மத்திய, மாநில அரசுகள் இணையும்போது நிச்சயமாக நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியும்

தாராபுரம் தனிதொகுதியின் வளர்ச்சியில் தனிக் கவனம் செலுத்தப்படும் என்று அத்தொகுதி பாஜக வேட்பாளரும், மாநில தலைவருமான எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தாராபுரம் தனிதொகுதியானது அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. இந்தத்தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார். இந்தநிலையில், வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில் அமராவதி சிலை அருகே அவருக்கு கூட்டணிக்கட்சி நிர்வாகிகளின் சார்பில் திங்கள்கிழமை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, புறவழிச் சாலையில் உள்ள தாராபுரம் சட்டப்பேரவை தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தல்பணிமனையை எல்.முருகன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதையடுத்து, அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணிக்கட்சி நிர்வாகிகளிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். இதன்பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மத்திய, மாநில அரசும் இணையும்போது நிச்சயமாக நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியும். இதற்கு உதரணமாகத்தான் தமிழகத்துக்கு ரூ.5 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை-கொல்லம் தேசியநெடுஞ்சாலை திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படும்போது இந்த ஊரின் வளர்சியைக் கருத்தில்கொள்ள முடியும். இந்தப் பகுதிக்குத் தேவையான மருத்துவக் கல்லூரி, அரசு கலைக்கல்லூரி கொண்டுவரமுடியும். அதேபோல, கிடப்பில் உள்ள ரயில்வே திட்டங்களை துரிதப்படுத்திக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும். விதைப் பண்ணை மிகிவும் முக்கியமானதாகும். தாராபுரம் நெல் விதைகளைக் கொடுக்கும் ஊராக உள்ளது. ஆகவே, நொல்விதைகளை இந்தியா முழுவதும் கொடுப்பதற்காக சிறப்பு பொருளாதார மண்டலத்தை கொண்டு வரமுடியும். தாராபுரத்தின் மேம்பாடு, வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டும் எங்களது பணிகள் இருக்கும் என்றார். இந்த சந்திப்பின் போது, அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிநிர்வாகிகள் உடனிருந்தனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.