ஐம்பொன் வேலை காணிக்கையாக செலுத்திய எல் முருகன்

பாஜக சார்பில் வெற்றிவேல் யாத்திரையில் கொண்டு வரப்பட்ட ஐம்பொன் வேலை, திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் உண்டியலில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நேற்று காணிக்கையாக செலுத்தினார். யாத்திரை நிறைவுவிழா பொதுக்கூட்டம் இன்று (டிச.7) திருச்செந்தூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்,போலீஸார் அனுமதி மறுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக பாஜக சார்பில் வெற்றிவேல் யாத்திரை கடந்த நவ.6-ம்தேதி திருத்தணியில் தொடங்கியது. இந்தயாத்திரை முருகப்பெருமானின் அறுபடைவீடுகள் வழியாக திருச்செந்தூரில் டிச.6-ம் தேதி நிறைவடையும் எனவும், டிச.7-ம் தேதி திருச்செந்தூரில் நிறைவுவிழா பொதுக்கூட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நேற்று காலை திருச்செந்தூர் வந்து செந்திலாண்டவர் கோயிலில் சுவாமி தரிசனம்செய்தார். முன்னதாக வெற்றிவேல் யாத்திரையில் கொண்டுவந்த வேலுடன், அவர் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து கோயிலுக்கு நடந்தே வந்தார். கோயிலில் சுவாமிதரிசனம் செய்த பிறகு, தங்க கொடிமரம் அருகில் உள்ள உண்டியலில், தான் கொண்டுவந்த ஐம்பொன்னால் ஆன சுமார் 3 அடி உயர வேலை காணிக்கையாக செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழ் கடவுள் முருகனை போற்றும் கந்தசஷ்டி கவசத்தை மிகவும் அருவருக்கத்தக்க வகையில் திரித்துவெளியிட்டனர். இதை யாரும் கேள்வி கேட்கவில்லை. 4 பேரை தமிழக அரசு கைதுசெய்தது. கைது செய்யப்பட்ட செந்தில்வாசன் என்பவர் திமுகவின் ஐடி பிரிவில் வேலைசெய்ததாக கூறியுள்ளார். திமுகவும் அதை மறுக்கவில்லை. எனவே, இதன் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து தமிழ்மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக வேல்யாத்திரை தொடங்கப்பட்டது.

சுவாமிமலை, பழமுதிர்ச் சோலை, திருப்பரங்குன்றம் வழியாக திருச்செந்தூர்வந்து முருகப்பெருமானிடம் வேலை காணிக்கையாக செலுத்தி இருக்கிறேன். யாத்திரை நிறைவு நிகழ்ச்சி திருச்செந்தூரில் இன்று (டிச.7) நடக்கிறது. மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கலந்துகொள் கிறார் என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...