மேற்குவங்க பாஜக தலைவர் திலீப்கோஷ் வாகனத்தின் மீது தாக்குதல்

மேற்குவங்க பாஜக தலைவர் திலீப்கோஷ் வாகனத்தின் மீது சிலர் கற்கள், நாட்டு வெடி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் திலீப் கோஷ் காயமடைந்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பாஜக தொண்டர்கள் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் வன்முறைகள் அதிகளவில் நடந்துவந்த நிலையில் தற்போது தேர்தல் பிரச்சாரத்தின் போது இது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அம்மாநில சட்டசபைக்கு 8 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 3 கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்துள்ளது.

நான்காம்கட்ட வாக்குப் பதிவு 10ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பாஜக தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷின் வாகனம் உட்பட அவரது கான்வாய் கூச்பெஹார் மாவட்டத்தில் இன்று தாக்கப்பட்டது சிதால்குச்சி பகுதியில் நடைபெற்ற தேர்தல்பிரசார பேரணியில் கலந்து கொண்டு புறப்பட்டபோது அவரது கார் மற்றும் பிறவாகனங்கள் மீது நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் செங்கற்கள் வீசப்பட்டன. இதில் பாஜக தலைவர் திலீப் கோஷ் காயமடைந்துள்ளார். தோள்பட்டையில் ஏற்பட்ட காயங்களுடன் புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் திலீப்கோஷ் பகிர்ந்துள்ளார்.

பாஜக தலைவர்கள் மற்றும் அவர்களின் வாகனங்கள் மீது தொடர்ந்துதாக்குதல் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளதாக மேற்கு வங்க மாநில பாஜக குற்றம் சாட்டியுள்ளது. மாநில பாஜக தலைவர் திலீப் கோஷின் காரும் திரிணாமுல் கட்சியினரால் தாக்கப் பட்டுள்ளதாக. பாஜகவின் வங்காள பிரிவு அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர்பக்கத்தில் சேதமடைந்த வாகனங்களின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளது.

நடந்த தாக்குதல்குறித்து திலீப் கோஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கொடிகளை அசைத்த ஒருசிலர் நாட்டு வெடிகுண்டுகள், செங்கற்கள் மற்றும் கற்களை எறிந்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த தாக்குதலில் தனது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ள தாகவும் திலீப்கோஷ் கூறியுள்ளார். தனது காயத்தையும் சேதமடைந்துள்ள வாகனத்தின் புகைப்படங்களையும் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார் திலீப் கோஷ்.

மேற்கு வங்க மாநில காவல் துறையினர் இந்த தாக்குதலை தடுக்கவோ தன்னை பாதுகாக்கவோ முற்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார் திலீப்கோஷ். இம்மாநிலத்தில் ஜனநாயகத்தின் நிலைபரிதாபகரமாக உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த குண்டர்கள் வெடிகுண்டுகளை வீசியும் கற்களை வீசியும் தாக்குதல் நடத்துகின்றனர். பாஜக நிர்வாகிகள், தொண்டர்களையும் தாக்குகின்றனர் என்று திலீப் கோஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...