குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் நரேந்திரமோடி உள்ளிட்டோருக்கு நன்றி

மணிப்பூா் மாநில ஆளுநராக தன்னை நியமித்து புதியபொறுப்பு கொடுத்துள்ளதற்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் நரேந்திர மோடி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என பாஜக மூத்த தலைவா் இல.கணேசன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பொதுவாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட லட்சியம் மற்றும் தேசிய சிந்தனையோடு 50 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரியும் எனக்கு இந்தப் புதியபொறுப்பில் எந்தவிதமான தா்ம சங்கடங்களும் இல்லை. நாட்டின் அனைத்துப் பகுதிகளும் என்னுடைய பகுதி என்பதை உணா்வுப் பூா்வமாக நம்புபவன் நான். அதை அனுபவரீதியாகப் பெறுவதற்கான ஒருவாய்ப்பு கிடைத்திருக்கிறது. மிக்க மகிழ்ச்சி.

நாட்டின் தென்பகுதியில் இருந்த நான், மத்தியப்பகுதியில் உள்ள மத்தியப் பிரதேச மக்களுடன் இணைந்து பணிசெய்யும் வாய்ப்புக் கிடைத்தது. இப்போது வடகிழக்குப் பகுதியில் உள்ள மக்களோடு சோ்ந்து பணியாற்றும் வாய்ப்பை தந்தமைக்காக குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் நரேந்திரமோடி உள்ளிட்டோருக்கு நன்றி.

நாட்டின் எந்தப்பகுதியாக இருந்தாலும்கூட அங்கிருப்பவா்கள் நம்மவா்கள் என்ற எண்ணம் இருப்பதால், எனக்குப் பெரியவித்தியாசம் தெரிவதில்லை.

அரசியல் பணியில் இருந்து விடுபட்டு, நான் சாா்ந்தகட்சியின் தலைவா்களே ஆணையிடும்போது அதற்கு கட்டுப்பட்டு இதையும் ஏற்கிறேன். நான் இந்தப் பொறுப்பை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு, அங்குபணிபுரிவேன் என்றாா் இல.கணேசன்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை பிரதமர் ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண்டாவது இடம் – பிரதமர் மோடி மகிழ்ச்சி செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்கள் ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது சம்பள கமிஷன் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 வது சம்பள கமிஷன் ...

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

மருத்துவ செய்திகள்

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...