நிடி ஆயோக் கூட்டத்திற்கு முதலமைச்சர் வராததற்கு பயமே காரணம்-அண்ணாமலை

“முதல்வர் ஸ்டாலின், பயம் காரணமாக தான் நிடி ஆயோக் கூட்டத்திற்கு செல்லவில்லை,” என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழக பா.ஜ., விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி எழுதிய, ‘கனெக்டிங் 1.4 பில்லியன்’ நுால் வெளியீட்டு விழா, சென்னை தி.நகர் கமலாலயத்தில் நடந்தது.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நுாலை வெளியிட, ‘அன்பு பாலம்’ நிறுவனர் கல்யாணசுந்தரம் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், இந்திய ஜனநாய கட்சி தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அண்ணாமலை பேசியதாவது:

பணக்காரராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், தொழில்நுட்பம் இருவரிடமும் இருக்கும் என்ற நிலை, இந்தியாவில் தான் உள்ளது.

நுாலில், பிரதமர் மோடி ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட இலவச கழிப்பறை திட்டம், குடிநீர் திட்டம் என, பல இடம் பெற்றுள்ளன. குழாயில் பாதுகாப்பாக குடிநீர் வழங்குவதால், ஆண்டுக்கு, 2 வயதுக்கு கீழ், 1.36 லட்சம் குழந்தைகளின் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன.

இன்று புத்தகம் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இளைஞர்களுக்கு, 40 வினாடிக்குள் ஒரு தகவலை கொடுத்தால் தான் அவர்களால் கிரகிக்க முடியும். பா.ஜ.,வில் உள்ள இளைஞர்கள் புத்தகம் எழுத வேண்டும்; அதை கட்சி ஊக்குவிக்கும்.

தமிழகத்தில் பா.ஜ., எழுத்தாளர்கள் அதிகம் வர வேண்டும். திராவிட கட்சிகளில் எழுத்தாளர்கள் அதிகம் உள்ளனர். அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்றால், பா.ஜ.,வில் எழுத்தாளர்கள் வர வேண்டும்.

பட்ஜெட்டில் தமிழகத்தின் பெயர் இல்லை என்பதால், நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர், 2022, 2023, 2024 என, நிடி ஆயோக் மூன்று கூட்டங்களுக்கு செல்லவில்லை.

நிடி ஆயோக் கூட்டத்திற்கு சென்றால், முதல்வர் ஸ்டாலின் நேரடியாக பேச வேண்டும். பயம் காரணமாக தான் கூட்டத்திற்கு அவர் செல்லவில்லை. அந்த இடத்தில் கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டும். முதல்வரின் நாடகத்தை மக்கள் நன்றாக பார்த்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...