‘இசொத்து’ அட்டைகளை வழங்கிய பிரதமர்

மத்திய பிரதேசத்தில் ‘ஸ்வமித்வா’ திட்டத்தின்கீழ், லட்சத்துக்கும் அதிகமான பயனாளியருக்கு, ‘இசொத்து’ அட்டைகளை பிரதமர் மோடி, ‘வீடியோகான்பரன்ஸ்’ வழியாக நேற்று வழங்கினார்.

மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சகம் சார்பில் ஸ்வமித்வா திட்டம் செயல்படுத்தப் படுகிறது. இது கிராமப்பகுதிகளில் வாழ்பவர்களுக்கு சொத்துரிமை வழங்குவதை நோக்கமாக கொண்டது.நகர்ப்புறங்களில் உள்ளதுபோல, கிராமத்தில் வசிப்பவர்கள் கடன்பெறுவதற்கும், இதர நிதிப் பயன்களுக்கும், நிதிச் சொத்தாக நிலத்தை பயன் படுத்தவும் இந்தத்திட்டம் வழிவகுக்கிறது.’ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா குட்டிவிமானம் வாயிலாக, கிராமப்பகுதிகளில் நிலங்களை அளவிட்டு, மறுவரையறை செய்வதையும், இதுநோக்கமாகக் கொண்டது. நாட்டில் ட்ரோன் தயாரிப்பிற்கான சூழலையும் இத்திட்டம் ஊக்கப் படுத்துகிறது.

இந்நிலையில், முதல்வர் சிவராஜ்சிங் சவுஹான் தலைமையிலான பா.ஜ., ஆட்சிநடக்கும் மத்திய பிரதேசத்தில் ஸ்வமித்வா திட்டத்தின் கீழ், ௧.௭௧ லட்சத்துக்கும் அதிகமான பயனாளியருக்கு, இசொத்து அட்டைகளை பிரதமர் மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியாக நேற்றுவழங்கினார்.அப்போது பயனாளியருடன் பிரதமர் மோடி பேசியதாவது:கிராமங்களில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் ஒருவரலாற்று சிறப்புமிக்க திட்டம் இது.

இத்திட்டத்தின் வாயிலாக நாடுமுழுதும் அனைத்து வீடுகளுக்கும் உரிய ஆவணம் கிடைப்பதை உறுதி செய்வோம். இதுவெறும் சொத்து ஆவணம் வழங்கும் திட்டம் மட்டுமல்லாமல், கிராம மக்களிடம் நம்பிக்கையை அதிகரிக்கும் திட்டமாகவும் உள்ளது. நாட்டில் ட்ரோன் பயன்படுத்த விதிக்கப்பட்டு இருந்த பலகட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால், விவசாயிகள், தொலைதுார பகுதிகளில்வசிப்பவர்கள் பெரும்பலன் அடைந்து உள்ளனர். இவ்வாறு பிரதமர் பேசினார். நிகழ்ச்சியில் ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...