முன்னோடி மாவட்டங்கள் திட்டத்தின் கீழ் இதுவரை 21 சதவீத மக்கள் பலன்

பிரதமரின் கனவுத்திட்டமான முன்னோடி மாவட்டங்கள் திட்டத்தின் கீழ் இதுவரை 21 சதவீத மக்கள் பலன்அடைந்துள்ளதாக நிதி ஆயோக் அமைப்பின் சிஇஓ அமிதாப்காந்த் கூறியுள்ளார்.

நாட்டின் செயல்திறன் மிக்க மாவட்டங்களை தேர்வுசெய்து அவற்றின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் பிரதமர் நரேந்திரமோடி முன்னோடி மாவட்டங்கள் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தின் மூலம் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் மாற்றங்களைக் கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கபட்டது. ஒவ்வொரு மாவட்டத்தின் தனித்துவத்துக்கு ஏற்ப திட்டங்களை வகுக்கும் இத்திட்டத்தை ஐநா அமைப்பின் மேம்பாட்டு திட்டப்பிரிவு ஆய்வுசெய்து சமீபத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் இத்திட்டத்தினால் இந்தியமக்கள் தொகையில் 21 சதவீதத்தினரின் வாழ்க்கையில் வளமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்றும், கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து உள்ளிட்டவற்றில் நல்லமுன்னேற்றம் காணப்படுகிறது என்றும் பாராட்டியுள்ளது. இந்ததிட்டம் நாட்டின் வளர்ச்சியை துரிதப்படுத்தும் வினையூக்கியாக இருக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் இந்த அறிக்கை குறித்து நிதி ஆயோக்அமைப்பின் சிஇஓ அமிதாப் காந்த் கூறியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்திய இத்திட்டம் குறித்து ஐ.நா. சுதந்திரமான ஆய்வை மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் அறிக்கை முடிவுகளைப் பார்க்கும்போது இத்திட்டத்தில் பங்காற்றியது குறித்து பெரும் மனதிருப்தி ஏற்படுகிறது.

இந்திய மக்கள் தொகையில் ஐந்தில் ஒருபங்கு மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள இத்திட்டம் மிகநீண்ட பயணமாகும். இத்திட்டத்தின் இலக்கு குறித்தும், இலக்கை அடைவதற்கான வழிமுறைகள் குறித்தும் தெளிவான தொலை நோக்கு பார்வை பிரதமருக்கு இருந்தது.

இத்திட்டம் குறித்த ஆரம்பக்கட்ட ஆலோசனைகளின் போது முன்னோடி மாவட்டங்களின் ஆதாரங்களில் கவனம் செலுத்துவதை விடவும் முக்கியம், மாவட்ட நிர்வாகத்தை மேம்படுத்துவதில் கவனம்செலுத்துவது என்று பிரதமர் குறிப்பிட்டார். இத்திட்டத்தின் செயல்பாடுகளை, கட்டமைப்பை உருவாக்க சிலமாதங்கள் தேவைப்பட்டன.

தற்போது இத்திட்டம் நாட்டின்வேர்களில் மாற்றங்களைச் சாத்தியப் படுத்தியுள்ளது. இத்திட்டம் கடந்த 3 ஆண்டுகளில் நாட்டின் பலபின்தங்கிய மாவட்டங்களிலும் முன்னேற்றத்தை உண்டாக்கி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். –

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...