“ஒரே சுகாதாரம்” உலகின் குருவாகும் பாரதம்

சமீபத்தில் இத்தாலியில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில்  பாரத பிரதமர் நரேந்திர மோடி “ஒரே பூமி ஒரே சுகாதாரம் “(ஆரோக்கியம்) என்பதை வலியுறுத்தி பேசியுள்ளார்.  இதை அவர் கடந்த  ஜூலை மாதம்  நடைபெற்ற ஜி 7 மாநாட்டிலும் வலியுறுத்தியிருந்தார்.

வசுதேவ குடும்பம் (உலகமே ஒரே குடும்பம்) என்பதே இந்த மண்ணின் பண்பாடு, கலாச்சாரம். அதற்காக இந்த தேசம் தன் எல்லையை என்றும் விரிவுபடுத்தயதும் இல்லை. அந்நிய தேசத்தின் மீது ஆதிக்கம் செலுத்தியதும்  இல்லை. மாறாக உலக நன்மைகளை பற்றி மட்டுமே சிந்தித்துள்ளது. எனவே அந்த பண்பாட்டினில் இருந்து வந்த பிரதமரின் பேச்சினில் எந்த வியப்பேதும் இல்லை.

கொரோன கொடிய நோய் தொற்று காலத்தில், உலகநாடுகள் தங்களை பற்றி மட்டுமே சிந்தித்த நிலையில், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் தங்கள் தொழில்நுட்பங்களை, நோய் தடுப்பு சாதனங்களை, தடுப்பூசிகளை   வணிக மயமாக்க எத்தனித்த  நிலையில், இந்தியா  மட்டுமே உலக நன்மைக்காக யோசித்தது. அது கொரோனா தடுப்பூசி மீதான  காப்புரிமையை  உலக வர்த்தக மையம்கைவிட்டதாக இருக்கட்டும்,  சொந்த நாட்டினில் தடுப்பூசிக்கான பற்றாக்குறை இருந்த போதிலும் அதை உலகுக்கும் கிடைக்க செய்ததாக இருக்கட்டும்.  மேலும் 500 கோடி தடுப்பூசிகளை உலகுக்கு  ஏற்றுமதி செய்வோம் என்று சமீபத்திலும் முழங்கியதாக இருக்கட்டும்  என்று உதாரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்.

தடுப்பூசிக்கான காப்புரிமை கைவிடப்படுமே என்றால் அது மிக மலிவான ஒன்றாக மாறிவிடும்.  பாரதம் உரிய நேரத்தில் தடுப்பூசியை ஏற்றுமதி செய்ததினால் உலகின் பல ஏழை நாடுகளில்  முன்கள பணியாளர்கள் நோய்தடுப்பு கவசத்தை பெற்று மக்களை காத்துள்ளார்கள்.

மேலும் அக்டோபர் 02- 2014ஆம் ஆண்டு  பிரதமர் நரேந்திர மோடி சுகாதாரமான இந்தியா என்றார், இன்று “ஒரே பூமி, ஒரே சுகாதாரம்” என்கிறார். சுகாதாரமான இந்தியா பொது இடங்களில் குப்பைகளை அகற்றுவதை பற்றி மட்டுமே பேசவில்லை , அது பிளாஸ்டிக் குப்பைகளை ஒழித்து, மக்கும் குப்பைகளுக்கு ஊக்கம் தருகிறது, நீர் நிலைகளில் கழிவுகள் கலப்பதை தடுத்து வருகிறது. நாட்டுக்கு 11 கோடி கழிப்பறைகளை தந்து நாட்டில் திறந்த வெளி கழிப்பறைகளே இல்லாத நிலையை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் பல்வேறு தொற்று நோய்கள்  கட்டுப்படுத்த பட்டுள்ளது.

அதேபோன்று “ஒரே சுகாதாரம்” என்ற திட்டத்தை பாரதம் உலகுக்கு முன்னெடுக்கும். இதன் மூலம் ஏழை நாடுகளின் ஆரோக்கியம் மட்டுமல்ல, காடுகள் அழிப்பை கட்டுப்படுத்தி, மரபு சாரா எரி சத்திக்கு முன்னோடியாக இருந்து. இதன் மூலம் உலகின் குருவாகவே பாரதம் மாறும். அந்த காலம்  வெகுதூரத்திலும் இல்லை.

தமிழ்தாமரை விஎம் வெங்கடேஷ் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

துருப்பிடித்த இரும்புக்கரத்தை ...

துருப்பிடித்த இரும்புக்கரத்தை பழுது பார்க்கணும்: நயினார் நாகேந்திரன் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளுக்கு பயம் ஏற்படும் ...

நிமிடங்களில் பாக், விமானப்படை த ...

நிமிடங்களில் பாக், விமானப்படை தளங்கள் அழித்ததே இந்தியாவின் பலம்: பிரதமர் மோடி பெருமிதம் சில நிமிடங்களில் பாகிஸ்தான் விமானப்படை தளங்களை அழித்தோம், இதுவே ...

பேச்சுவார்த்தைக்கான பாக்., பிரத ...

பேச்சுவார்த்தைக்கான பாக்., பிரதமரின் விருப்பத்தை நிராகரித்தது இந்தியா பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியான மற்றும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்தால் ...

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் வி� ...

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசம் வரும்: ராஜ்நாத் சிங் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவிடம் திரும்பும் நாள் வெகு ...

மருத்துவ செய்திகள்

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...