நாராயணசாமியின் தவறான செயல் பாடுகளால் புதுச்சேரி பின்னோக்கி சென்றுள்ளது என பாஜகவில் இணைந்தபிறகு நமச்சிவாயம் சாடியுள்ளார். 2021-ல் பாஜக ஆட்சி புதுச்சேரியில் உறுதி என்றும் குறிப்பிட்டார்.
காங்கிரஸ்சில் உள்ள உட்கட்சிப்பூசலால் அங்கிருந்து விலகி டெல்லியில் இன்று நமச்சிவாயம் பாஜகவில் இணைந்தார்.அதன்பிறகு நமச்சிவாயம் கூறுகையில், “வளமான புதுச்சேரிதான் எண்ணம். அதற்காக பாஜகவில் இணைந்துள்ளோம். புதுச்சேரிக்கான வளர்ச்சியை மோடி கொடுப்பார் என்ற நம்பிக்கையுள்ளது. பிரதமர் மோடி பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை உருவாக்கி, உலகளவில் இந்தியாவை தலைநிமிரச் செய்தவர். மோடி தலைமையில் இந்தியா ஒளிர்கிறது.
அதுபோல் புதுச்சேரியும் ஒளிரவேண்டும் என்பதேநோக்கம். முதல்வர் நாராயணசாமியின் தவறான செயல்பாடுகளால் புதுச்சேரி பின்னோக்கி சென்றுள்ளது. அதை முன்னோக்கி கொண்டுசெல்லவும், புதுச்சேரியின் வளர்ச்சிக்காகவும் இம்முடிவு எடுத்துள்ளோம்.
நிச்சயமாக புதுச்சேரியில் பாஜக ஆட்சியைகொண்டுவர பாடுபடுவோம். மக்கள் தயாராக உள்ளனர். 2021-ல் பாஜக ஆட்சிமலர்வது உறுதி. வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியை நிறுவ இரவு பகலாக பாடுபடுவோம்” என குறிப்பிட்டார்.
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |