வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி

”நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் வளர்ந்த நாடாக உருவெடுப் போம்,” என, பிரதமர் மோடி தெரிவித்தார்.

டில்லியில் நடந்த வளர்ந்த பாரதத்தின் இளம் தலைவர்களின் கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:

நாம் வளர்ந்த பாரதமாக உருவெடுக்க வேண்டும் என்ற இலக்கு சிலருக்கு கடினமானதாக தெரிய லாம்; ஆனால், அது சாத்தியமற்றது அல்ல.

நம் இளம் தலைமுறையின் எண்ணிக்கையையும், பலத்தையும் வைத்து பார்க்கும்போது, நம் நாடு வளர்ந்த பாரதமாக உருவெடுப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

ஒரு நாடு முன்னேற, பெரிய இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். அதை தான் நாம் இப்போது செய்து கொண்டிருக்கிறோம்.

பெட்ரோலில் எத்தனால் கலப்பை, 2030க்குள் 20 சதவீதமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னரே நாம் அதை அடைந்து விடுவோம். அரசால் மட்டுமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது.

இளைஞர்களும் அதில் பங்களிக்க வேண்டும். ‘வளர்ந்த பாரதம்’ என்ற இலக்கு, மோடிக்கு மட்டும் சொந்தமானது அல்ல; இளைஞர்களும் அதில் பங்கேற்க வேண்டும். லட்சிய இலக்குகளை அடைவதற்கு, தேசத்தின் ஒவ்வொரு குடிமகனின் தீவிர பங்கேற்பும், கூட்டு முயற்சியும் தேவை.

வரும் 2047 வரையிலான அடுத்த 25 ஆண்டுகள் அமிர்த காலம்.

இந்த கால கட்டத்தில் வளர்ந்த பாரதம் என்ற கனவை, நம் இளைய தலைமுறையினர் நிறைவேற்றுவர் என்ற நம்பிக்கை உள்ளது.

‘எல்லா பிரச்னைகளுக்கும் இளைஞர்களிடம் தீர்வு இருக்கும்’ என, சுவாமி விவேகானந்தர் நம்பினார். அந்த கருத்தில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப் ...

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப்பு – பிரதமர் மோடி நெகிழ்ச்சி 'வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்த ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்டு ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் ப ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு வாஷிங்டன் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந் ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந்தியா- தாய்லாந்து உறவு -பிரதமர் மோடி 'இந்தியாவும், தாய்லாந்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற இந்தியா – பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு தன்னிறைவு அடைந்து ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரச ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை – நிர்மலா சீதாராமன் ''பா.ஜ., ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...