உறைய வைக்கும் குளிரில் கிச்சடி சுவைத்த மோடி!

பிரதமர் நரேந்திரமோடி உத்தரகாண்ட் மாநிலம் மானாவில் பனிபிரதேசத்தில் கடல் மட்டத்தில் இருந்து 11,300 அடி உயரத்தில் பூஜ்ஜிய டிகிரி செல்சியஸில் உடலை உறையவைக்கும் குளிரில் எல்லை சாலை அமைப்பினரின் தகர கூடாரத்தில் தங்கி இரவைகழித்தார். அப்போது அவர் கிச்சடியை ருசித்து சாப்பிட்டார்.

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக உத்தராகண்ட் மாநிலம் சென்றார். வெள்ளிக்கிழமை உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் உள்ள இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஜாலி கிராண்ட் விமான நிலையத்தில் பிரதமர் மோடி இறங்கினார்.

இதையடுத்து ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற கேதார்நாத் கோயிலுக்குச் சென்ற பிரதமர்மோடி அங்கு தரிசனம் செய்தார். அப்போது அங்குள்ள மலைவாழ் மக்களின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் வெள்ளைநிற உடையை பிரதமர் மோடி அணிந்திருந்தார்.

அதன்பிறகு கேதார்நாத், பத்ரிநாத் கோவில்களில் ரூ.3,400 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட இருக்கும் சாலை மற்றும் ரோப்கார் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். குறிப்பாக சீனாஎல்லையை இணைக்கும் வகையில் மனாவில் இருந்து மனாபாஸ் வரையிலான சாலை ரூ.574 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்தபணி 2026 மார்ச்சில் முடிவடைய உள்ளது.

இந்நிலையில் பின்னர் மானா கிராமத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். இதையடுத்து நேற்று மானா அருகே கடல்மட்டத்தில் இருந்து 11,300 அடி உயரத்தில் பனிபிரதேசத்தில் எல்லை சாலை அமைப்பினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இதையடுத்து பிரதமர் மோடி நேற்று இரவு அங்கேயே தங்கினார். இதுபற்றிய அறிவிப்பு தாமதமாக வந்ததால் அதிகாரிகள் திகைத்துபோயினர். இருப்பினும் பிரதமர் மோடி தங்குவதற்காக ஏற்பாடுகள் விரைவாக செய்து முடிக்கப் பட்டன.

அதன்படி தற்காலிகமாக அமைக்கப்பட்ட கூடாரத்தில் பிரதமர் மோடி தங்கினார். மேலும் எல்லைசாலை அமைப்பினருக்கான சமையல் தொழிலாளி சமைத்த உணவை அவர் சாப்பிட்டார். பிரதமர் மோடி கிச்சடியை விரும்பி சாப்பிடுவார் என்பதால் அங்கிருந்த பொருட்களை வைத்து கிச்சடி சமைக்கப்பட்டது. மேலும் மாண்டவே கி ரொட்டி, சட்னி, புட்டு ஆகியவற்றையும் பிரதமர் ருசிபார்த்தார்.

இதுபற்றி எல்லை சாலை அமைப்பின் அதிகாரிகள் கூறுகையில், ‛‛பிரதமர் மனாவில் எங்களுடன் தங்க இருப்பதாக திடீரென்று கூறினர். இருப்பினும் 72 மணிநேரத்துக்கு முன்புகூறியதால் நாங்கள் உஷாராகி ஏற்பாட்டை தீவிரப்படுத்தினோம். இங்கு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத நிலையில் உடனடியாக அதனைசெய்தோம். தற்காலிகமாக அமைத்த கூடாரத்தில் பிரதமர் மோடி தங்கினார். இந்த கூடாரம் வெறும்தகரத்தால் ஆனது.

இந்த கூடாரத்தில் இருந்து இரவில் தொழிலாளர்களுடன் அவர் கலந்துரையாடினர். இந்த வேளையில் கிச்சடி சமைக்க பிரதமர் மோடி கூறினார். பிரதமருக்காக எந்த உணவுபொருட்களும் கொண்டு வரப்படவில்லை. இதனால் தொழிலாளர்களுக்காக வைக்கப்பட்டு இருந்த ரேஷன் பொருட்கள் மூலம் உணவுதயாரித்து வழங்கப்பட்டது.

இந்த இடம் கடல் மட்டத்தில் இருந்து 11,300 அடி உயரத்தில் உள்ளது. இங்கு இரவுநேரத்தில் பூஜ்ஜியம் டிகிரி வெப்பநிலை நிலவும். இதனால் அறையை சூடாக வைத்திருக்க சிறிய மின்ஹீட்டர் பிரதமர் மோடியின் கூடாரத்தில் பயன் படுத்தப்பட்டது. வேறு எந்த வசதிகளும் பயன்படுத்தப்பட வில்லை” என்றார்.

மேலும் உணவு தயாரித்த தேவேந்திரா, ராஜேஷ், அனிதேஷ் குமார் மற்றும் சுரேஷ்சைனி ஆகியோரை பிரதமர் மோடி பாராட்டினார். மேலும் அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில் அவர்களின் சேவையை பாராட்டி, ‛‛கடின உழைப்பால் தான் அனைத்தும் அடையாளப்படுத்தப் படுகிறது” என்ற வாசகத்தை பிரதமர் மோடி எழுதினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...