பாரதிய ஜனதா கட்சியின் சித்தாந்த தத்துவ சிற்பி

பண்டிட் தீனதயாள் உபாத்தியாய அவர்களின் பிறந்தநாள் செப்டம்பர் 25 ஆம் தேதி தமிழக பாரதிய ஜனதா கட்சியில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மண்டல் மற்றும் பூத்களில், பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் பண்டிட் தீனதயாள் உபாத்தியாய அவர்களின் திருவுருவப் படத்தை வைத்து, மலர் மரியாதைகள் செலுத்தி, பண்டிட் தீன்தயாள் அவர்களின் உயர்ந்த சிந்தனைகளைப் பற்றிப் பேச இருக்கிறார்கள்.

பாரதிய ஜனதா கட்சி இப்படிப்பட்ட சித்தாந்தங்களை ஆணித்தரமாக பின்பற்றும் கட்சி. கட்சியின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும், வாய் சொல்லுக்காக மட்டும் பயன்படுத்தாமல், உண்மையான வகையில் மக்களுக்காக பயன்படுத்தும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி.

அதனால்தான் சமூகநீதிக்கு இடம் கொடுக்காமல், ஜனநாயகத்திற்கு இடம் கொடுக்காமல், தமிழகத்தின் ஏனைய கட்சிகளில் இருப்பது போல, இந்தக் கட்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உயர்பதவிகளில் இருக்க முடியாது. குரூப்பிசம் என்று சொல்லப்படும் தனித்தனி குழுக்களான செயல்பாடுகள் பாஜகவில் சாத்தியமில்லை.

அப்படிப்பட்ட உயர்ந்த சித்தாந்தங்களை கட்டமைத்து தந்த பாரதிய ஜனதா கட்சியின் சித்தாந்த தத்துவ சிற்பியாக திகழ்பவர் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா.
டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி அவர்கள் 1951ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியைத் தொடங்கியபோது இரண்டே இரண்டு உபாத்தியாயக்கள் இருந்தால் போதும், இந்தியாவின் அரசியல் முகத்தை அடியோடு மாற்றி விடலாம் என்று பெருமிதத்துடன் கூறிய பெருமைக்குரியவர் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா.

”ஏகாத்ம மானவ தர்ஷன்”, என்பதே பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா அவர்களின் ஒருங்கிணைந்த மனிதநேய கோட்பாடு. அதன் அடிப்படை ஆதாரத்தை இந்திய ரிஷிகளும், முனிகளும் மனித குலத்துக்கு வழங்கிய பண்டைய ஞானத்திலிருந்து பெற்றுள்ளதாகவும் அது ஆதிசங்கரரின் அத்வைத கருத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது என்றும் அன்றைய காலகட்டத்தில் அனைவராலும் போற்றப்பட்ட கருத்தாக்கமாகும்.

கடவுளின் மிக உயர்ந்த படைப்பான மனிதன், முதலாளித்துவமும், சோசலிசமும், அதன் அமைப்பு முறைகளால் ஏற்படுத்தும் தாக்கத்தால், மனிதன் தன் சொந்த அடையாளத்தை இழக்கிறான். எனவே நாம் மனிதனை அவனுடைய சரியான நிலையில் மீண்டும் நிலைநிறுத்த வேண்டும். மனிதன் தன்னுடைய சிறப்பை உணருமாறு செய்யவேண்டும் அவன் உள்ளார்ந்த ஆளுமையின் சிறப்பான இடத்தை அடைவதற்கு மனிதனை ஊக்குவிக்க வேண்டும்.

பரவலாக்கப்பட்ட பொருளாதாரத்தின் மூலம் மட்டுமே இதை நிறைவேற்ற முடியும். ஆதலால் சுதேசி மற்றும் பரவலாக்கம் ஆகியன மட்டுமே தற்போதைய சூழலுக்கு ஏற்ற பொருளை பொருளாதாரக் கொள்கை என்று பண்டிட் தீனதயாள் உபாத்தியாய பரிந்துரைத்தார். தன் கருத்துக்களை எல்லாம் ராஷ்டிர தர்மா என்ற மாத இதழ் மூலமும், பாஞ்சஜன்யம் என்ற ஹிந்தி வார இதழ் மூலமும், சுதேசி என்ற நாளிதழ் மூலமும் அவர் எழுதி வெளியிட்டார்.
பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா அவர்கள் அறிவித்த தத்துவமான அந்தியோதயா… என்னும் இறுதி மனிதன் வரை முன்னேற்றுவோம் என்ற கோஷம் ‘பல்லாயிரக் கணக்கான மக்களின் வாழ்க்கைப் பாதையை மாற்றியுள்ளது.

பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் இந்தத் தத்துவத்தின் அடிப்படையிலேயே தன் திட்டங்களை எல்லாம் கடைக் கோடி மனிதனுக்கு கொண்டு செல்வதையே தன் வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு பாடுபடுகிறார். தன் வாழ்நாள் முழுவதும் கலாச்சாரத்தையும் தேசியத்தையும் இரு கண்களாகப் போற்றி வாழ்ந்த அவர், அந்தக் கொள்கைகளை பாதுகாக்கவே தன் உயிரை நாட்டுக்கு தியாகம் செய்தார்.

காந்தியடிகள் பேசிய சர்வோதயா (அனைவரின் முன்னேற்றம்), சுதேசி (இந்தியமயமாக்கல்), மற்றும் கிராம ஸ்வராஜ் (கிராம சுய ஆட்சி) போன்ற அனைத்து காந்திய சிந்தனைகளையும், அவருக்குப் பிறகு செயல் வடிவம் கொடுக்கப் பாடுபட்டவர் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா அவர்கள்.

பொருளாதார பலத்தால் உருவாக்கப்பட்ட சோஷியலிசமும், முதாளித்துவமும், நம் நாட்டிற்கு பொருந்தாது. மண்ணில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் இந்த மண்ணின் மகத்துவத்தோடு, இந்த மண்ணின் மரபுகளோடு, இந்த மண்ணின் தனித்தன்மைகளோடு மண்ணின் இறைநம்பிக்கைகளோடு இயற்கையாக வளர்வதே காலங்காலமாக நடைபெற்று வருகிறது. இதுவே இந்திய நாட்டிற்கு ஏற்ற தத்துவம் என்று செப்பிய செம்மல் பண்டிட் தீனதயாள் அவர்கள் .

பாரதிய ஜனதா கட்சியின் வணிகப் பிரிவு சேர்ந்த நிர்வாகிகள் வியாபார நிறுவனங்களிலும் தொழிற்சாலைகளிலும் கடைகளிலும் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா அவர்களின் திருவுருவப் படத்தை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். மகிழ்ச்சி. படங்கள் செல்லட்டும். ஆனால் பண்டிட் தீனதயாள் அவர்களின் படங்களைக் கொண்டு சேர்ப்பது போல் அவரின் பாடங்களையும் கொண்டு சேருங்கள்.
அன்புச் சகோதரன்
உங்க “அண்ணா”

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...