`முருகனின் துணைகொண்டு யாத்திரையைத் தொடங்குகிறோம்!

தமிழகத்தில் பாஜக சார்பில், `நவம்பர் 6-ம்தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை வேல்யாத்திரை நடத்தப்படும்’ என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த யாத்திரையை திருத்தணியில் தொடங்கி திருச்செந்தூரில் முடிக்க பாஜக தமிழக தலைமை திட்டமிட்டிருந்தது. இந்தநிலையில், பாஜக-வின் வேல்யாத்திரைக்குத் தடைவிதிக்க தமிழக அரசு, டி.ஜி.பி-க்கு உத்தரவிட வேண்டும் என செந்தில்குமார், பாலமுருகன் ஆகியோர் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

இதுதொடர்பான விசாரணையின் போது, “கொரோனா இரண்டாவது, மூன்றாவது அலை ஏற்படும் என்று எச்சரிக்கப் பட்டிருக்கும் நிலையில், வேல்யாத்திரை போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க முடியாது என டி.ஜி.பி தரப்பில் முடிவெடுக்கப் பட்டிருக்கிறது. கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுநிகழ்ச்சிகளில் 100 பேருக்குமேல் கூடக் கூடாது என தடை உத்தரவு அமலில் இருக்கிறது. இந்த உத்தரவு நவம்பர் 16-ம் தேதிவரை இருக்கும் நிலையில், அதற்குப் பின்னரே இது குறித்து முடிவெடுக்க முடியும்” என்று தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பா.ஜ.க தரப்பில், பள்ளி, கல்லூரிகளைத்திறக்க அரசு முடிவெடுத்திருக்கும் நிலையில், வேல் யாத்திரையைத் தடை செய்வதுசரியல்ல. கொரோனா தொற்று குறைந்திருப்பதாக தமிழக அரசே தெரிவித்திருக்கிறது. வேல் யாத்திரையின்போது குறிப்பிட்ட எந்தப் பகுதியிலும் தங்கப்போவதில்லை. அதேபோல், குறிப்பிட்ட எந்தப்பகுதியும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படவில்லை என்று வாதிடப்பட்டது. மேலும், தனிமனித விலகலையே மத்திய அரசு வலியுறுத்தி வருவதாகவும் வாதம் முன்வைக்கப் பட்டது. தமிழக அரசின் வாதத்தை ஏற்று, இரண்டு வழக்குகளையும் சென்னை உயர் நீதிமன்றம் முடித்துவைத்தது.

இந்தநிலையில் பா.ஜ.க தரப்பில், `திருத்தணியில் இன்றுகாலை வேல் யாத்திரை தொடங்கும்’ என்ற தகவல் வெளியானது. இதனால் தடையை மீறி பா.ஜ.க வேல் யாத்திரையை மேற்கொள்ளபோவதாகப் பரபரப்பு ஏற்பட்டது. “வெற்றிவேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடைவிதித்திருப்பது சட்டத்துக்கு எதிரானது. நிபந்தனைகளுக்குட்பட்டுத்தான் வேல் யாத்திரையை பாஜக தொடங்கவிருக்கிறது” என சென்னையில் வி.பி.துரைசாமி கருத்து தெரிவித்தார்

இதற்கிடையே தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், “தங்களுடைய கடவுளை வழிபடுவது அடிப்படை உரிமை. அதன் அடிப்படையில் திருத்தணிக்கு செல்கிறேன்” என சென்னையில் தெரிவித்தார். முன்னதாக தமிழகத்தில் விழுப்பரம்உள்ளிட்ட பகுதிகளில் பா.ஜ.க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். தடையை மீறி வேல்யாத்திரை செல்லக்கூடும் என்பதால் இந்தக் கைது நடவடிக்கை எனச் சொல்லப்பட்டது.

இந்தநிலையில் சென்னையில் கோயம்பேடு பகுதியிலிருந்து திருத்தணி நோக்கி, தன்னுடைய ஆதரவாளர்களுடன், கையில்வேலுடன் தடையை மீறி யாத்திரையை தொடங்கினார் பா.ஜ.க தலைவர் எல்.முருகன். `முருகனின் துணைகொண்டு திருத்தணியில் யாத்திரையை தொடங்குகிறோம்’ என பா.ஜ.க-வினர் தெரிவித்தனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...