“ஒரே சுகாதாரம்” உலகின் குருவாகும் பாரதம்

சமீபத்தில் இத்தாலியில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில்  பாரத பிரதமர் நரேந்திர மோடி “ஒரே பூமி ஒரே சுகாதாரம் “(ஆரோக்கியம்) என்பதை வலியுறுத்தி பேசியுள்ளார்.  இதை அவர் கடந்த  ஜூலை மாதம்  நடைபெற்ற ஜி 7 மாநாட்டிலும் வலியுறுத்தியிருந்தார்.

வசுதேவ குடும்பம் (உலகமே ஒரே குடும்பம்) என்பதே இந்த மண்ணின் பண்பாடு, கலாச்சாரம். அதற்காக இந்த தேசம் தன் எல்லையை என்றும் விரிவுபடுத்தயதும் இல்லை. அந்நிய தேசத்தின் மீது ஆதிக்கம் செலுத்தியதும்  இல்லை. மாறாக உலக நன்மைகளை பற்றி மட்டுமே சிந்தித்துள்ளது. எனவே அந்த பண்பாட்டினில் இருந்து வந்த பிரதமரின் பேச்சினில் எந்த வியப்பேதும் இல்லை.

கொரோன கொடிய நோய் தொற்று காலத்தில், உலகநாடுகள் தங்களை பற்றி மட்டுமே சிந்தித்த நிலையில், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் தங்கள் தொழில்நுட்பங்களை, நோய் தடுப்பு சாதனங்களை, தடுப்பூசிகளை   வணிக மயமாக்க எத்தனித்த  நிலையில், இந்தியா  மட்டுமே உலக நன்மைக்காக யோசித்தது. அது கொரோனா தடுப்பூசி மீதான  காப்புரிமையை  உலக வர்த்தக மையம்கைவிட்டதாக இருக்கட்டும்,  சொந்த நாட்டினில் தடுப்பூசிக்கான பற்றாக்குறை இருந்த போதிலும் அதை உலகுக்கும் கிடைக்க செய்ததாக இருக்கட்டும்.  மேலும் 500 கோடி தடுப்பூசிகளை உலகுக்கு  ஏற்றுமதி செய்வோம் என்று சமீபத்திலும் முழங்கியதாக இருக்கட்டும்  என்று உதாரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்.

தடுப்பூசிக்கான காப்புரிமை கைவிடப்படுமே என்றால் அது மிக மலிவான ஒன்றாக மாறிவிடும்.  பாரதம் உரிய நேரத்தில் தடுப்பூசியை ஏற்றுமதி செய்ததினால் உலகின் பல ஏழை நாடுகளில்  முன்கள பணியாளர்கள் நோய்தடுப்பு கவசத்தை பெற்று மக்களை காத்துள்ளார்கள்.

மேலும் அக்டோபர் 02- 2014ஆம் ஆண்டு  பிரதமர் நரேந்திர மோடி சுகாதாரமான இந்தியா என்றார், இன்று “ஒரே பூமி, ஒரே சுகாதாரம்” என்கிறார். சுகாதாரமான இந்தியா பொது இடங்களில் குப்பைகளை அகற்றுவதை பற்றி மட்டுமே பேசவில்லை , அது பிளாஸ்டிக் குப்பைகளை ஒழித்து, மக்கும் குப்பைகளுக்கு ஊக்கம் தருகிறது, நீர் நிலைகளில் கழிவுகள் கலப்பதை தடுத்து வருகிறது. நாட்டுக்கு 11 கோடி கழிப்பறைகளை தந்து நாட்டில் திறந்த வெளி கழிப்பறைகளே இல்லாத நிலையை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் பல்வேறு தொற்று நோய்கள்  கட்டுப்படுத்த பட்டுள்ளது.

அதேபோன்று “ஒரே சுகாதாரம்” என்ற திட்டத்தை பாரதம் உலகுக்கு முன்னெடுக்கும். இதன் மூலம் ஏழை நாடுகளின் ஆரோக்கியம் மட்டுமல்ல, காடுகள் அழிப்பை கட்டுப்படுத்தி, மரபு சாரா எரி சத்திக்கு முன்னோடியாக இருந்து. இதன் மூலம் உலகின் குருவாகவே பாரதம் மாறும். அந்த காலம்  வெகுதூரத்திலும் இல்லை.

தமிழ்தாமரை விஎம் வெங்கடேஷ் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...