கொஞ்சமேனும் துணிவிருந்தால் காங்கிரஸ் தனியாக நிற்கலாமே

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட 13 கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இன்னொரு புறம் அதிமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் குழுவாகப் போட்டியிட்டனர். இவ்விரு கட்சிகளையும் கூட்டணி பலத்தை நம்பாமல் தன்னந்தனியாக களம்கண்டு தமிழகம் முழுவதும் பரவலான வெற்றிகளையும், கணிசமான வாக்குப் பதிவுகளையும், பெற்று, பாரதிய ஜனதா கட்சி மூன்றாவது மிகப் பெரிய கட்சியாக முன்னேறி இருக்கிறது. தமிழக ஊடகங்களும் முக வலைதளங்களும் தமிழக மக்களும் பாஜகவின் இந்த வெற்றியைப் பல கோணங்களில் பதிவு செய்திருக்கிறார்கள்.

இதுபற்றிய மகிழ்ச்சியை, எம் ஆதரவாளர்களுடனும், தொண்டர்களுடனும், பகிர்ந்து கொண்டபோது தமிழகத்தின் மூன்றாவது மிகப் பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்து இருப்பதைச் சுட்டிக்காட்டி பேசினேன். இதைக் கேட்ட தமிழக காங்கிரஸ் தலைவர் அவர்கள், மூன்றாவது கட்சி தாங்கள்தான் என்று வெகுண்டெழுந்து இருக்கிறார்; காங்கிரசோடு ஒப்பிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
முதலில் தமிழக காங்கிரஸ் தலைவர் திரு கே எஸ் அழகிரி அவர்கள், பகல் கனவு காண்பதை நிறுத்திக் கொள்ளட்டும். அதிலும் அவர் இன்னும் அந்தக்கால காங்கிரஸ் பற்றிய, பழைய நாட்களின் ஞாபகத்தில் இருந்து கொண்டிருக்கிறார். பெருமைக்குரிய பாரதிய ஜனதா கட்சியை, எப்போதும் எந்த நிலையிலும், நான் காங்கிரஸோடு ஒப்புநோக்கியது இல்லை. அதற்கான அருகதையும், தகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு இருப்பதாக நான் ஒருபோதும் நினைத்ததில்லை.

தியாகத்தால் உருவான பாஜக, உயர்ந்த எண்ணம், சித்தாந்தத்தின் அடிப்படையில் உருவான அமைப்பு. இதைப் பரம்பரை முதலாளிகளால் நடத்தப்படும், வணிக நிறுவனமான காங்கிரஸுடன் நான் எப்படி ஒப்பீடு செய்ய முடியும்.

இரண்டாவதாக, பாரதிய ஜனதா கட்சி பெற்ற ஓட்டு சதவீதத்தை, ஒரு சதவீதத்திற்கும் குறைவாகக் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார். உங்கள் கட்சியில் கணிதம் தெரிந்த யாராவது இருந்தால் அவரைவிட்டு நீங்கள் பாரதிய ஜனதா கட்சி பெற்ற உண்மையான வாக்கு சதவீதத்தைக் கொஞ்சம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இல்லையேல், எதிரியின் பலம் என்னவென்று தெரியாமல் தோற்கும் நிலை உங்களுக்கு ஏற்பட்டுவிடும்.

அடுத்ததாக, திமுக தலைமையில் ஏற்பட்டுள்ள ஒரு மெகா கூட்டணியில், 13 கட்சிகளில் ஒரு கட்சியாக இருக்கும் அனுமதியை, தங்களுக்கு திமுக வழங்கியிருக்கிறது. 13 கூட்டணிக் கட்சிகளின் பலத்திலே, தாங்கள் பெற்ற இந்த வெற்றியை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? உங்கள் தனிப்பட்ட வெற்றி என்றா? தங்களுக்கு கொஞ்சமேனும் துணிவிருந்தால் எங்களைப்போல தனியாகக் களம் காண முடியுமா? உங்களுக்கு வாக்காளர்கள் கிடைப்பார்களா? என்பதைவிட வேட்பாளர்கள் கிடைப்பார்களா? என்பதுதான் மிகப் பெரிய சவாலாக இருக்கும். உங்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கழுத்தைப் பிடித்துத் தெருவில் தள்ளிய திமுகவின் காலடிச் சுவட்டில் மண்டியிட்டு அமர்ந்து கொண்டு விட்டோம் என்ற துணிவில் பேசி இருக்கிறீர்கள். தங்கள் பெற்றிருப்பது, மக்களிடம் வெற்றியல்ல. திமுகவிடம் இருந்து ”ஈ” என இரந்து பெற்ற உங்கள் வெற்றிக்கு, உங்களுக்கு இறுமாப்பு எப்படி வருகிறது? காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் பதவி சுகத்துக்காக கட்சி மாறி, கட்சி மாறி கூட்டணி வைத்து, தமிழகத்தில் காங்கிரஸ் இருக்கும் இடம் இல்லாமல் செய்த சாதனைக்கு மட்டும்தான் நீங்கள் சொந்தக்காரர்கள். மானமுள்ள எந்த உண்மையான காங்கிரஸ் தொண்டனும், கட்சியை வளர்க்க தனியாக போட்டியிடுவதை மட்டும்தான் விரும்புவான்.

ஆக, ஒட்டுண்ணியாக, சாறுண்ணியாக தாங்கள் ”ஈ” என இரந்து பெற்ற வெற்றியை, எங்கள் உண்மைத் தொண்டர்களின் மானத்தை மதித்து, உழைப்பை மதித்து, பணபலம் இல்லாமல், நேர்மையாக மக்களைச் சந்தித்த எங்கள் வெற்றியுடன், நான் ஒருபோதும் ஒப்பிட மாட்டேன். தாங்கள் ஒப்புக் கொண்டாலும், ஒப்புக் கொள்ளாவிட்டாலும், இப்போதைக்குத் தமிழகத்தின் மூன்றாவது மிகப்பெரிய கட்சி பாரதிய ஜனதா கட்சியாகிய நாங்களே.

நன்றி அண்ணாமலை
பாஜக மாநில தலைவர்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...