவகாரங்கள் தொடர்புடைய வழக்குகளில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார். மேலும், பலகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, சட்ட ஆலோசகராகவும் உள்ளார்.

இதுபோல, படித்த நபர்கள், பிரபலங்கள் எல்லாம், பா.ஜ.,வை நோக்கிவருவது, கட்சியினரிடம் உற்சாகத்தை ஏற்படுத்திஉள்ளது. அதேநேரத்தில், திராவிட கட்சிகளிடம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் மிக உயரமான செனாப் ரயில் � ...

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம்: ஜூன் 6ல் திறந்து வைக்கிறார் பிரதமர் உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் நதி ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்� ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்தினால் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை’ ''பிரம்மபுத்திரா நதியை சீனா தடுத்து நிறுத்தினாலும், இந்தியாவுக்கு எந்த ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

மருத்துவ செய்திகள்

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...