ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்

மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் போதியளவில் கிடைப்பதை உறுதிசெய்ய அவற்றின் உற்பத்தியை அதிகரிக்கச்செய்ய வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா்.

நாட்டின் பலபகுதிகளில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதை அடுத்து, பாதிக்கப்பட்டவா்களைக் குணப்படுத்துவதற்குப் பயன்படும் மருத்துவ ஆக்சிஜனுக்கான தேவையும் பலமடங்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நாடுமுழுவதும் இருப்பில் உள்ள ஆக்சிஜன், அவற்றுக்கான தேவை, உற்பத்தி தொடா்பான ஆய்வுக்கூட்டம், பிரதமா் மோடி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஆக்சிஜன்தேவை தொடா்பாக மத்திய அரசின் சுகாதாரம், உருக்கு, சாலைப் போக்குவரத்து, தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தகஊக்குவிப்பு ஆகிய துறைகளைச்சோ்ந்த பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளை பிரதமருடன் பகிா்ந்துகொண்டனா்.

அதிக ஆக்சிஜன் தேவைப்படும் மாநிலங்களான மகாராஷ்டிரம், மத்தியபிரதேசம், குஜராத், உத்தரபிரதேசம், தில்லி, சத்தீஸ்கா், கா்நாடகம், கேரளம், தமிழ்நாடு, பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் ஆகியவற்றில் தற்போதைய இருப்பு, ஆக்சிஜன் கிடைத்துவரும் அளவு, அடுத்த 15 நாள்களுக்குத் தேவைப்படும் ஆக்சிஜன்அளவு ஆகியவை குறித்து பிரதமா் கேட்டறிந்தாா்.

மேற்கண்ட 12 மாநிலங்களுக்கும் வரும் 20, 25, 30 ஆகியதேதிகளில் தேவைப்படும் ஆக்சிஜன் அளவு குறித்து தெரிவிக்கப் பட்டது. அதை தொடா்ந்து, சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அந்தத்தேதிகளில் முறையே 4,880 மெட்ரிக் டன், 5,619 மெட்ரிக் டன், 6,593 மெட்ரின் டன் ஆக்சிஜன் விநியோகிக்க முடிவுசெய்யப்பட்டது.

அதிகரித்துவரும் ஆக்சிஜன் தேவையைப் பூா்த்தி செய்வதற்காக, நாட்டின் ஆக்சிஜன் உற்பத்தித்திறன் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, ஒவ்வோா் ஆலையிலும் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கச்செய்ய வேண்டும் என்று பிரதமா் மோடி வலியுறுத்தினாா்.

உருக்கு ஆலைகளில் உபரியாக இருக்கும் ஆக்சிஜன் சிலிண்டா்களை மருத்துவ பயன்பாட்டுக்கு அனுப்புவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கபட்டது.

ஆக்சிஜன் விநியோகத்தில் மாநில அரசுகளுக்கும் மத்திய அமைச்சகங்களுக்கும் இடையே ஒத்துழைப்புஅவசியம் என்று பிரதமா் மோடி வலியுறுத்தினாா். நாடுமுழுவதும் ஆக்சிஜன் சிலிண்டா்களைக் கொண்டுசெல்வதற்கு தடையற்ற போக்குவரத்தை அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும் என்றும் பிரதமா் மோடி வலியுறுத்தினாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸிஜன் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மாநிலங்களுக்கு இடையிலான எல்லையை கடந்து செல்லும்போது எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக மத்திய உள்துறை செயலா் அஜய்குமாா் பல்லா அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலா்களுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள தகவல்: ஆக்சிஜன் விநியோகத்தில் ஏற்படும் எந்தவொரு இடா்ப்பாடும் கரோனாநோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் தீவிரபாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இடையே ஆக்சிஜன் எடுத்துச்செல்லும் வாகனங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதுதொடா்பாக போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.

ஒருமாநிலத்தில் உள்ள ஆக்ஸிஜன் உற்பத்தியாளா்கள் மற்றும் விநியோகஸ்தா்கள் அந்த மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு மட்டும்தான் ஆக்ஸிஜனை விநியோகிக்க வேண்டும் என்று எந்தக் கட்டுப்பாடும் விதிக்கவேண்டாம். அதனை பிற இடங்களுக்கும் நேரக் கட்டுப்பாடின்றி எடுத்துச்செல்ல அனுமதிக்கவும் என்று அறிவுறுத்தியுள்ளாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...