வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி

”நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் வளர்ந்த நாடாக உருவெடுப் போம்,” என, பிரதமர் மோடி தெரிவித்தார்.

டில்லியில் நடந்த வளர்ந்த பாரதத்தின் இளம் தலைவர்களின் கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:

நாம் வளர்ந்த பாரதமாக உருவெடுக்க வேண்டும் என்ற இலக்கு சிலருக்கு கடினமானதாக தெரிய லாம்; ஆனால், அது சாத்தியமற்றது அல்ல.

நம் இளம் தலைமுறையின் எண்ணிக்கையையும், பலத்தையும் வைத்து பார்க்கும்போது, நம் நாடு வளர்ந்த பாரதமாக உருவெடுப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

ஒரு நாடு முன்னேற, பெரிய இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். அதை தான் நாம் இப்போது செய்து கொண்டிருக்கிறோம்.

பெட்ரோலில் எத்தனால் கலப்பை, 2030க்குள் 20 சதவீதமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னரே நாம் அதை அடைந்து விடுவோம். அரசால் மட்டுமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது.

இளைஞர்களும் அதில் பங்களிக்க வேண்டும். ‘வளர்ந்த பாரதம்’ என்ற இலக்கு, மோடிக்கு மட்டும் சொந்தமானது அல்ல; இளைஞர்களும் அதில் பங்கேற்க வேண்டும். லட்சிய இலக்குகளை அடைவதற்கு, தேசத்தின் ஒவ்வொரு குடிமகனின் தீவிர பங்கேற்பும், கூட்டு முயற்சியும் தேவை.

வரும் 2047 வரையிலான அடுத்த 25 ஆண்டுகள் அமிர்த காலம்.

இந்த கால கட்டத்தில் வளர்ந்த பாரதம் என்ற கனவை, நம் இளைய தலைமுறையினர் நிறைவேற்றுவர் என்ற நம்பிக்கை உள்ளது.

‘எல்லா பிரச்னைகளுக்கும் இளைஞர்களிடம் தீர்வு இருக்கும்’ என, சுவாமி விவேகானந்தர் நம்பினார். அந்த கருத்தில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...