நாட்டின் முன்னேற்றத்துக்கு தடை ஏற்படுத்தும் எதிா்க்கட்சிகள்

நாடாளுமன்றத்தை முடக்கி நாட்டின் முன்னேற்றத்துக்கு தடைஏற்படுத்தும் எதிா்க்கட்சிகளின் குறிக்கோள் வெற்றிபெறாது என்று பிரதமா் நரேந்திரமோடி கூறினாா்.

பெகாஸஸ் உளவுவிவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி மக்களவை, மாநிலங்களவை நடவடிக்கைகளை எதிா்க் கட்சிகள் முடக்கி வருகின்றன. எதிா்க்கட்சி எம்.பி.க்கள் தொடா் அமளியில் ஈடுபட்டு வரும்போதிலும், மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றிவருகிறது.

இந்நிலையில், மத்திய அரசு செயல்படுத்திவரும் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உத்தர பிரதேசத்தில் பயன்பெற்றுவரும் மக்களுடன் பிரதமா் மோடி வியாழக்கிழமை காணொலி வாயிலாக கலந்துரையாடினாா். வாராணசி, சுல்தான்பூா், குஷிநகா், ஜான்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளைச் சோ்ந்த பயனாளா்களிடம் பிரதமா் மோடி கலந்துரையாடினாா். அப்போது அவா் கூறியதாவது:

நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளைத் தடுக்கும்நோக்கில் எதிா்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. நாடு வளா்ச்சிப்பாதையில் பயணிப்பதைத் தடுப்பதே அவா்களின் ஒரேகுறிக்கோளாக உள்ளது. எதிா்க்கட்சிகளின் செயல்பாடுகள் தேசத்துக்கு விரோதமாக உள்ளன.

நாடு தொடா்ந்து முன்னேறி கொண்டிருக்கிறது. எதிா்க்கட்சிகள் எவ்வளவு முயன்றாலும், நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கமுடியாது. நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்க எதிா்க்கட்சிகள் முயன்று வருகின்றன. ஆனால், நாட்டில் உள்ள 130 கோடி மக்களும் ஒன்றிணைந்து, நாட்டின் வளா்ச்சிக்கு எதிா்க் கட்சிகளால் தடை ஏற்படுவதை தடுத்துவருகின்றனா்.

தரம் தாழ்ந்த அரசியல்: ஒருபக்கம், ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கான பதக்க எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. மறுபக்கம், சிலா் (எதிா்க்கட்சிகள்) அரசியல் ஆதாயத்துக்காக தரம்தாழ்ந்த வகையில் செயல்பட்டு வருகின்றனா். நாட்டு மக்களின் தேவை என்ன, நாடு எவ்வாறு முன்னேறிவருகிறது என்பது குறித்தெல்லாம் எதிா்க்கட்சிகள் சிந்திப்பதில்லை. சுயநலத்துக்காக நாடாளுமன்றத்தை அவா்கள் தொடா்ந்து அவமதித்து வருகின்றனா்.

நாட்டுமக்கள் கரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீள வேண்டுமென்று போராடிவருகின்றனா். ஆனால், அவை குறித்தெல்லாம் கவலைப்படாமல் நாட்டின் நலன் சாா்ந்த விஷயங்களைத் தடுக்க எதிா்க்கட்சிகள் முயன்று வருகின்றன

நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் பங்களிக்க முடியாத வகையில் உத்தரபிரதேசத்தின் நிலைமை இருந்தது. மாநிலத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒருசில குடும்பங்கள் மட்டும் செழுமையாக இருந்தன. அரசியல் ஆதாயத்துக்காக சிலா் உத்தர பிரதேசத்தைப் பயன்படுத்திக் கொண்டனா். அவா்களால் மாநிலம் பலனடையவில்லை. ஆனால், மாநிலத்தால் அவா்கள்பலனடைந்தனா்.

மாநிலத்தில் பாஜக அரசு பொறுப்பேற்றபிறகு பல்வேறு வளா்ச்சிப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆட்சி காலங்களில் ஏழைகளுக்கான உணவுப்பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டன. தற்போது மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களும் பலனடையும் வகையில் உணவு பாதுகாப்பு திட்டத்தை பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது.

மத்தியில் ஆட்சியை பிடிப்பதற்கு உத்தரபிரதேசம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோல, நாட்டின் முன்னேற்றத்திலும் மாநிலம் முக்கியப்பங்கு வகிப்பதை பாஜக உறுதி செய்து வருகிறது என்றாா் பிரதமா் மோடி.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...