நான் மிகவும் ஆசீர்வதிக்கப் பட்டதாக உணர்ந்தேன்

பிரதமர் நரேந்திரமோடி நேற்று திடீரென டெல்லியில் உள்ள குருத்வாராவுக்கு சென்று வழிபாடுநடத்தினார். முன்னறிவிப்பு இல்லாமல் பிரதமர் சென்றதால், பெரியளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.

டெல்லியில் உள்ள ரகாப்கஞ்ச் குருத்வாராவுக்கு பிரதமர் மோடி நேற்றுகாலை திடீரென சென்றார். அங்கு அவரை குருத்வாரா நிர்வாகிகள் வரவேற்றனர். குருத் வாராவில் மோடிவழிபட்டார். நேற்று முன்தினம் சீக்கிய மத குரு தேஜ் பகதூரின் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டநிலையில், தேஜ்பகதூருக்கு மோடி அஞ்சலி செலுத்தினார்.

முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென மோடிசென்றதால் அங்கு பெரிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. போக்குவரத்து தடைகளும் இல்லை. பஞ்சாப், ஹரியாணா வைச் சேர்ந்த சீக்கிய விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்திவரும் நிலையில், குருத்வாராவில் மோடி வழிபாடுநடத்தியிருப்பது குறிப்பிட தக்கது.

டெல்லி குருத்வாராவில் தான்வழிபட்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.

மேலும், ட்விட்டரில் அவர்வெளியிட்ட பதிவுகளில், ’’வரலாற்று சிறப்புமிக்க ரகாப்கஞ்ச் குருத்வாராவில் பிரார்த்தனை செய்தேன். அங்குதான் குருதேஜ்பகதூரின் உடல்தகனம் செய்யப்பட்டது. நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்ந்தேன். உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கானோரைப் போல நானும் குருதேஜ்பகதூரின் கருணையால் ஈர்க்கப்பட்டேன். வரலாற்று ரீதியாக ஆசீர்வதிக் கப்பட்ட இந்த தருணத்தில் குரு தேஜ்பகதூரின் லட்சியங்களைப் போற்றிக் கொண்டாடுவோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

வரலாற்று சிறப்புமிக்க ரகாப்கஞ்ச் குருத்வாராவில் பிரார்த்தனை செய்தேன். அங்குதான் குரு தேஜ்பகதூரின் உடல்தகனம் செய்யப்பட்டது. நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்ந்தேன்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...