மெஹபூபா முஃப்தியை சிறையில் அடைக்க வேண்டும்

தேசியக் கொடி தொடர்பான ‘தேசத்துரோக’ கருத்துக்களுக்காக மக்கள் ஜனநாயக கட்சித்தலைவா் மெஹபூபா முஃப்தியை கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி உள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட்மாதம் 5-ஆம் தேதி ரத்து செய்யப்பட்ட பிறகு, மெஹபூபா முஃப்தி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டாா். ஓராண்டுக்கும் மேல் தடுப்புக் காவலில் இருந்தவா், சமீபத்தில் விடுவிக்கப்பட்டாா். இதையடுத்து அவா் முதல்முறையாக வெள்ளிக்கிழமை செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது, நான் தோ்தலில்போட்டியிட விரும்பவில்லை. எந்த அரசியலமைப்பின் கீழ் நான் இதுவரை தோ்தலில் போட்டியிட்டு வந்தேனோ, அந்தஅரசியலமைப்பு திரும்ப வழங்கப்படும் வரை, எனக்கு தோ்தலுடன் எந்ததொடா்பும் இல்லை என்றாா்.

இந்த பேட்டியின்போது சிறப்பு அந்தஸ்துள்ள மாநிலமாக இருந்த போது ஜம்மு-காஷ்மீா் பயன்படுத்திய கொடி மெஹபூபா முஃப்தியின் மேஜையில் இருந்தது. அதுவே தனதுகொடி என்றும், ஜம்முகாஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால், நாங்கள் மூவா்ண கொடியையும் ஏந்துவோம் என்று கூறியிருந்தார்.

மெஹபூபா முஃப்தியின் பேச்சுக்கு மாநில பாஜக தலைவர் ரவிந்தர்ரெய்னா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியில், ஜம்மு-காஷ்மீர் நம் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாகும், எனவே ஜம்முகாஷ்மீரில் ஒரே ஒருகொடியை மட்டுமே ஏற்ற முடியும், அதுதான் தேசியக் கொடி.” அந்த கொடியைத் தவிர வேறு எந்த கொடியையும் இந்த பூமியில் எந்த சக்தியாலும் ஏற்றமுடியாது”

தாய் மண்ணுக்காகவும், தேசத்துக்காகவும், கொடிக்காகவும் ஒவ்வொரு சொட்டுரத்தத்தையும் தியாகம் செய்வோம். “ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கொடியைத் திரும்ப கொண்டு வருவதற்கும், அரசியலமைப்பின் 370 வது பிரிவை மீட்டெடுப்பதற்கும் இந்தபூமியில் யாருக்கும் வலிமையும், அதிகாரமும்” இல்லை.

இந்த சிறப்பு அந்தஸ்தால் தான் பிரிவினைவாதமும், தீவிரவாதமும் வளர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இங்கு தேசியக்கொடி ஒன்றைத்தவிர எந்தக் கொடியும் ஏற்றக்கூடாது .

காஷ்மீர் மக்களைத் தூண்டும் நோக்கில் இதுபோன்ற “தீங்கு விளைவிக்கும் பேச்சுக்களை” பாஜக ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது , மெஹபூபா முஃப்தியின் ‘தேசத்துரோக’ கருத்துக்களை துணைநிலை ஆளுநர் மனோஜ்சின்ஹா கவனத்தில்கொண்டு, அவர் மீது தேசத்துரோக பேச்சுக்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்து தேசவிரோத சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும்.

“காஷ்மீர் மக்களைத் தூண்டுவரையில் பேச வேண்டாம் என முஃப்தி போன்ற தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். மாநிலத்தில் அமைதி, இயல்பு வாழ்க்கை மற்றும் சகோதரத்துவத்துக்கு எதிராக எந்த அசாம்விதங்களும் நடைபெற அனுமதிக்கமாட்டோம். அவ்வாறு ஏதாவது நடந்தால், முஃப்தி அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்,” என்று கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...