நாட்டின் பாதுகாப்புச் சூழல் கடந்த இரு ஆண்டுகளில் நல்ல முறையில் மேம்பட்டுள்ளது

நாட்டின் பாதுகாப்புச் சூழல் கடந்த இருஆண்டுகளில் நல்ல முறையில் மேம்பட்டுள்ளதாகவும், பயங்கரவாத மற்றும் இடதுசாரி தீவிரவாத வன்முறை சம்பவங்கள் குறைந்துள்ளதாகவும் மத்திய உள்துறை இணையமைச்சா் கிஷண்ரெட்டி கூறினாா்.

ஜம்மு-காஷ்மீரின் மஜீன்கிராமத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் கட்டப்பட இருக்கும் வெங்கடாசலபதி கோயிலுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

அதில் பங்கேற்ற பிறகு அமைச்சா் கிஷண்ரெட்டி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த 2 ஆண்டுகளில் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதுடன், பாதுகாப்புச் சூழல் நன்றாக மேம்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் கடலோரபாதுகாப்பு உறுதிப்படுத்தப் பட்டதுடன், ஊடுருவல் முயற்சிகள், கிளா்ச்சி நடவடிக்கைகள், இடதுசாரி தீவிரவாதம், பயங்கரவாதம் என எந்தவொரு நிகழ்வும் ஏற்படவில்லை. எல்லைப்பகுதி தவிா்த்து பயங்கரவாத நடவடிக்கைகள் எங்கும் இல்லை. ஒன்றிரண்டு நிகழ்வுகள் தவிர, நாட்டில் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் கடந்த 2 ஆண்டுகளில் எங்கும் நிகழவில்லை.

ஜம்முகாஷ்மீா் மற்றும் லடாக் வளா்ச்சிக்கென மத்திய அரசு பல்வேறு திட்டங்களை யோசித்திருந்தது. ஆனால், கரோனா சூழல் காரணமாக அதில்சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீா் மக்களின் கருத்தை அறியவும், வளா்ச்சிக்கான அவா்களது தேவையை தெரிந்துகொள்ளவும் பிரதமா் நரேந்திர மோடி உத்தரவின் பேரில் 36 மத்திய அமைச்சா்கள் யூனியன் பிரதேசத்தின் ஒவ்வொருபகுதிக்கும் சென்றுள்ளோம்.

கடவுளின் ஆசீா்வாதத்தால் கரோனா போரில் நாம்வென்று, ஜம்மு-காஷ்மீரின் வளா்ச்சிக்காக மக்களின் தேவையை அறிந்து அதை செயல்படுத்துவதில் மீண்டும் கூடுதல்கவனம் செலுத்தப்படும். ஜம்மு-காஷ்மீரில் கட்டப்படும் வெங்கடாசலபதி கோயில், மதரீதியிலான சுற்றுலாவுக்கு ஊக்கமளிப்பதாக அமையும். வைஷ்ணவி தேவி கோயிலுக்காக வருவோா், இனி வெங்கடாசலபதி கோயிலையும் தரிசிப்பா். இதனால் பிரதேசமக்கங்களுக்கு பொருளாதார ரீதியிலான பலன்கள் கிடைக்கும் என்று கிஷண்ரெட்டி கூறினாா்.

ஜம்மு-காஷ்மீரின் மஜீன் கிராமத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சாா்பில் வெங்கடாசலபதி கோயிலும், அதுசாா்ந்த இதர கட்டுமானங்களும் மேற்கொள்வதற்காக 62.02 ஏக்கா் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...