பொம்மை தயாரிப்பில் சுயசார்பு-நரேந்திர மோடி

நம் நாட்டின் பொம்மை தயாரிப்புதொழிலில் எவ்வளவு வலிமை மறைந்து இருக்கிறது என்பது தெரிய வருகிறது. இந்த வலிமையை அதிகரிப்பது, அதன் அடையாளத்தை அதிகரிப்பது, சுயசார்பு இந்தியா பிரசாரத்தின் ஒருபெரிய பகுதியாகும்.

நாட்டின் முதல் பொம்மை கண்காட்சியில் நாம் எல்லாம் ஒரு அங்கமாகமாறி இருப்பது நம் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்.

கலாசாரத்தை வலுப்படுத்த…இது ஒருவணிக அல்லது பொருளாதார நிகழ்வு மட்டுமல்ல. இது நாட்டின் பழமையான அழகான விளையாட்டு கலாசாரத்தை வலுப்படுத்துவதற்கான தொடர்புஆகும்.

பொம்மைகளுடனான நமதுஉறவு, நாகரிகத்தை போலவே பழமையானது. நமது கோவில்கள், பொம்மை தயாரிக்கும் வளமையான கலாசாரத்துக்கு சான்றாக நிற்கின்றன.

இந்தகண்காட்சியில் 30 மாநிலங்களை சேர்ந்த 1000-க் கும் மேற்பட்ட கைவினைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர், பள்ளிகள் தொடங்கி பன்னாட்டு நிறுவனங்கள்வரை பங்கேற்கிறார்கள் என்பது எனக்கு தெரிவிக்கப்பட்டது. உங்கள் அனைவருக்கும் இது பொம்மை வடிவமைப்புகள், புதுமை, தொழில்நுட்பம் முதல் சந்தைப்படுத்துதல், பேக்கேஜிங்வரை உங்கள் அனுபவங்களை பற்றி விவாதிக்கும் ஒரு மன்றமாக இருக்கும்.

இந்த கண்காட்சியில், ஆன்லைன் விளையாட்டு துறையின் சுற்றுச்சூழல் அமைப்பு பற்றிய அறிய உங்களுக்கு வாய்ப்புகிடைக்கும். இங்குள்ள குழந்தைகளுக்காக நிறைய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதை காண விரும்பினேன்.

 

இந்திய பொம்மைககள்இந்திய வாழ்க்கை முறையின் ஒருபகுதியாக இருந்த மறுபயன்பாடு மறுசுழற்சி கலாசாரத்தை திட்டமிடுகின்றன. பொம்மை உற்பத்தியாளர்கள் குறைவான பிளாஸ்டிக்கை பயன்படுத்தவேண்டும். மறுசுழற்சி செய்யக் கூடிய பொருட்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டும்.

சுற்றுச்சூழல் மற்றும் உளவியல் ஆகிய இரண்டுக்கும் சிறப்பான பொம்மைகளை உருவாக்கவேண்டும் என்று நாட்டின் பொம்மை உற்பத்தியாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். பொம்மைகளில் நாம் குறைவான பிளாஸ்டிக்கை பயன்படுத்தி, மறுசுழற்சி செய்யக் கூடிய பொருட்களை அதிகமாக பயன்படுத்தலாமா?

பொம்மை தயாரிப்பு துறையில் நாம் சுயசார்பு அடைய வேண்டும்.

கடந்த 70 ஆண்டுகளில் இந்தியகலைஞர்களின் பாரம்பரியம் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது. இறக்குமதி செய்யப்படுகிற பொம்மைகள், வெளிப்புற எண்ணங்களை அவற்றுடன் கொண்டுவந்தன. நாம் இந்த சூழ்நிலையை ஒன்றிணைந்து மாற்ற வேண்டும். உள்ளூர் தயாரிப்புகளுக்காக நாம் கூடுதல் குரல்கொடுக்க வேண்டும்.

பொம்மை திரள்களை உருவாக்குவதில் மாநிலங்களுக்கு சமமான பங்களிப்பு உண்டு.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...