`முருகனின் துணைகொண்டு யாத்திரையைத் தொடங்குகிறோம்!

தமிழகத்தில் பாஜக சார்பில், `நவம்பர் 6-ம்தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை வேல்யாத்திரை நடத்தப்படும்’ என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த யாத்திரையை திருத்தணியில் தொடங்கி திருச்செந்தூரில் முடிக்க பாஜக தமிழக தலைமை திட்டமிட்டிருந்தது. இந்தநிலையில், பாஜக-வின் வேல்யாத்திரைக்குத் தடைவிதிக்க தமிழக அரசு, டி.ஜி.பி-க்கு உத்தரவிட வேண்டும் என செந்தில்குமார், பாலமுருகன் ஆகியோர் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

இதுதொடர்பான விசாரணையின் போது, “கொரோனா இரண்டாவது, மூன்றாவது அலை ஏற்படும் என்று எச்சரிக்கப் பட்டிருக்கும் நிலையில், வேல்யாத்திரை போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க முடியாது என டி.ஜி.பி தரப்பில் முடிவெடுக்கப் பட்டிருக்கிறது. கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுநிகழ்ச்சிகளில் 100 பேருக்குமேல் கூடக் கூடாது என தடை உத்தரவு அமலில் இருக்கிறது. இந்த உத்தரவு நவம்பர் 16-ம் தேதிவரை இருக்கும் நிலையில், அதற்குப் பின்னரே இது குறித்து முடிவெடுக்க முடியும்” என்று தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பா.ஜ.க தரப்பில், பள்ளி, கல்லூரிகளைத்திறக்க அரசு முடிவெடுத்திருக்கும் நிலையில், வேல் யாத்திரையைத் தடை செய்வதுசரியல்ல. கொரோனா தொற்று குறைந்திருப்பதாக தமிழக அரசே தெரிவித்திருக்கிறது. வேல் யாத்திரையின்போது குறிப்பிட்ட எந்தப் பகுதியிலும் தங்கப்போவதில்லை. அதேபோல், குறிப்பிட்ட எந்தப்பகுதியும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படவில்லை என்று வாதிடப்பட்டது. மேலும், தனிமனித விலகலையே மத்திய அரசு வலியுறுத்தி வருவதாகவும் வாதம் முன்வைக்கப் பட்டது. தமிழக அரசின் வாதத்தை ஏற்று, இரண்டு வழக்குகளையும் சென்னை உயர் நீதிமன்றம் முடித்துவைத்தது.

இந்தநிலையில் பா.ஜ.க தரப்பில், `திருத்தணியில் இன்றுகாலை வேல் யாத்திரை தொடங்கும்’ என்ற தகவல் வெளியானது. இதனால் தடையை மீறி பா.ஜ.க வேல் யாத்திரையை மேற்கொள்ளபோவதாகப் பரபரப்பு ஏற்பட்டது. “வெற்றிவேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடைவிதித்திருப்பது சட்டத்துக்கு எதிரானது. நிபந்தனைகளுக்குட்பட்டுத்தான் வேல் யாத்திரையை பாஜக தொடங்கவிருக்கிறது” என சென்னையில் வி.பி.துரைசாமி கருத்து தெரிவித்தார்

இதற்கிடையே தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், “தங்களுடைய கடவுளை வழிபடுவது அடிப்படை உரிமை. அதன் அடிப்படையில் திருத்தணிக்கு செல்கிறேன்” என சென்னையில் தெரிவித்தார். முன்னதாக தமிழகத்தில் விழுப்பரம்உள்ளிட்ட பகுதிகளில் பா.ஜ.க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். தடையை மீறி வேல்யாத்திரை செல்லக்கூடும் என்பதால் இந்தக் கைது நடவடிக்கை எனச் சொல்லப்பட்டது.

இந்தநிலையில் சென்னையில் கோயம்பேடு பகுதியிலிருந்து திருத்தணி நோக்கி, தன்னுடைய ஆதரவாளர்களுடன், கையில்வேலுடன் தடையை மீறி யாத்திரையை தொடங்கினார் பா.ஜ.க தலைவர் எல்.முருகன். `முருகனின் துணைகொண்டு திருத்தணியில் யாத்திரையை தொடங்குகிறோம்’ என பா.ஜ.க-வினர் தெரிவித்தனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளி ...

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளித்த கோவிலை மீண்டும் கட்டுவோம்-அமித்ஷா உறுதி ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.,வின் தேர்தல் ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பக ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பகுதிகளை மத்திய அமைச்சர் பார்வையிட்டார் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார் குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' திட்டத்தைத் ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற நல்லாசிரியர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கல ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் பிரதமர் அறிவிப்புக்கு வரவேற்பு முதலாவது திருவள்ளுவர் கலாசார மையம் சிங்கப்பூரில் அமைக்கப்படும் என்று ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தட ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகள் அகற்றம் – நிர்மலா சீதாராமன் பெருமிதம் ''பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகளை, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ...

மருத்துவ செய்திகள்

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...