சாதாரண மக்கள் அமைச்சர்களாவதை எதிர் கட்சிகளால் ஜீரணித்துக் கொள்ள இயலவில்லை

கொரோனா வைரஸ் (Corona Virus) பரவல் காரணமாக கடந்த ஆண்டு 3 நாடாளுமன்ற கூட்டத் தொடர்களும் முன்கூட்டியே நிறைவடைந்தது. மேலும் குளிர்கால கூட்டத் தொடர் ரத்து செய்யப் பட்டது. இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்தபோதிலும், ஐந்து மாநில சட்ட சபை தேர்தல்களை கருத்தில் கொண்டு பாதியிலேயே முடித்துக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் பாராளுமன்ற மழைக்கால (Monsoon Session of Parliament) கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் 13 ஆம் தேதி முடிகிறது. இந்த கூட்டத் தொடரில் 29 மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முதல் நாளான இன்று மக்களவை, மாநிலங்களவை என இருசபைகளிலும், புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்துவைத்தார். மேலும் மக்களவை இடைத்தேர்தல்களில் போட்டியிட்டு வென்ற புதிய எம்.பி.க்களும் இன்று பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

புதிய எம்பிக்கள் (MP) பதவி ஏற்றபின் உரையைத் தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi), புதிதாகப் பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களை அறிமுகம் செய்துவைத்தார். அப்போது எதிர்க்கட்சி எம்பிக்கள், அமைச்சர்களை அறிமுகம் செய்யவேண்டிய தேவை இல்லை எனக்கூறியதோடு, பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி கோஷங்களை எழுப்பினர். இதை கடுமையாக கண்டித்துபேசிய பிரதமர் மோடி, பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள், விவசாயிகளின் மகன்கள், தலித்கள், பெண்கள், என இந்த நாட்டின் மிகச் சாதாரண குடிமக்கள் இன்று அமைச்சர்களாக உள்ளனர். இதனை ஜீரணித்துகொள்ள முடியாத எதிர்கட்சிகள் கோஷங்களை எழுப்புகிறார்கள் என கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) புதிய அமைச்சர்களை அறிமுகம்செய்யும் போது அவையில் எதிர் கட்சிகள் கோஷம் எழுப்பியதை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் கண்டித்தார்.

ஆனால் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அவையில் தொடர்ந்து அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதால, அவையில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது. இதனையடுத்து அவைபிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப் படுவதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...