மத்திய, மாநில அரசுகள் இணையும்போது நிச்சயமாக நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியும்

தாராபுரம் தனிதொகுதியின் வளர்ச்சியில் தனிக் கவனம் செலுத்தப்படும் என்று அத்தொகுதி பாஜக வேட்பாளரும், மாநில தலைவருமான எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தாராபுரம் தனிதொகுதியானது அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. இந்தத்தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார். இந்தநிலையில், வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில் அமராவதி சிலை அருகே அவருக்கு கூட்டணிக்கட்சி நிர்வாகிகளின் சார்பில் திங்கள்கிழமை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, புறவழிச் சாலையில் உள்ள தாராபுரம் சட்டப்பேரவை தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தல்பணிமனையை எல்.முருகன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதையடுத்து, அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணிக்கட்சி நிர்வாகிகளிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். இதன்பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மத்திய, மாநில அரசும் இணையும்போது நிச்சயமாக நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியும். இதற்கு உதரணமாகத்தான் தமிழகத்துக்கு ரூ.5 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை-கொல்லம் தேசியநெடுஞ்சாலை திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படும்போது இந்த ஊரின் வளர்சியைக் கருத்தில்கொள்ள முடியும். இந்தப் பகுதிக்குத் தேவையான மருத்துவக் கல்லூரி, அரசு கலைக்கல்லூரி கொண்டுவரமுடியும். அதேபோல, கிடப்பில் உள்ள ரயில்வே திட்டங்களை துரிதப்படுத்திக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும். விதைப் பண்ணை மிகிவும் முக்கியமானதாகும். தாராபுரம் நெல் விதைகளைக் கொடுக்கும் ஊராக உள்ளது. ஆகவே, நொல்விதைகளை இந்தியா முழுவதும் கொடுப்பதற்காக சிறப்பு பொருளாதார மண்டலத்தை கொண்டு வரமுடியும். தாராபுரத்தின் மேம்பாடு, வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டும் எங்களது பணிகள் இருக்கும் என்றார். இந்த சந்திப்பின் போது, அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிநிர்வாகிகள் உடனிருந்தனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அசாமில் அமைதி ஏற்படுவதை காங்கி ...

அசாமில் அமைதி ஏற்படுவதை காங்கிரஸ் விரும்பவில்லை – அமித்ஷா '' அசாமில் அமைதி ஏற்பட்டு வளர்ச்சி ஏற்படுவதை காங்கிரஸ் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ரூ 4 ...

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ரூ 4.50 லட்சம் கோடியை சேமிக்க முடியும் – அண்ணாமலை ''ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவதால் பணத்தை சேமித்து, ...

சத்திஷ்கரை காட்டிலும் தமிழகத் ...

சத்திஷ்கரை காட்டிலும் தமிழகத்தில் மிகப்பெரிய ஊழல் – அண்ணாமலை '' சத்தீஸ்கரில் நடந்த மதுபான ஊழலை விட தமிழகத்தில் ...

போர் நிறுத்த முயற்சிக்கு பிரதம ...

போர் நிறுத்த முயற்சிக்கு பிரதமர் மோடிக்கு நன்றி- புதின் கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ரஷ்யா - உக்ரைன் இடையே ...

ரூ 1000 கோடி ஊழலை எதிர்த்து போராட் ...

ரூ 1000 கோடி ஊழலை எதிர்த்து போராட்டம் – அண்ணாமலை 'சென்னை டாஸ்மாக் அலுவலகத்தை, முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்' என, ...

கிரியேட்இன் இந்தியா திட்டத்தி ...

கிரியேட்இன் இந்தியா திட்டத்திற்கு 8,600 கோடி நிதி – அஷ்வினி வைஷ்ணவ் கிரியேட் இன் இந்தியா திட்டத்திற்கு ரூ.8,600 கோடி நிதி ...

மருத்துவ செய்திகள்

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...