பிரதமர் மோடியை எக்ஸ் வலைத்தளத்தில் பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 100 மில்லியன் கடந்துள்ளது

பிரதமர் மோடியை எக்ஸ் வலை தளத்தில் பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனை (10 கோடி) கடந்துள்ளது. உலக அளவில் எக்ஸ் தளத்தில் அதிக பாலோயர்கள் கொண்ட 7வது பிரபலமாக உள்ளார் மோடி.

உலக அளவில் தலைவர் பொறுப்பில் உள்ளவர்களை ஏராளமானோர் ,எக்ஸ் வலை தளம் உட்பட அனைத்து சமூக வலை தளத்திலும் பாலோ செய்து வருகின்றனர்.

அந்தவகையில் பிரதமர் மோடிக்கும் அனைத்து சமூக வலை தளங்களிலும் பாலோயர்கள் அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில் எக்ஸ் வலை தளத்தில் பிரதமரை பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 100 மில்லியன் (10 கோடி) ஆக அதிகரித்து உள்ளது.

இவரை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பிடன் (38.1 மில்லியன் ), துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது (11.2 மில்லியன்) மற்றும் போப் பிரான்சிஸ் (18.5 மில்லியன்) ஆகியோர் உள்ளனர்.

இந்தியாவிலும் அரசியல் தலைவர்களை பாலோ செய்வர்களில் பிரதமரே முதலிடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறார். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்-க்கு 26.4 மில்லியன் , டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 27.5 மில்லியன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் (19.9 மில்லியன்), மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (7.4 மில்லியன்), ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் மற்றும் என்சிபி (எஸ்பி) தலைவர் சரத் பவார் (2.9 மில்லியன்) என அடுத்தடுத்து உள்ளனர்.

அரசியல் வாதிகளை தவிர விராட் கோலி (64.1 மில்லியன்), பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மர் ஜூனியர் (63.6 மில்லியன்), அமெரிக்க கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸ் (52.9 மில்லியன்) உள்ளிட்டோரும் பிரதமருக்கு அடுத்த நிலையிலே யே உள்ளனர்.

பிரதமரை பின் தொடருபவர்கள் எண்ணிக்கை எக்ஸ் வலை தளத்தை தவிர்த்து யூடியூப்பில் 25 மில்லியன் பேர்களும் இன்ஸ்டாகிராம் கணக்கில் 91 மில்லியன் பேரும் பின்தொடர்கின்றனர்.

பிரதமரின் எக்ஸ் வலை தளம் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 30 மில்லியன் பாலோயர்கள் அதிகரித்து உள்ளனர். பிரதமர் சமூக வலை தளத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்துவதாலும், அனைத்து தரப்பினரின் கேள்விகளுக்கும் உடனடியாக பதில் அளிப்பதாலும், யாராலும் அணுகுவதற்கு எளிதாக இருப்பதும் பாலோயர்கள் அதிகரிப்பிற்கு காரணமாக கூறப்படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“திருவனந்தபுரத்தில் பாஜக பெற் ...

“திருவனந்தபுரத்தில் பாஜக பெற்ற வெற்றி சாதாரணமானது அல்ல..” – பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக தாம்பரம் வரை இயக்கப்படும் ...

பிரதமர் மோடியை சிலிர்க்கவைத்த ...

பிரதமர் மோடியை சிலிர்க்கவைத்த சிறுமியின் கைவண்ணம் பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்த ஒரு சிறுமியின் கையில் இருந்த ஓவியத்தை ...

மாறாதது இனி மாறும் – பிரதமர் ம ...

மாறாதது இனி மாறும் – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி நேற்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ...

சிக்‌ஷாபத்ரி த்விஷாதப்தி பெரு ...

சிக்‌ஷாபத்ரி த்விஷாதப்தி பெருவிழாவில் பிரதமர் நரேந்திரயின்  மோடி உரை சிக்‌ஷாபத்ரி த்விஷாதப்தி பெருவிழாவில் காணொலிக்காட்சி மூலம் இன்று நிகழ்த்திய ...

நான் கட்சித் தொண்டன். இவா்தான் ...

நான் கட்சித் தொண்டன். இவா்தான் என்  தலைவா் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் 1980-ஆம் ஆண்டு, ஜனதா ...

தேசியஜனநாயக கூட்டணியில் மீண்ட ...

தேசியஜனநாயக கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரன் அதிமுக தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரனின் ...

மருத்துவ செய்திகள்

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...