பொன். ராதாகிருஷ்ணனை மக்கள், பார்லிமென்டிற்கு அனுப்ப வேண்டும்

நாகர்கோவிலில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய உள்துறை அமைச்சர் அமித் ஷா செட்டிகுளம் முதல் வேப்பமூடுவரை ரோடுஷோ மூலம் தொண்டர்களை உற்சாக படுத்தினார். கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் பாஜக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்னன் மீண்டும் போட்டியிடுகிறார். தேர்தல்பிரசாரத்திற்கு குமரி மாவட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்றுகாலை நாகர்கோவில் வந்தார். பின்னர் கார்மூலம் சுசீந்திரம் சென்று தாணுமாலையன் சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் வீடுவீடாக சென்று மோடி அரசின் சாதனைகள் அடங்கிய துண்டுபிரசுரங்களை வழங்கி பிரசாரம் செய்தார். பின்னர் கார் மூலம் நாகர்கோவில் இந்துகல்லுரி அருகிலுள்ள நீலவேணியம்மன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, செட்டிகுளம் ஜங்ஷனில் இருந்து அலங்கரிக்கப்பட்ட திறந்தலாரியில் ஏறி சாலையின் இருபுறமும் கூடியிருந்த பல்லாயிரக் கணக்கான கட்சி தொண்டர்களை பார்த்து கையசைத்தபடியே மக்களை சந்தித்தார். அமித் ஷாவுடன், முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்னன்,தமிழக பாஜக தலைவர் முருகன், தமிழக தேர்தல்பொறுப்பாளர் சி.டி ரவி, தமிழக அரசின் டெல்லிபிரதிநிதி தளவாய் சுந்தரம், மாவட்ட செயலாளர் அசோகன், முன்னாள் நகராட்சி தலைவர் மீனா தேவ் ஆகியோர் உடன்வந்தனர்.

மதியம் 12.50மணிக்கு வேப்பமூடு பகுதியில் காமராஜர் சிலைக்கு ஆளுயர ரோஜா பூ மாலை அணிவித்து அமித்ஷா மரியாதை செலுத்தினார். பின்னர் அங்குகூடியிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்ஙளை பார்த்து கையசைத்த படி தலைக்குனிந்து வணங்கினார். பின்னர் கார் மூலம் மணிமேடை வழியாக வடசேரி பஸ்ஸ்டாண்ட் பின்னால் உள்ள உடுப்பி ஓட்டலில் தேர்தல்தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டார்.

இதன் பின்னர் அமித்ஷா கூறியதாவது: தமிழகத்தில் பா.ஜ.,- அ.தி.மு.க., கூட்டணியை பெருவாரியான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும். பொன். ராதாகிருஷ்ணனை கன்னியாகுமரி லோக்சபா தொகுதிமக்கள், பார்லிமென்டிற்கு அனுப்ப வேண்டும். இந்த தேர்தல் மூலம் தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றம் வரவேண்டும்

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...