இரண்டு இளவரசர்களுக்கும், வளர்ச்சி என்ற என்ஜின்களுக்கும் இடையே போட்டி

இரண்டு இளவரசர்களுக்கும், வளர்ச்சிக்கான இரட்டை என்ஜின்களுக்கும் இடையே போட்டிநிலவுவதாக பிரதமர் மோடி பீகாரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது கூறினார்.

பீகார் சட்ட சபைக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முதற்கட்ட தேர்தல் நடந்துமுடிந்து உள்ளது. மேலும் இரண்டு கட்டங்களாக (3 மற்றும் 10 ம் தேதிகளில்) தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை 10 ம் தேதி நடக்கிறது. இதனிடையே பீகாரில் தேர்தல்பிரசாரத்தில் ஈடுபட்ட மோடி பேசியதாவது: மத்திய , மாநிலத்தில் ஒரேகூட்டணி ஆட்சியாக இரட்டை என்ஜினாக செயல் படும் தேசிய ஜனநாய கட்சிக்கும் பீகாரில் இரண்டு இளவரசர்களுக்கும் இடையே போட்டி நடைபெறுகிறது.

இளவரசர்களில் ஒருவர் உ.பி.,மாநிலத்தில் ஒருகூட்டணியை உருவாக்கினார். ஆனால் அங்கு கூட்டணி துடைத்து எறியப் பட்டது என ராகுலை பிரதமர் மோடி மறைமுகமாக சுட்டிக் காட்டினார். அந்த இளவரசர் தற்போது பீகாரில் முகாமிட்டுள்ளார். இவர் பீகார் இளவரசருக்கு ஆதரவை கொடுத்துள்ளார். மறுபுறம் மாநிலத்ததை இருளில் இருந்து வெளியேற்றி தேசிய ஜனநாயக கூட்டணியின் இரட்டை என்ஜின் அரசால் கொண்டுவரப்பட்ட வளர்ச்சி உள்ளது என மோடி கூறினார்

மேலும் அஜீரணக்கோளாறு, வாந்தி போன்றவற்றை உருவாக்கிய உணவை போன்று எதிர்கட்சிகளின் கூட்டணி அமைந்துள்ளது என்றார். தொடர்ந்து குடியுரிமை சட்டத்திருத்தம் , காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியது அயோத்தியில் ராமர் கோவில்,பாலகோட் விமான தாக்குதல் உள்ளிட்டவற்றில் எதிர்கட்சிகளின் நிலை குறித்தும் பிரதமர் பேசினார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...