கன்னியாகுமரி மக்களவைதொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என பாஜக தலைமை இன்றுஅறிவித்துள்ளது.
2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் எச். வசந்த்குமார் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனால், உடல்நலக்குறைவு காரணமாக 2020 – ஆகஸ்ட் 28-ம் தேதி வசந்த்குமார் உயிரிழந்தார். இதனையடுத்து, கன்னியாகுமரி மக்களவைதொகுதி காலியானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலும் ஏப்ரல்-6-ம் தேதி நடைபெறும் என்று இந்தியத்தேர்தல் ஆணையம் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி அறிவித்தது.
அதிமுகவுடன் தேர்தல் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி உள்ளதால், சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதிபங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இன்று அதிகாலை, 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 சட்டமன்ற தொகுதிகளும், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என பாஜக தலைமை அறிவித்துள்ளது.
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |