அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வருவேன்

வளர்ச்சிக்கு ஆர்வமுள்ள வட்டாரங்கள் என்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, ”அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வருவேன். அப்போது, இந்ததிட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வோம்,” என, குறிப்பிட்டார்.

இந்நிலையில், வளர்ச்சிக்கு ஆர்வமுள்ள மாவட்டங்கள் என்றதிட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது.இதைத்தொடர்ந்து, வளர்ச்சிக்கு ஆர்வமுள்ள வட்டாரங்கள் திட்டம், கடந்த ஜன., 7ல் துவக்கப்பட்டது. நாடுமுழுதும், 329 மாவட்டங்களில், 500 வட்டாரங்களில் இது செயல்படுத்தப்படுகிறது.

மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் நோக்கத்தில், இந்த வட்டாரங்களில் அரசு மற்றும் பொது சேவைகளை வழங்குவதில் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

இந்ததிட்டம் செயல்படுத்தப்படும் வட்டாரங்களின் பஞ்சாயத்து தலைவர்கள், அதிகாரிகள் உட்பட, 1,000த்துக்கும் மேற்பட்டோருடன், ‘வீடியோகான்பரன்ஸ்’ வாயிலாக பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் பேசியதாவது:

நாடு முழுதும், 112 மாவட்டங்களில், வளர்ச்சிக்கு ஆர்வமுள்ள மாவட்டங்கள் திட்டம் சிறப்பாக செயல்படுத்த பட்டது. இதனால், 25 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந் துள்ளனர். தற்போது இந்த மாவட்டங்கள், உத்வேகம் அளிக்கும் மாவட்டங்களாக மாறியுள்ளன.

இந்த வகையில், வளர்ச்சிக்கு ஆர்வமுள்ள வட்டாரங்கள்திட்டம், 500 வட்டாரங்களில் செயல்படுத்தப்படுகிறது. அடுத்த ஓர் ஆண்டுக்குள், 100 வட்டாரங்களாவது, உத்வேகம் அளிக்கும்வட்டாரங்களாக மாற வேண்டும்.

அடுத்த ஆண்டு அக்., நவம்பரில் மீண்டும் நாம் ஆய்வுசெய்வோம். அப்போது, நான் மீண்டும் வந்து உங்களுடன் பேசுவேன். என்னைப்போல ஒரு சிலருக்கே, ஆட்சியை நீண்ட காலம் நடத்தும் வாய்ப்பு கிடைக்கும்.

என் அனுபவத்தில், பட்ஜெட் ஒதுக்கீட்டால் மட்டுமே ஒருதிட்டத்தை சிறப்பாக செயல்படுத்த முடியாது. அனைத்து வளங்களையும் ஒருங்கிணைத்து, அனைவரும் இணைந்து செயல் பட்டால் மட்டுமே வெற்றி காண முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...