பிரதமர் நரேந்திரமோடி, வங்கதேச நாட்டின் பிரதமர் ஷேக்ஹசினா ஆகியோருக்கு இடையிலான மெய்நிகர் உச்சிமாநாடு இம்மாதம் 17-ந் தேதி அன்று (17.12.2020) நடைபெற உள்ளது.
இருதரப்பு உறவுகள், குறிப்பாக கோவிட்டுக்கு பிந்தையகாலத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பான அனைத்து அம்சங்கள் குறித்தும் இரண்டு தலைவர்களும் உச்சிமாநாட்டில் விரிவாக விவாதிக்க உள்ளனர்.
இந்தியாவும், வங்கதேசமும் உயர்மட்டளவிலான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நடத்திவருகின்றன. 2019 அக்டோபரில், பிரதமர் ஷேக் ஹசினா அலுவலக பயணமாக இந்தியா வந்தார்.
2020 மார்ச்சில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க முஜிப்பார்ஷோ–வின் போது பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சிசெய்தி ஒன்றை அனுப்பினார். கோவிட் பெருந்தொற்று காலத்தில் இரண்டு தலைவர்களும் தொடர்ந்து, தொடர்பில் இருந்தனர்.
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |