ப.சிதம்பரத்துக்கு ஐஎஸ்ஐ, நக்சலுடன் தொடர்பு; ரவீந்திர ரெய்னா

காஷ்மீர், :ஜம்மு – காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிராக கருத்துதெரிவித்த ப.சிதம்பரத்துக்கு ஐஎஸ்ஐ, நக்சல்களுடன் தொடர்பு இருக்கலாம் என, ஜம்மு – காஷ்மீர் பாஜக தலைவர் குற்றம்சாட்டினார்.காங்கிரஸ் மூத்ததலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், 370வது  அரசியல்சாசன சட்டத்தை, சட்டத்திற்கு புறம்பாக நீக்கியமுடிவை, மோடி அரசு ரத்துசெய்ய வேண்டும்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நிலைநிறுத்தவும், ஜம்மு – காஷ்மீர் மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும் காங்கிரஸ் கட்சி எப்போதும் துணைநிற்கும். மக்களின் உரிமைகளை பாதுகாக்க, ஜம்மு – காஷ்மீர் பிராந்தியத்தை சார்ந்த பிரதான எதிர்க் கட்சிகள் ஒன்றிணைந்து அரசியலமைப்பு போரை முன்னெடுத்து இருப்பது நல்ல முன்னேற்றம்‘ என்று தெரிவித்துள்ளார். இவரது கருத்துக்கு பாஜக தரப்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பாஜகவின் ஜம்மு-காஷ்மீர் பிரிவுத்தலைவர் ரவீந்திர ரெய்னா கூறுகையில், ‘சிறப்பு அந்தஸ்து மீண்டும் கொண்டுவரப்படும் என்று கூறுகின்ற ப.சிதம்பரத்துக்கு, பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ மற்றும் நக்சலைட்டுகளுடன் தொடர்புஇருக்கலாம்.  இதேபோல், திக்விஜய் சிங்கும் பேசியுள்ளார். இவர்கள் இவ்வாறு பேசுவதற்கு அனுமதித்ததற்காக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும் அவரது மகன் ராகுல் காந்தியும் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...