குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் நரேந்திரமோடி உள்ளிட்டோருக்கு நன்றி

மணிப்பூா் மாநில ஆளுநராக தன்னை நியமித்து புதியபொறுப்பு கொடுத்துள்ளதற்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் நரேந்திர மோடி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என பாஜக மூத்த தலைவா் இல.கணேசன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பொதுவாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட லட்சியம் மற்றும் தேசிய சிந்தனையோடு 50 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரியும் எனக்கு இந்தப் புதியபொறுப்பில் எந்தவிதமான தா்ம சங்கடங்களும் இல்லை. நாட்டின் அனைத்துப் பகுதிகளும் என்னுடைய பகுதி என்பதை உணா்வுப் பூா்வமாக நம்புபவன் நான். அதை அனுபவரீதியாகப் பெறுவதற்கான ஒருவாய்ப்பு கிடைத்திருக்கிறது. மிக்க மகிழ்ச்சி.

நாட்டின் தென்பகுதியில் இருந்த நான், மத்தியப்பகுதியில் உள்ள மத்தியப் பிரதேச மக்களுடன் இணைந்து பணிசெய்யும் வாய்ப்புக் கிடைத்தது. இப்போது வடகிழக்குப் பகுதியில் உள்ள மக்களோடு சோ்ந்து பணியாற்றும் வாய்ப்பை தந்தமைக்காக குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் நரேந்திரமோடி உள்ளிட்டோருக்கு நன்றி.

நாட்டின் எந்தப்பகுதியாக இருந்தாலும்கூட அங்கிருப்பவா்கள் நம்மவா்கள் என்ற எண்ணம் இருப்பதால், எனக்குப் பெரியவித்தியாசம் தெரிவதில்லை.

அரசியல் பணியில் இருந்து விடுபட்டு, நான் சாா்ந்தகட்சியின் தலைவா்களே ஆணையிடும்போது அதற்கு கட்டுப்பட்டு இதையும் ஏற்கிறேன். நான் இந்தப் பொறுப்பை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு, அங்குபணிபுரிவேன் என்றாா் இல.கணேசன்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...