சம்பூர்ணதா அபியான் என்ற இயக்கத்தை நித்தி ஆயோக் நாளை தொடங்குகிறது

நாடு முழுவதும் உள்ள முன்னேற விரும்பும் மாவட்டங்களில் 6 முக்கிய குறியீடுகளையும், முன்னேற விரும்பும் வட்டங்களில் 6 முக்கிய குறியீடுகளையும் அடைவதற்கான தொடர்ச்சியான முயற்சியை நித்தி ஆயோக் மேற்கொள்கிறது. இதன் ஒரு பகுதியாக நாளை முதல்  (2024 ஜூலை 4) செப்டம்பர் 30-ம் தேதி வரை ‘சம்பூர்ணாத அபியான்’ என்ற 3 மாத இயக்கத்தை நித்தி ஆயோக் தொடங்குகிறது.

சம்பூர்ணதா இயக்கம் 112 முன்னேற விரும்பும் 500 வட்டாரங்களில் அடையாளம் காணப்பட்ட 6 குறியீடுகளில் செறிவூட்டலை அடையும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில், வட்ட அளவில் கவனம் செலுத்தப்படும் 6 குறியீடுகள்:

  1. கர்ப்பகால கவனிப்புக்காக பதிவு செய்யும் கர்ப்பிணிப் பெண்களின் சதவீதம்
  2. நீரிழிவு நோய்க்கு பரிசோதனை செய்பவர்களின் விழுக்காடு
  3. ரத்த அழுத்த பரிசோதனை விழுக்காடு
  4. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் இணை உணவு உட்கொள்ளும் கர்ப்பிணிப் பெண்களின் சதவீதம்
  5. மண் மாதிரி சேகரிப்பு இலக்கில் உருவாக்கப்பட்ட மண்வள அட்டைகளின் சதவீதம்
  6. வட்டத்திலுள்ள மொத்த சுய உதவிக் குழுக்களில் சுழல் நிதி பெற்ற சுய உதவிக் குழுக்களின் விழுக்காடு

‘சம்பூர்ணதா அபியான்’ இயக்கத்தின் கீழ் முன்னேற விரும்பும் மாவட்டங்களில் அடையாளம்காணப்பட்ட 6 குறியீடுகள்:

  1. கர்ப்பகால கவனிப்புக்காக பதிவு செய்த கர்ப்பிணிப் பெண்களின் சதவீதம்
  2. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் இணை உணவு உட்கொள்ளும் கர்ப்பிணிப் பெண்களின் சதவீதம்
  3. முழுமையாக நோய்த்தடுப்பூவி செய்யப்பட்ட குழந்தைகளின் சதவீதம்
  4. வழங்கப்பட்ட மண்வள அட்டைகளின் எண்ணிக்கை
  5. இடைநிலைக் கல்வியில் மின்சார வசதி உள்ள பள்ளிகளின் விழுக்காடு
  6. கல்வி தொடங்கிய 1 மாதத்திற்குள் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கும் பள்ளிகளின் விழுக்காடு

நாட்டின் பின்தங்கிய மற்றும் தொலைதூர பகுதிகளின் விரைவான வளர்ச்சியை உறுதிசெய்வதற்காக 112 மாவட்டங்களை உள்ளடக்கிய முன்னேற விரும்பும் மாவட்டங்கள் திட்டம் 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் முக்கிய குறிகாட்டிகளை மேம்படுத்துவதில் இத்திட்டம் உறுதியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்  வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, முன்னேற விரும்பும் வட்டங்கள் திட்டம் 2023-ம் ஆண்டில் பிரதமரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் அத்தியாவசிய சேவைகளில் செறிவூட்டலை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளி ...

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளித்த கோவிலை மீண்டும் கட்டுவோம்-அமித்ஷா உறுதி ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.,வின் தேர்தல் ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பக ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பகுதிகளை மத்திய அமைச்சர் பார்வையிட்டார் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார் குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' திட்டத்தைத் ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற நல்லாசிரியர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கல ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் பிரதமர் அறிவிப்புக்கு வரவேற்பு முதலாவது திருவள்ளுவர் கலாசார மையம் சிங்கப்பூரில் அமைக்கப்படும் என்று ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தட ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகள் அகற்றம் – நிர்மலா சீதாராமன் பெருமிதம் ''பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகளை, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ...

மருத்துவ செய்திகள்

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...