மெஹபூபா முஃப்தியை சிறையில் அடைக்க வேண்டும்

தேசியக் கொடி தொடர்பான ‘தேசத்துரோக’ கருத்துக்களுக்காக மக்கள் ஜனநாயக கட்சித்தலைவா் மெஹபூபா முஃப்தியை கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி உள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட்மாதம் 5-ஆம் தேதி ரத்து செய்யப்பட்ட பிறகு, மெஹபூபா முஃப்தி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டாா். ஓராண்டுக்கும் மேல் தடுப்புக் காவலில் இருந்தவா், சமீபத்தில் விடுவிக்கப்பட்டாா். இதையடுத்து அவா் முதல்முறையாக வெள்ளிக்கிழமை செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது, நான் தோ்தலில்போட்டியிட விரும்பவில்லை. எந்த அரசியலமைப்பின் கீழ் நான் இதுவரை தோ்தலில் போட்டியிட்டு வந்தேனோ, அந்தஅரசியலமைப்பு திரும்ப வழங்கப்படும் வரை, எனக்கு தோ்தலுடன் எந்ததொடா்பும் இல்லை என்றாா்.

இந்த பேட்டியின்போது சிறப்பு அந்தஸ்துள்ள மாநிலமாக இருந்த போது ஜம்மு-காஷ்மீா் பயன்படுத்திய கொடி மெஹபூபா முஃப்தியின் மேஜையில் இருந்தது. அதுவே தனதுகொடி என்றும், ஜம்முகாஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால், நாங்கள் மூவா்ண கொடியையும் ஏந்துவோம் என்று கூறியிருந்தார்.

மெஹபூபா முஃப்தியின் பேச்சுக்கு மாநில பாஜக தலைவர் ரவிந்தர்ரெய்னா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியில், ஜம்மு-காஷ்மீர் நம் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாகும், எனவே ஜம்முகாஷ்மீரில் ஒரே ஒருகொடியை மட்டுமே ஏற்ற முடியும், அதுதான் தேசியக் கொடி.” அந்த கொடியைத் தவிர வேறு எந்த கொடியையும் இந்த பூமியில் எந்த சக்தியாலும் ஏற்றமுடியாது”

தாய் மண்ணுக்காகவும், தேசத்துக்காகவும், கொடிக்காகவும் ஒவ்வொரு சொட்டுரத்தத்தையும் தியாகம் செய்வோம். “ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கொடியைத் திரும்ப கொண்டு வருவதற்கும், அரசியலமைப்பின் 370 வது பிரிவை மீட்டெடுப்பதற்கும் இந்தபூமியில் யாருக்கும் வலிமையும், அதிகாரமும்” இல்லை.

இந்த சிறப்பு அந்தஸ்தால் தான் பிரிவினைவாதமும், தீவிரவாதமும் வளர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இங்கு தேசியக்கொடி ஒன்றைத்தவிர எந்தக் கொடியும் ஏற்றக்கூடாது .

காஷ்மீர் மக்களைத் தூண்டும் நோக்கில் இதுபோன்ற “தீங்கு விளைவிக்கும் பேச்சுக்களை” பாஜக ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது , மெஹபூபா முஃப்தியின் ‘தேசத்துரோக’ கருத்துக்களை துணைநிலை ஆளுநர் மனோஜ்சின்ஹா கவனத்தில்கொண்டு, அவர் மீது தேசத்துரோக பேச்சுக்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்து தேசவிரோத சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும்.

“காஷ்மீர் மக்களைத் தூண்டுவரையில் பேச வேண்டாம் என முஃப்தி போன்ற தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். மாநிலத்தில் அமைதி, இயல்பு வாழ்க்கை மற்றும் சகோதரத்துவத்துக்கு எதிராக எந்த அசாம்விதங்களும் நடைபெற அனுமதிக்கமாட்டோம். அவ்வாறு ஏதாவது நடந்தால், முஃப்தி அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்,” என்று கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...