அதிமுக – பாஜக கூட்டணியால் தமிழகம் முன்னேற்றம் அடையும்

அதிமுக – பாஜக கூட்டணியால் தமிழகம் முன்னேற்றம் அடையும் என மத்திய அமைச்சர் விகே.சிங் தெரிவித்தார்.

மத்தியசாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சரும், தமிழ்நாடு பாஜக தேர்தல் இணைப் பொறுப்பாளருமான வி.கே.சிங், மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசின்பட்ஜெட் கரோனாவால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையை மீட்டெடுக்கும் வகையில் தயாரிக்கப் பட்டுள்ளது.

பட்ஜெட்டில் தனிநபர்களுக்கு வருமான வரிச்சலுகை உள்பட எந்த சலுகையும் வழங்கப்படவில்லை என்கிறார்கள். நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தால் தனிநபர்களுக்கு தானாகவே பலன் கிடைக்கும்.

இந்த பட்ஜெட்டில் அடிப்படை கட்டமைப்புவசதி, தொழில்துறை, சுகாதாரத்துறை, பாதுகாப்பு, பெண்கள்நலன் உள்பட அனைத்து துறையினருக்கும் கடந்த ஆண்டுகளைவிட கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எல்ஐசியின் பங்குகளை தனியாருக்கு விற்பதால் எல்ஐசி மேம்படும்.

இந்தியா- இலங்கை இடையே ஏற்பட்ட கச்சத் தீவு ஒப்பந்தம் தற்போதும் தொடர்கிறது. இலங்கை அரசு இந்தியாவுடன் நட்புடன் உள்ளது. இந்தியாவின் முதலீடுகளை ஏற்றுக் கொள்கிறது. கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு ஆராய்ந்துவருகிறது.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தற்போது குறைந்துள்ளது. சிலமீனவர்கள் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதாலும், எல்லைதண்டி மீன்பிடிப்பதாலும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இருப்பினும் இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சினைகளுக்கு சமூகதீர்வு காணப்படுகிறது.இந்திய – சீனா எல்லைவரைபடம் தவறுதலாக வடிவமைக்கபட்டுள்ளது. இருநாடுகளின் எல்லை சரியாக வரையறை செய்யப்படவில்லை. சீனா பலமுறை இந்தியாவுக்குள் ஊடுறுவி உள்ளது.

சீனா 5 முறை இந்திய எல்லைக்குள் ஊடுறுவினால் இந்தியா 50 முறை சீனா எல்லைக்குள் ஊடுறுவியுள்ளது. ஆனால் இதை நாங்கள் வெளியில் சொல்வதில்லை.

சீனாவில் எல்லைமீறலை தடுக்க அவ்வப்போது பதிலடி கொடுத்து வருகிறோம். சீனாவின் செயலிகளுக்கு தடைவிதிப்பது, பொருட்களை வாங்க மறுப்பது போன்று சீனா மீது பொருளாதார ரீதியான தாக்குதலை செய்துவருகிறோம்.

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. மத்திய அரசுடன் அதிமுக இணக்கமாக உள்ளது. தமிழகத்திலும் அதேநிலை தொடர்ந்தால் மாநிலத்திற்கு பல்வேறு நல்ல திட்டங்களை நிறைவேற்ற முடியும்.

தமிழகத்தில் அதிகளவில் சாலைப்பணிகள் நிறைவேற்றப் பட்டுள்ளன. இதனால் தமிழகத்தில் அதிகளவில் சுங்ககட்டண வசூல் மையங்கள் செயல்படுகின்றன.

இவ்வாறு வி.கே.சிங் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...