மம்தாவின் நடத்தை வேதனையானது ; ராஜ்நாத் சிங்

பிரதமர் மோடியை மம்தா பானர்ஜி அரைமணி நேரம் காக்க வைத்து விட்டதாக வெளியான தகவல் தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மம்தா பானர்ஜியை கண்டித்துள்ளார்.

ஒடிசாவில் புயல்பாதிப்பு குறித்து ஆய்வு நடத்திய பிரதமர் மோடி முதல்வர் நவீன் பட்நாயக்குடன் ஆலோசனை நடத்தினார். இதேபோல் மேற்குவங்கத்திலும் மோடி-மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இடையே ஆலோசனை நடைபெறவிருந்தது.

இதன்படி இந்தகூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி திட்டமிட்டபடி வந்தபோது மம்தா பானர்ஜி அரை மணிநேரம் தாமதமாக வந்ததாக தெரிகிறது. மேலும் புயல்சேத விவரங்களை அறிக்கையாக பிரதமரிடம் ஒப்படைத்த மம்தா வேறு ஒருஇடத்தில் புயல் சேதநிலவரத்தை பார்வையிட வேண்டியதுள்ளது என்று கூறி உடனடியாக அங்கு இருந்து புறப்பட்டுசென்றார் என்று தகவல்கள் கூறுகின்றன.

மம்தா பிரதமரை அரை மணிநேரம் காக்க வைத்து விட்டதாகவும் அவர் திமிர்பிடித்தவர் என்றும் பாஜகவினர் குற்றம் சாட்டினார்கள். ஒரு முதல்வர் பிரதமருடனான சந்திப்பை தவிர்த்துவிட்டு வெளியேறுவது இதுவே முதல்முறை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினார்கள். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் மம்தா பானர்ஜியை கண்டித்துள்ளளார்.

இது தொடர்பாக அவர் டுட்டரில் கூறுகையில், ‘ மேற்கு வங்கத்தில் நடந்த இன்றைய நிகழ்வுகள் அதிர்ச்சியளிக்கின்றன. முதலமைச்சரும், பிரதமரும் நிறுவனங்கள் அல்ல, மக்களும் அல்ல. இவர்கள் இருவரும் பொதுசேவை மேற்கொள்வதற்காக அரசியலமைப்பு மீது சத்தியம் செய்துள்ளனர். பேரழிவுநேரத்தில் வங்காள மக்களுக்கு உதவிவழங்க வந்த பிரதமரை தவிர்க்கும் வகையிலான மம்தாவின் நடத்தை வேதனையானது என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ ...

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ.7,200 கோடி திட்டங்கள். பிரதமர் நரேந்திர மோடி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி ஒரு 10 பவுன் நகைக்காக தனிப்படை அமைத்து எவ்வித ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ்;பிரதமர் மோடி குற்றச்சாட்டு பீஹாரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்ப ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி; இந்திய ராணுவம் பெருமிதம் லடாக்கில் சுமார் 15,000 அடி உயரத்தில் ஆகாஷ் வான் ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உ ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உதவும் புதிய திட்டம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவும் ரூ.24 ஆயிரம் கோடி தன் தானிய ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்பட ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...