இந்தியா பல்வேறு துறைகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது

பாஜக ஆட்சியின் கீழ் இந்தியாபல்வேறு துறைகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது. அனைத்து நிலைகளிலும் இந்தியா முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பாஜகவை பொறுத்த வரை, மூன்றுதாரக மந்திரங்களை அடிப்படையாக கொண்டு செயல் படுகிறது. அவை சேவை, உறுதி, அர்ப்பணிப்பு ஆகும். ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே, சாமானியமக்களின் நலனுக்காக உழைத்துவரும் ஒரேகட்சி பாஜக மட்டுமே. ஒரே குடும்பத்தை சுற்றிவரும் கட்சி அல்ல. அதனால்தான்,பாஜக இன்று மத்தியில் ஆட்சிசெய்து கொண்டிருக்கிறது.

பாஜக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் ஒன்றை கூறிக்கொள்கிறேன். பொதுமக்களுக்கும், கட்சிக்கும் இடையே ஒருநம்பிக்கை பாலமாக நீங்கள் செயல்பட வேண்டும். மக்கள் நலனுக்காக மத்தியஅரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை அவர்களிடத்தில் நீங்கள் எடுத்துக்கூற வேண்டும்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி பெறப்போவது உறுதி. இதற்காக கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

கட்சியின் தேசியத் தலைவர்ஜே.பி. நட்டா கூறுகையில், “நாடுமுழுவதும் பாஜகவின் வாக்கு வங்கி அதிகரித்துவருகிறது. குறிப்பாக மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. அங்கு பாஜக விரைவில் புதியஅத்தியாயம் படைக்கும் என உறுதி அளிக்க விரும்புகிறேன்” என்றார்.

செயற்குழு கூட்டத்துக்குப் பிறகு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும்போது, “கரோனா தடுப்பூசி திட்டத்தை தொடங்கியபோது, எதிர்க்கட்சிகள் பல்வேறுசந்தேகங்களை எழுப்பினர். ஆனால், இன்று 100 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டிருக்கிறது.இதற்கு செயற்குழு பாராட்டுதெரிவித்தது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு வட்டார, மாவட்ட வளர்ச்சிகவுன்சில் தேர்தல் நடைபெற்றது. அங்கு ஜனநாயக நடைமுறையில் பங்கேற்க மக்களிடம் உள்ள ஆர்வம் குறித்தும் ஆலோசிக்கப் பட்டது” என்றார்-

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன் – முருகன் சாடல் 'விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங்குடியின பெண் ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு நன்றி ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முட ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது – L முருகன் பேட்டி ''மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,'' ...

மருத்துவ செய்திகள்

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...