பொன். ராதாகிருஷ்ணனை மக்கள், பார்லிமென்டிற்கு அனுப்ப வேண்டும்

நாகர்கோவிலில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய உள்துறை அமைச்சர் அமித் ஷா செட்டிகுளம் முதல் வேப்பமூடுவரை ரோடுஷோ மூலம் தொண்டர்களை உற்சாக படுத்தினார். கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் பாஜக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்னன் மீண்டும் போட்டியிடுகிறார். தேர்தல்பிரசாரத்திற்கு குமரி மாவட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்றுகாலை நாகர்கோவில் வந்தார். பின்னர் கார்மூலம் சுசீந்திரம் சென்று தாணுமாலையன் சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் வீடுவீடாக சென்று மோடி அரசின் சாதனைகள் அடங்கிய துண்டுபிரசுரங்களை வழங்கி பிரசாரம் செய்தார். பின்னர் கார் மூலம் நாகர்கோவில் இந்துகல்லுரி அருகிலுள்ள நீலவேணியம்மன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, செட்டிகுளம் ஜங்ஷனில் இருந்து அலங்கரிக்கப்பட்ட திறந்தலாரியில் ஏறி சாலையின் இருபுறமும் கூடியிருந்த பல்லாயிரக் கணக்கான கட்சி தொண்டர்களை பார்த்து கையசைத்தபடியே மக்களை சந்தித்தார். அமித் ஷாவுடன், முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்னன்,தமிழக பாஜக தலைவர் முருகன், தமிழக தேர்தல்பொறுப்பாளர் சி.டி ரவி, தமிழக அரசின் டெல்லிபிரதிநிதி தளவாய் சுந்தரம், மாவட்ட செயலாளர் அசோகன், முன்னாள் நகராட்சி தலைவர் மீனா தேவ் ஆகியோர் உடன்வந்தனர்.

மதியம் 12.50மணிக்கு வேப்பமூடு பகுதியில் காமராஜர் சிலைக்கு ஆளுயர ரோஜா பூ மாலை அணிவித்து அமித்ஷா மரியாதை செலுத்தினார். பின்னர் அங்குகூடியிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்ஙளை பார்த்து கையசைத்த படி தலைக்குனிந்து வணங்கினார். பின்னர் கார் மூலம் மணிமேடை வழியாக வடசேரி பஸ்ஸ்டாண்ட் பின்னால் உள்ள உடுப்பி ஓட்டலில் தேர்தல்தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டார்.

இதன் பின்னர் அமித்ஷா கூறியதாவது: தமிழகத்தில் பா.ஜ.,- அ.தி.மு.க., கூட்டணியை பெருவாரியான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும். பொன். ராதாகிருஷ்ணனை கன்னியாகுமரி லோக்சபா தொகுதிமக்கள், பார்லிமென்டிற்கு அனுப்ப வேண்டும். இந்த தேர்தல் மூலம் தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றம் வரவேண்டும்

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.