திராவிடகட்சிகளின் பொய்களை பொடிப்பொடியாக்கும் NEET முடிவுகள்

*திராவிடகட்சிகளின் பொய்களை பொடிப்பொடியாக்கும் NEET முடிவுகள்:*

மேடைகளில், தொலை காட்சி. விவாதங்களில் , ராஜன்குழு அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகளில் *தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் பொய்களை பொடி பொடியாக்கியிருக்கிறது சமீபத்தில் வெளியான நீட்முடிவுகள்.*

பொய்# 1:
நீட் சிபிஎஸ்சி மாணவர்களுக்கு சாதகமானது?.

முடிவுகள்சொல்லும் உண்மை:

*இந்தாண்டு நீட்தேர்வில் தகுதி பெற்றவர்களில் 66.5 சதவீதம் பேர் பல்வேறு 22 மாநிலபோர்ட்களில் படித்தவர்கள்.*

பொய்# 2:

அரசுப்பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றிபெறுவது கடினம்.

முடிவுகள் சொல்லும் உண்மை:

*திருச்சியில் மட்டும், அரசுநடத்திய பயிற்சி வகுப்புகளில் பங்கேற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் 62 பேர் இந்த ஆண்டு நீட்தேர்வில் தகுதி பெற்றிருக்கின்றனர்.*

பொய்#3

அரசுப்பள்ளி மாணவர்கள் முதல் முறையில் நீட்தேர்வில் தகுதி பெற முடியாது. முடிவுகள் சொல்லும் உண்மை: *அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் முதலிடம் பிடித்துள்ள மூவருமே முதல் முறையாகத் தேர்வு எழுதியவர்கள்.* பி.ஆர். பிரியங்கா (அவ்வை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மதிப்பெண் 414).
ஹரீஷ் குமார் (ஏழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி- மதிப்பெண்: 373)
எஸ். ஆஷிகா (ஈ.வெ.ரா. நாகம்மையார் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி- மதிப்பெண் 351)

*ஆகிய மூவரும் முதலிடம் பிடித்தவர்கள்.* *மூவருமே முதல்முறையாகத் தேர்வு எழுதியவர்கள்.*

பொய்#4

கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது நீட்தேர்வு. முடிவுகள்சொல்லும் உண்மை: கோவை மாவட்டத்தில் உள்ள நஞ்சப்பனூர் என்ற கிராமத்தில் +2 தேறியபெண் எம். சங்கவி. *பழங்குடி இனத்தைசேர்ந்தவர். அவர் இந்தாண்டு 202 மதிப்பெண்கள் பெற்று தகுதிபெற்றுள்ளார்.* அரசு மருத்துவ கல்லூரிகள் ஏதேனும் ஒன்றில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு விவசாயக்கூலியான தன் தந்தையை இழந்த இளம் பெண் இவர்.

பொய்# 5:

தமிழக மாணவர்களுக்கு நீட்தேர்வு கடினமானது.

முடிவுகள் சொல்லும் உண்மை: *கடந்த ஆண்டை விட இந்தஆண்டு அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.*

*கடந்த ஆண்டு : 57 216.*
*இந்த ஆண்டு: 58,922*

அனைவரும் அறியவேண்டியது:

*முனைப்போடு உழைத்தால் எவரும் நீட்டில் தகுதி பெறலாம்.*

செய்ய வேண்டியது: #1

நீதிமன்றத்தில் இந்ததரவுகளை எடுத்து வைத்து நீட் எவருக்கும் எதிரானது அல்ல என்று நிறுவவேண்டும்.

#2 *இந்த உண்மைகளை மாணவர்களுக்கு, குறிப்பாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள், தன்னார்வ தொண்டர்கள் நம்பிக்கை ஊட்டவேண்டும்.*

செய்வார்களா?

இந்த முடிவுகள் குறித்து நம் தொலைக் காட்சிகள் அலசுவார்களா?

*சகோதரர்களே!!!*
*நாம் இந்த உண்மையை தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கொண்டுசென்று சேர்க்கவேண்டும்* .🙏🙏
நன்றி……

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...