நிடி ஆயோக் கூட்டத்திற்கு முதலமைச்சர் வராததற்கு பயமே காரணம்-அண்ணாமலை

“முதல்வர் ஸ்டாலின், பயம் காரணமாக தான் நிடி ஆயோக் கூட்டத்திற்கு செல்லவில்லை,” என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழக பா.ஜ., விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி எழுதிய, ‘கனெக்டிங் 1.4 பில்லியன்’ நுால் வெளியீட்டு விழா, சென்னை தி.நகர் கமலாலயத்தில் நடந்தது.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நுாலை வெளியிட, ‘அன்பு பாலம்’ நிறுவனர் கல்யாணசுந்தரம் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், இந்திய ஜனநாய கட்சி தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அண்ணாமலை பேசியதாவது:

பணக்காரராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், தொழில்நுட்பம் இருவரிடமும் இருக்கும் என்ற நிலை, இந்தியாவில் தான் உள்ளது.

நுாலில், பிரதமர் மோடி ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட இலவச கழிப்பறை திட்டம், குடிநீர் திட்டம் என, பல இடம் பெற்றுள்ளன. குழாயில் பாதுகாப்பாக குடிநீர் வழங்குவதால், ஆண்டுக்கு, 2 வயதுக்கு கீழ், 1.36 லட்சம் குழந்தைகளின் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன.

இன்று புத்தகம் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இளைஞர்களுக்கு, 40 வினாடிக்குள் ஒரு தகவலை கொடுத்தால் தான் அவர்களால் கிரகிக்க முடியும். பா.ஜ.,வில் உள்ள இளைஞர்கள் புத்தகம் எழுத வேண்டும்; அதை கட்சி ஊக்குவிக்கும்.

தமிழகத்தில் பா.ஜ., எழுத்தாளர்கள் அதிகம் வர வேண்டும். திராவிட கட்சிகளில் எழுத்தாளர்கள் அதிகம் உள்ளனர். அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்றால், பா.ஜ.,வில் எழுத்தாளர்கள் வர வேண்டும்.

பட்ஜெட்டில் தமிழகத்தின் பெயர் இல்லை என்பதால், நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர், 2022, 2023, 2024 என, நிடி ஆயோக் மூன்று கூட்டங்களுக்கு செல்லவில்லை.

நிடி ஆயோக் கூட்டத்திற்கு சென்றால், முதல்வர் ஸ்டாலின் நேரடியாக பேச வேண்டும். பயம் காரணமாக தான் கூட்டத்திற்கு அவர் செல்லவில்லை. அந்த இடத்தில் கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டும். முதல்வரின் நாடகத்தை மக்கள் நன்றாக பார்த்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது ப ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது போல் இருக்கிறது பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய வேளாண் ...

உங்​களின் தந்​தை​ பெயரை சொல்ல ...

உங்​களின் தந்​தை​ பெயரை சொல்ல  வெட்​கப்​ படு​கிறீர்​களா ? பிஹாரின் தேர்​தல் பிரச்​சார சுவரொட்​டிகளில் இந்த மாநிலத்​தில் காட்​டாட்​சிக்கு ...

சாத் பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்க ...

சாத் பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற முயற்சிக்கிறோம் பீஹார்தேர்தலில் ஓட்டுக்களை பெறுவதற்காக, காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் என்னை ...

மருத்துவ செய்திகள்

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...