மாற்றுத்திறனாளிகளை பள்ளியில் சேர்க்கும் உ.பி. ஆசிரியைக்கு பிரதமர் பாராட்டு

மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியரை தேடிகண்டுபிடித்து பள்ளியில் சேர்க்கும் உத்தரபிரதேச ஆசிரியையை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி உள்ளார்.

பிரதமரின் மனதின்குரல் வானொலி உரை நேற்று முன்தினம் ஒலிபரப்பானது. அப்போது உத்தரபிரதேசத்தின் பரேலியை சேர்ந்த ஆசிரியைக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.

‘‘உத்தரபிரதேசத்தில் ‘ஓர் ஆசிரியர், ஓர் அழைப்பு’ என்ற உன்னத இயக்கத்தை பரேலியின் டபோரா கங்காபூர் பள்ளித்தலைமை ஆசிரியை தீப்மாலா பாண்டே தலைமையேற்று நடத்தி வருகிறார். இந்த இயக்கத்தில் 350-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியைகள் இணைந்துள்ளனர்.

இவர்கள் சேவையுள்ளத்தோடு கிராமந்தோறும் சென்று மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியரை தேடிஅலைகின்றனர். அவர்களை ஏதாவது ஓருபள்ளியில் சேர்த்து விடுகின்றனர். மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்விக்காக பாடுபடும் தீப்மாலாவுக்கும் அவருடன் இணைந்திருக்கும் ஆசிரியர்களுக்கும் மனம்திறந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று பிரதமர் கூறினார்.

இதுகுறித்து ஆசிரியை தீப்மாலா பாண்டே (38) கூறியதாவது:

கடந்த 2018-ம் ஆண்டில் அன்மோல் என்ற செவித்திறன் குறைந்த மாணவனை எங்கள்பள்ளியில் சேர்த்தேன். அந்த மாணவனின் கல்வி ஆர்வம் என்னை பிரம்மிக்கவைத்தது. அப்போதுமுதல் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்விக்காக தன்னலமின்றி சேவையாற்றிவருகிறேன்.

கடந்த 4 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியரை கண்டறிந்து அவர்களை பள்ளி களில் சேர்த்து வருகிறேன். என்னுடைய சேவையை பார்த்து மாநிலம்முழுவதும் 350-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் என் னோடு இணைந்துள்ளனர். இதுவரை 600-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்துள்ளோம்.

கரோனா ஊரடங்கின் போது எங்கள் இயக்கத்துக்கு ‘ஓர் ஆசிரியர், ஓர் அழைப்பு’ என்று பெயர் சூட்டினோம். என்னோடு இணைந்துள்ள ஆசிரியர்கள் மாதம் ஒருமுறை ஒன்றுகூடி மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்வி திட்டங்கள் குறித்து ஆலோசிக்கிறோம். அவர்களுக்காக ஆன்லைன் வகுப்புகளை நடத்துகிறோம்.கருத்தரங்குகள், சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.

என்னையும் என்னோடு இணைந்துள்ள ஆசிரியர்களையும் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு நன்றியை உரித்தாக்குகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...