ராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற்றால் உயிரிழந்தார்

ராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கிரண் மகேஸ்வரி, கொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்தார்.. இவருக்கு வயது 59.

ராஜஸ்தானின் ராஜ்சமந்த்தொகுதியை சேர்ந்தவர் கிரண் மகேஸ்வரி.. சத்ய நாராயண் என்ற கணவரும், ஒரு மகனும், ஒருமகளும் உள்ளனர்.

கடந்த 1994ல் நடந்த நகராட்சி கவுன்சிலில் வெற்றிபெற்று கிரண் தலைவரானார்.. அப்போதிருந்து 1999ம் ஆண்டு வரை 5 வருஷம் மேயர் பொறுப்பில் இருந்தவர்.. பாஜகவில் ராஜஸ்தான் பிரதேச மகளிர் அணியின் தலைவராக கடந்த 2000ல் நியமிக்கப்பட்டார்.

பிறகு கடந்த 2006ல் மகளிர் அணி தேசியதலைவராகவும், கடந்த 2011ல் அக்கட்சியின் தேசிய பொது செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டார்… கடந்த 14வது மக்களவை தேர்தலில் உதய்பூர்-ராஜ்சமந்த் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்பியாக உயர்ந்தார்.. இதைதவிர அரசின் துறைசார்ந்த பல்வேறு குழுக்களில் உறுப்பினராகவும் இருந்தவர்.

கடந்த 2013ம் ஆண்டு ராஜஸ்தானின் ராஜ்சமந்த் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்எல்ஏவானார்.. பாஜக தேசிய துணை தலைவராகவும் நியமிக்கப்பட்டார்… இப்படி பலவித உயர் பொறுப்புகளை தன்உழைப்பாலும், திறமையாலும், உயர்ந்தவர்.

இவருக்கு கடந்த சிலநாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது… இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மேதாந்தா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.. அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிரமான சிகிச்சைதரப்பட்டு வந்தது.. ஆனால், அதில் பலனின்றி காலமானார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் மிக உயரமான செனாப் ரயில் � ...

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம்: ஜூன் 6ல் திறந்து வைக்கிறார் பிரதமர் உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் நதி ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்� ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்தினால் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை’ ''பிரம்மபுத்திரா நதியை சீனா தடுத்து நிறுத்தினாலும், இந்தியாவுக்கு எந்த ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

மருத்துவ செய்திகள்

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...