சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றத்தால்தான் இந்தநிலை

இந்தியாவில் தற்போது பெட்ரோல்விலை உயர்வு மிகப்பெரிய பிரச்சினையாக எழுந்துள்ளது. தங்கத்தைவிட பெட்ரோல் விலைதான் அதிகமாக உயர்த்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான நகரங்களில் பெட்ரோல்விலை 100 ரூபாயைத் தாண்டியுள்ளதால் வாகனஓட்டிகள் பெரும் அதிருப்தியில் உள்ளனர் பெட்ரோலிய பொருட்கள் விலையேற்றத்துக்கு தாங்கள் காரணமில்லை என்று நரேந்திர மோடி சமீபத்தில் கூறினார்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கச்சாஎண்ணெய் இறக்குமதியைக் கட்டுப்படுத்த சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படாததால்தான் இப்போது இந்தநிலை ஏற்பட்டுள்ளதாக மோடி கூறியிருந்தார். அதேபோல, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விரைவில் பெட்ரோல் விலையேற்றத்துக்கு தீர்வுகிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்தியாவில் பெட்ரோல் விலையேற்றத்துக்கு சர்வதேச கச்சா எண்ணெய்விலை நிலவரம்தான் காரணம் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரான தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், “சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றத்தால்தான் இந்தநிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தொடர்ந்து கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. கச்சா எண்ணெய்விநியோகம் இயல்பு நிலைக்குத் திரும்பியவுடன் இந்தியாவிலும் பெட்ரோலியப் பொருட்களின் விலை கட்டுக்குள் வரும். பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவருவது குறித்து கோரிக்கைகள் உள்ளன. இதுகுறித்த இறுதிமுடிவை ஜிஎஸ்டி கவுன்சில்தான் மேற்கொள்ளும். பெட்ரோல் விலையேற்றத்துக்கு மத்திய அரசை எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது முறையல்ல” என்றார்.

கொரோனா ஊரடங்கால் மத்திய அரசின் வரிவருவாய் குறைந்து செலவுகள் அதிகரித்ததையும் தர்மேந்திர பிரதான் சுட்டிக் காட்டினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...