நான் மிகவும் ஆசீர்வதிக்கப் பட்டதாக உணர்ந்தேன்

பிரதமர் நரேந்திரமோடி நேற்று திடீரென டெல்லியில் உள்ள குருத்வாராவுக்கு சென்று வழிபாடுநடத்தினார். முன்னறிவிப்பு இல்லாமல் பிரதமர் சென்றதால், பெரியளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.

டெல்லியில் உள்ள ரகாப்கஞ்ச் குருத்வாராவுக்கு பிரதமர் மோடி நேற்றுகாலை திடீரென சென்றார். அங்கு அவரை குருத்வாரா நிர்வாகிகள் வரவேற்றனர். குருத் வாராவில் மோடிவழிபட்டார். நேற்று முன்தினம் சீக்கிய மத குரு தேஜ் பகதூரின் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டநிலையில், தேஜ்பகதூருக்கு மோடி அஞ்சலி செலுத்தினார்.

முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென மோடிசென்றதால் அங்கு பெரிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. போக்குவரத்து தடைகளும் இல்லை. பஞ்சாப், ஹரியாணா வைச் சேர்ந்த சீக்கிய விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்திவரும் நிலையில், குருத்வாராவில் மோடி வழிபாடுநடத்தியிருப்பது குறிப்பிட தக்கது.

டெல்லி குருத்வாராவில் தான்வழிபட்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.

மேலும், ட்விட்டரில் அவர்வெளியிட்ட பதிவுகளில், ’’வரலாற்று சிறப்புமிக்க ரகாப்கஞ்ச் குருத்வாராவில் பிரார்த்தனை செய்தேன். அங்குதான் குருதேஜ்பகதூரின் உடல்தகனம் செய்யப்பட்டது. நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்ந்தேன். உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கானோரைப் போல நானும் குருதேஜ்பகதூரின் கருணையால் ஈர்க்கப்பட்டேன். வரலாற்று ரீதியாக ஆசீர்வதிக் கப்பட்ட இந்த தருணத்தில் குரு தேஜ்பகதூரின் லட்சியங்களைப் போற்றிக் கொண்டாடுவோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

வரலாற்று சிறப்புமிக்க ரகாப்கஞ்ச் குருத்வாராவில் பிரார்த்தனை செய்தேன். அங்குதான் குரு தேஜ்பகதூரின் உடல்தகனம் செய்யப்பட்டது. நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்ந்தேன்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் மிக உயரமான செனாப் ரயில் � ...

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம்: ஜூன் 6ல் திறந்து வைக்கிறார் பிரதமர் உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் நதி ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்� ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்தினால் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை’ ''பிரம்மபுத்திரா நதியை சீனா தடுத்து நிறுத்தினாலும், இந்தியாவுக்கு எந்த ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...