ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ 9 லட்சம் கோடி ஏலக்காய் எட்டும் – பிரதமர் மோடி உறுதி

‘ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ.9 லட்சம் கோடி இலக்கை எட்டும்,’ என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

டில்லி பாரத் மண்டபத்தில் 120 நாடுகள் பங்கேற்ற, ஜவுளி தொடர்பான பாரத் டெக்ஸ் -2025 கண்காட்சி பிப்.14 முதல் பிப்.17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று பிரதமர் மோடி, இந்த கண்காட்சியை பார்வையிட்டார். கண்காட்சியில் அவர் பேசியதாவது:இங்கு வரும் தொழில்முனைவோர் 120 நாடுகளின் கலாசாரத்தை அறிந்து கொள்கிறார்கள். பாரத் டெக்ஸ் நமது பாரம்பரியம் மற்றும் விக்ஸித் பாரத்தின் ஒரு பார்வையை நமக்கு வழங்குகிறது. நாம் விதைக்கும் விதை மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

2025ம் ஆண்டு பொது பட்ஜெட்டில் பருத்தி உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்காக, குறிப்பாக நீண்ட இழை பருத்தி ரகத்தின் உற்பத்தியை அதிகரிக்க, ஐந்து ஆண்டு பருத்தி இயக்கம் அறிவிக்கப்பட்டது. அதன்படிதேசிய பருத்தி தொழில்நுட்ப இயக்கத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தற்போது நம் நாடு, ஜவுளி ஏற்றுமதியில் உலகில் ஆறாம் இடத்தில் உள்ளது. மொத்தம் 3 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்கிறோம். இதை மும்மடங்காக உயர்த்தி, 9 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கு, 2030ம் ஆண்டுக்கு முன்னதாகவே எட்டப்படும் என்று நம்புகிறேன். அதிகம் பேருக்கு வேலை அளிக்கும் இந்த துறை நாட்டின் மொத்த உற்பத்தியில் 11% பங்களிக்கிறது,

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பி ...

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பிரதமர் மோடி மேற்கு ஆசியா மற்​றும் உக்​ரைன் போர்​களுக்கு விரைவில் முடிவு ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இர ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; -இந்திய ஷியா பிரிவு முஸ்லீம் தலைவர். "இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; இறந்தவர்கள் நம் தலைவர்கள் அல்ல"- ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சிய ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சியினை கொடுத்த ஈரான் ஈரானின் செயல்பாடுகள் விபரீதமாக உள்ளன, யாரும் எதிர்பாராதபடி துருக்கியினை ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா அமித்ஷாவின் ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையி ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் பாடமெடுப்பதெல்லாம் நகைப்புக்குரியது. ஈரனின் ஐஆர்ஐஎஸ் தேனா போர்கப்பல் இந்தியாவின் கடற்கரையிலிருந்து 200 ...

வெளியுறவுக் கொள்கை காலாவதியான ...

வெளியுறவுக் கொள்கை   காலாவதியான காங்கிரஸின் சித்தாந்தங்களால் அல்ல “இந்தியா கண்மூடித்தனமாக ஈரான் பக்கம் நிற்க வேண்டும் என்று ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...