தஞ்சாவூரில் அதுவும் ஒரேதெருவைச் சேர்ந்த இருவர் ஆளுநர்

தஞ்சாவூரிலிருந்து அதுவும் ஒரே தெருவைச் சேர்ந்த இருவர் பாஜகவால் ஆளுநராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்..இந்தியாவில் வேறு எங்கும் இதுபோல் இதுவரை நிகழ்ந்ததில்லை..இன்று மணிப்பூர் ஆளுநராக தேர்ந்தெடுக்கப் படுள்ள இல கணேசன் அவர்களின் சொந்த ஊர்(எங்கள்) தஞ்சாவூர். இவர் பிறந்து வளர்ந்து படித்தெல்லாம், இங்குள்ள நாணயக்கார செட்டி தெரு. இதே தெருவைச் சேர்ந்த இரண்டு நபர்கள் ஆளுநராகி உள்ளார்கள் என்பது சுவாரஸ்யமானது.

சில ஆண்டுகளுக்கு முன்பு மேகாலயா ஆளுநராக இருந்த சண்முகநாதனும் இதே தெருவைச் சேர்ந்தவர்தான்.இந்த இரண்டு பேருமே, தஞ்சை தெற்கு வீதியில் உள்ள வீரராகவா மேல்நிலைப்பள்ளியில் படித்தவர்கள்.

இவர்கள் இருவரோடும் இளம் வயதில் பழகிய பாஜக பிரமுகரான வி.எஸ். ராமலிங்கம் அவர்கள் இவர்கள் குறித்து கூறிய போது ”மேலாகாலய ஆளுநராக இருந்த சண்முகநாதன், இப்போது மணிப்பூர் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இல.கணேசன், இவங்க இரண்டு பேரோடு வீடுமே நாணயக்கார செட்டித் தெருவுலதான் இருந்துச்சு.

இல.கணேசனுக்கு ஐந்து சகோதரர்கள், மூன்று சகோதரிகள். அவரோட தந்தை, ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராரக இருந்தார். அவங்களோட குடும்பத்தினர், இதே பகுதியில் ஒரு புத்தக கடையும் நடத்திக்கிட்டு இருந்தாங்க. தஞ்சாவூர்ல அதுதான் முதல் புத்தக கடை. இல.கணேசன் சின்ன வயசாக இருக்கும்போதே, அவங்க அப்பா இறந்துட்டார். அண்ணன்கள் அரவணைப்புலதான் அவர் வளர்ந்தார்.

இல.கணேசனும், இதே பகுதியில் வசித்த, சண்முகநாதனும் சின்ன வயசுலயே ஆர்.எஸ்.எஸ்-ஸில் தீவிர ஈடுபாட்டுடன் இருப்பாங்க. அப்போ தஞ்சாவூர் சிவகங்கை பூங்காவில் ஆர்.எஸ்.எஸ் வகுப்புகள் நடக்கும். இவங்களோடு நானும் சேர்ந்து சைக்கிளை தள்ளிக்கிட்டே அந்த வகுப்புகளுக்கு போயிட்டு வருவேன்.

சாயங்கால நேரத்துல மேலவீதியில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலுக்கு போயி சாமி கும்பிட்டுட்டு வெளியில் உட்கார்ந்து பேசிக்கிட்டு இருப்போம். 1970-களின் தொடக்கத்தில் இவங்க இரண்டு பேருமே அடுத்தடுத்து ஆர்.எஸ்.எஸ் முழுநேர பிரசாரகராக ஆகிட்டாங்க. அதன் பிறகு இரண்டு பேருமே தஞ்சாவூரில் வசிக்கலைனாலும்கூட, அடிக்கடி இங்க வந்து போயிக்கிட்டு இருக்காங்க.

தஞ்சாவூரில் இருந்து, அதுவும் ஒரே பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர், ஆளுநர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது , வேறு எங்கும் நிகழ்ந்திக்க வாய்ப்பில்லை” என தெரிவித்துள்ளார்.
நானும் தஞ்சாவூர்காரன் என்பதால்..எங்கள் ஊர்காரர்கள் இருவரை ஆளுநராக நியமித்து தஞ்சைக்கு மேலும் பெருமை சேர்த்த மத்திய பாஜக அரசுக்கு நன்றி…! நன்றி!!

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கு முன் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ ? அண்ணாமலை சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வெளியே, ஆட்டோவில் ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி  ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி – அண்ணாமலை நமது குழந்தைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தி.மு.க., ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் : அண்ணாமலை திட்டவட்டம் திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் என தமிழக பா.ஜ., ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாம ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாமலை விமர்சனம் தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பயங்கரமான ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.