மாற்றுத்திறனாளிகளை பள்ளியில் சேர்க்கும் உ.பி. ஆசிரியைக்கு பிரதமர் பாராட்டு

மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியரை தேடிகண்டுபிடித்து பள்ளியில் சேர்க்கும் உத்தரபிரதேச ஆசிரியையை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி உள்ளார்.

பிரதமரின் மனதின்குரல் வானொலி உரை நேற்று முன்தினம் ஒலிபரப்பானது. அப்போது உத்தரபிரதேசத்தின் பரேலியை சேர்ந்த ஆசிரியைக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.

‘‘உத்தரபிரதேசத்தில் ‘ஓர் ஆசிரியர், ஓர் அழைப்பு’ என்ற உன்னத இயக்கத்தை பரேலியின் டபோரா கங்காபூர் பள்ளித்தலைமை ஆசிரியை தீப்மாலா பாண்டே தலைமையேற்று நடத்தி வருகிறார். இந்த இயக்கத்தில் 350-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியைகள் இணைந்துள்ளனர்.

இவர்கள் சேவையுள்ளத்தோடு கிராமந்தோறும் சென்று மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியரை தேடிஅலைகின்றனர். அவர்களை ஏதாவது ஓருபள்ளியில் சேர்த்து விடுகின்றனர். மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்விக்காக பாடுபடும் தீப்மாலாவுக்கும் அவருடன் இணைந்திருக்கும் ஆசிரியர்களுக்கும் மனம்திறந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று பிரதமர் கூறினார்.

இதுகுறித்து ஆசிரியை தீப்மாலா பாண்டே (38) கூறியதாவது:

கடந்த 2018-ம் ஆண்டில் அன்மோல் என்ற செவித்திறன் குறைந்த மாணவனை எங்கள்பள்ளியில் சேர்த்தேன். அந்த மாணவனின் கல்வி ஆர்வம் என்னை பிரம்மிக்கவைத்தது. அப்போதுமுதல் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்விக்காக தன்னலமின்றி சேவையாற்றிவருகிறேன்.

கடந்த 4 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியரை கண்டறிந்து அவர்களை பள்ளி களில் சேர்த்து வருகிறேன். என்னுடைய சேவையை பார்த்து மாநிலம்முழுவதும் 350-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் என் னோடு இணைந்துள்ளனர். இதுவரை 600-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்துள்ளோம்.

கரோனா ஊரடங்கின் போது எங்கள் இயக்கத்துக்கு ‘ஓர் ஆசிரியர், ஓர் அழைப்பு’ என்று பெயர் சூட்டினோம். என்னோடு இணைந்துள்ள ஆசிரியர்கள் மாதம் ஒருமுறை ஒன்றுகூடி மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்வி திட்டங்கள் குறித்து ஆலோசிக்கிறோம். அவர்களுக்காக ஆன்லைன் வகுப்புகளை நடத்துகிறோம்.கருத்தரங்குகள், சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.

என்னையும் என்னோடு இணைந்துள்ள ஆசிரியர்களையும் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு நன்றியை உரித்தாக்குகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...