மூத்த பத்திரிகையாளரும் நாடாளுமன்ற மாநிலங்களவை (பாஜக) முன்னாள் உறுப்பினரும் (2003 – 2009 & 2010 – 2018), ‘தி பயனீர்’ நாளிதழின் முன்னாள் தலைமை நிர்வாகி மற்றும் ஆசிரியரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய மூத்த தலைவருமான திரு. சந்தன் மித்ரா (66) இன்று (செப். 2) காலமானார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை அம்பலப்படுத்தியதில் இவரது பங்களிப்பு அளப்பரியது. பிற பத்திரிகைகளுக்கு முன்னோடியாக (பயனீர் என்றால் அதுவே பொருள்) நிருபர் கோபிநாத் மூலமாக மித்ரா, அன்றைய ஊழல் அரசுக்கு எதிராக நடத்திய இதழியல் யுத்தம் என்றும் நன்றிக்குரியது.
2008 – 2009 ஆண்டுகளில், ‘தி பயனீர்’ நாளிதழில் என்ன செய்தி வெளியாகப் போகிறதோ என்று தினமும் மன்மோகன் சிங் அரசு அஞ்சியதுண்டு. பல அன்பான வேண்டுகோள்கள், ஆசைகாட்டல்கள், மிரட்டல்களைப் பொருட்படுத்தாமல் சந்தன் மித்ரா அந்த எழுத்துப் போரை நடத்தி தேசம் காத்தார்.
முன்னோடி இதழாளருக்கு அஞ்சலி!
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |